Wednesday, February 10, 2010

நம்பிக்கையோடு காத்திருக்கும்....


பூங்காவின் ஓரத்தில்
பாப்பா நான்மட்டும் தனியாக ...

அங்கே...
தூரத்தில் தம்பியோடு
விளையாடிக்
கொண்டிருக்கிறார்கள்
அம்மாவும், அப்பாவும்.....

இங்கே....
எனக்குத் துணையாக....
என்றோ போட்ட
ரொட்டித் துண்டுக்காக
இங்கு நான்
வரும்போதெல்லாம்
என்னை ஏதோவொரு
நம்பிக்கையில்
சுற்றிவரும்
குட்டி நாயொன்று
இன்றும் என்னருகில்
என்முகம் பார்த்து
எதிர்பார்ப்போடு....

அங்கே....
அதே நம்பிக்கையில்
தம்பியோடு ..........

இங்கே...
நான் மட்டும் தனியாக ...

2 comments:

settaikkaran said...

அழகாய் ஒரு நம்பிக்கைக் கவிதை!

அண்ணாமலையான் said...

நல்ல கவிநயம்...