Wednesday, January 19, 2011

முப்பாலுடன் முதல்காலை..........(3)

அறம் / அதிகாரம் 04 : அறன் வலியுறுத்தல்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற. [04:04]

விளக்கக் குறள் :

அகத்தூய்மை நல்லறமாம்; மற்றவை எல்லாம்

பகட்டும் புரட்டுமா கும்


பொருள் / அதிகாரம் 042 :கேள்வி [கேட்டறிதல்]

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து [42:03]

விளக்கக் குறள் :

கேள்வி உணவுண்ணும் சான்றோர்கள்; வேள்வி

உணவுண்ணும் வானவர்க்கும் ஒப்பு


இன்பம் / அதிகாரம் 112 : நலம் புனைந்துரைத்தல்

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து. [112:07]

விளக்கக் குறள் :

குறையுண்டோ மாதர் முகத்தில்; வளர்ந்து

நிறையும் முழுமதி போல்


--
என்றும் அன்புடன் -- துரை -- mini (36).gif

No comments: