tag:blogger.com,1999:blog-1043564295956403091.post461143669928071722..comments2023-11-02T20:37:41.702+05:30Comments on கனவு மெய்ப்பட வேண்டும்: ஒரு கேள்விக்காவது விடை தெரிந்திருந்தால்......duraianhttp://www.blogger.com/profile/06530149971948139623noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1043564295956403091.post-67233031812156191302009-03-27T08:08:00.000+05:302009-03-27T08:08:00.000+05:30பொதி சுமக்கும் கழுதையாய்ஆளுயரப் பையினைத் தூக்கிப்ப...பொதி சுமக்கும் கழுதையாய்<BR/>ஆளுயரப் பையினைத் தூக்கிப்<BR/>பள்ளி சொல்கிறார்கள் குழந்தைகள்!<BR/>நாற்பது பக்க ஏட்டை<BR/>நான்காய் மடித்து அதை <BR/>காற்சட்டைக்குள் சொருகி <BR/>வெறும் கையை வீசி <BR/>கல்லூரி வருகிறார்கள் மாணவர்கள் !!<BR/><BR/>*ஏன்?* என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார் <BR/>[b]பொதிக் கழுதையாய் <BR/>மனம் மாறிய பிறகு<BR/>வெளிக்குத் தேவையில்லை <BR/>என்றேன் நான்!!![/b]<BR/><BR/>வழிநெடுக முளைத்து நிற்கும் <BR/>குழந்தைகள் நல மருத்துவர்கள் <BR/>பிரசவக் கால மருத்துவமனைகள் <BR/>*"பிறப்பு எல்லாமே எளிதாகி இருக்குமே?" *என்கிறார் <BR/>*"சுகப் பிரசவமே கிடையாது இப்போது!" *என்கிறேன் <BR/><BR/><BR/>*ஏன்?* என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார் <BR/>[b]முதலில் பெண்களுக்கும்<BR/>பிறகு மருத்துவர்க்கும்<BR/>சுகமாய்த் தோன்றாததால்<BR/>என்றேன் நான்..!!![/b]<BR/><BR/>*கருப்புச் சட்டையணிந்து *கன்னிச்சாமியார்கள் <BR/>கடவுளுக்கு விரதமிருந்து கோவிலுக்கு வருகிறார்கள் <BR/>*கருப்புச் சட்டையணிந்து *கட்சிசார்பானவர்கள் <BR/>கடவுளுக்கு விரோதமாக கோசமிட்டுச் செல்கிறார்கள் <BR/><BR/><BR/>*ஏன்?* என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார் <BR/>[b]கன்னிச்சாமியாய் பிரித்துப் பார்க்கும்<BR/>சாமி கன்னியாகவே இருக்குமாம்<BR/>கருப்புச் சட்டைக்காரர்கள்<BR/>வந்து சென்றால்.. அதை அறிந்தவர்<BR/>சாமியைக் கன்னியாகவே வைத்திருக்க<BR/>எண்ணுவதால் என்றேன் நான்..!!!<BR/>[/b]<BR/><BR/><BR/>*"சுதந்திரதினம், விடுதலைதினம் போல <BR/>காதலர்தினம் கொண்டாடுகிறார்களே? <BR/>காதல்மனம் எதிர்ப்போர் குறைந்து போயினரா?? <BR/>கலப்புமணம் மறுப்போர் மறைந்து போயினரா???" *என்கிறார் <BR/>*"உலகம் மாறவில்லை இன்னமும்!" *என்கிறேன் <BR/><BR/><BR/>*பிறகு ஏன்? *என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார் <BR/>[b]சுதந்தர தினம் கொண்டாடுவதால்<BR/>எப்படி கருத்து எழுத்து சுதந்தரம்<BR/>கிட்டிவிடுவது இல்லையோ<BR/>அப்படியே காதல் சுதந்தரமும்<BR/>என்றேன் நான்...!!![/b]<BR/><BR/>குழம்பிப்போய் இருக்கிறார் அவர் <BR/>குதூகலமாய் மாற்ற அவரை <BR/>புதுத்திரைப்படம் கூட்டிச் செல்கிறேன் <BR/><BR/><BR/>ஆடல் காட்சியில் பனிப் பிரதேசத்தில் <BR/>ஆண்கள் அனைவரும் முழு ஆடையோடு <BR/>கம்பளியும் சேர்த்து அணிந்திருக்கிறார்கள்! <BR/>பெண்கள் வெறும் உள்ளாடையோடு <BR/>காலணிகூட இல்லாமல் ஆடுகிறார்கள்!! <BR/><BR/><BR/>*ஏன்?* என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார் <BR/>[b]ஆணைச் சுமக்கும் பெண்ணுக்கு<BR/>ஆடை சுமக்கும் தேவையில்லை<BR/>என்ற அற்புத எண்ணத்தால் <BR/>என்றேன் நான்..!!![/b]<BR/><BR/>விதியை நொந்து சோர்ந்துபோய் இருக்கிறார் <BR/>வீடு வந்து சேர்கிறோம் இருவரும் <BR/><BR/><BR/>*"பங்காளி சொக்காரன் சொந்தங்களைவிட <BR/>பக்கத்து வீட்டுக்காரன் மிகமிகமுக்கியம்! <BR/>என்னை அறிமுகப்படுத்து அவர்களிடம்"* என்றார் <BR/>*"எனக்கே அறிமுகமில்லை இன்னமும்"* என்றேன் <BR/><BR/><BR/>*ஏன்?* என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார் <BR/>[b]உலகம் சுருங்கிப் போயிற்று<BR/>எனக்கு உறவுகள் <BR/>அண்டைக் கண்டத்தில்<BR/>என்றேன் நான்..!!![/b]<BR/><BR/>*"குழந்தை குட்டியுள்ள வீடெனில் <BR/>குயில் கூவும் தோட்டம்போல <BR/>ஆரவாரமாய் இருக்கவேண்டுமே! <BR/>ஆனால் இங்கே என்ன இது <BR/>கல்லறைத் தோட்டம்போல <BR/>அமைதியாய் இருக்கிறதே?" *என்கிறார் <BR/>*"தொலைக்காட்சி பார்ப்பதால்"* என்கிறேன் <BR/><BR/><BR/>*ஏன்?* என்ற கேள்வியோடு என்னைப் பார்க்கிறார் <BR/>[b]தொலைக்காட்சியில் எல்லாம்<BR/>அருகில் காட்டுவார்கள்..<BR/>அதனால் அருகிருக்க வேண்டியவை<BR/>தொலைவுக்குப் போனது<BR/>என்றேன் நான்...!!![/b]<BR/><BR/>*"அரசே மதுபானக்கடை நடத்துகிறதா? <BR/>அங்கே மதுவும் ஊற்றிக் கொடுக்கிறதா?? <BR/><BR/><BR/>கணக்கில் வராத கள்ளப்பணத்திற்கு <BR/>காந்திக்கணக்கு என்ற பெயரா? <BR/><BR/><BR/>மதிக்கப்பட வேண்டிய சாலை விதிகள் <BR/>மிதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறதே?"* <BR/><BR/><BR/>கேள்விகள்? கேள்விகள்?? கேள்விகள்??? <BR/>கேட்டுக் கொண்டே இருக்கிறார்......... <BR/>கொஞ்ச நேரத்தில் யாரையும் கேட்க்காமலேயே <BR/>குழம்பிப் போன மனத்தோடும் முகத்தோடும் <BR/>கோமாவுக்குள் சென்றுவிடுகிறார் *மறுபடியும் * <BR/><BR/>[b]எல்லாவற்றுக்கும் விடை சொல்வேன்<BR/>மெர்சி கில்லிங் கோமாவில் தான் <BR/>செய்ய முடியுமாமே...<BR/>நாற்பது வருடம் இல்லாதது<BR/>அவர் தொடர் கேள்விகளால்<BR/>தோன்றிப் போனது..!<BR/>பதில் சொல்லாமல் விடுத்தேன்..<BR/>மருத்துவரிடம் விரைந்தேன்..!<BR/><BR/><BR/>[/b]தமிழ்தினாhttps://www.blogger.com/profile/07660803655239779138noreply@blogger.com