Tuesday, November 4, 2008

இரண்டாவது அம்மா


பெத்ததே
போதுமென
மொத்தமாய் போய்
சேர்ந்துவிட்டாள் அம்மா

அறியாத வயதில்
தெரியாத பொறுப்பை
புரியாமலேயே ஏற்று
பெரியமனுசி ஆகிப்போன அக்கா,

என் கை பிடித்துக் கூட்டிச் செல்ல
என் பை தூக்கி அழைத்துச் செல்ல
தன் படிப்பை இழந்த
தற்குறி ஆகிப்போன அக்கா,

ஆறு வயதுவரை என்னை
அரையிலிருந்து இறக்காமல்
தரையே தொடவிடாமல்
தலை தடவி பாதுகாத்த அக்கா,

கரையேற வழியில்லாமல்
காத்து நிற்கிறாள்
காரியம் கைகூடுமென
கனவோடு நிற்கிறாள்
எப்படியும் முடிப்பேன் என
எதிர்பார்த்து நிற்கிறாள்
என் முகம் பார்த்து
ஏங்கி நிற்கிறாள்.

என்னசெய்யப் போகிறேன் நான்?

ஒத்த மூக்குத்திக்கும் !
ஒருசோடி கம்மலுக்கும் !!

No comments: