Wednesday, March 31, 2010

எங்கே எனது சுவடுகள்......!



காலத்தோடு போட்டியிட்டக்
கடுமையான பயணத்தின் முடிவில்
களைப்படைந்த வேளையிலும்;
கடமைகளை முடித்துவிட்ட
கர்வத்துடன் தலைநிமிர்ந்தே
கடந்து வந்தபாதையில்
கண்ணுக்கெட்டும் தூரம்வரை
கண்பதித்துத் தேடுகிறேன்; எனது
கடந்தகால சாதனையின்
காலடித் தடங்களை ...

கதிகலங்கிப் போகிறேன் .......

எங்குமே பதியவில்லை
எனது பாதத்தின் சுவடுகள்கூட ........

எதையும் விடாமல்
என்னுடனேயே
எடுத்து வந்திருக்கிறேன்
எனக்கேத் தெரியாமல்
எனது காலணிக்குள் தேக்கியே ......

.

No comments: