Thursday, January 1, 2009

விலைவாசியும்,பணமும்...


விலைவாசி சத்தமில்லாமல்
வின்னைத் தொட்டும் தொடர்கிறது

வசதியாய் இருப்போரும்
வீதியில் வசிப்போரும்
வாங்கித்தான் ஆகவேண்டும்
வேறு வழியே இல்லை-எனில்

"வாழ்வு செழித்திருக்கும் உழைப்பவருக்கு
வளமை கூடியிருக்கும் விற்பவருக்கு"
விசாரிக்கத் தொடங்கினேன்
வீதியிலிருந்து சந்தை வரை

வியாபாரியின்
விரித்த வெறும் கையில்
வழக்கம் போல் ஏதுமில்லை

விநியோகிப்பவனின் லாப
விகிதாச்சாரத்திலும்
வித்தியாசம் கூடவேயில்லை

விவசாயியோ பசிக்கும்
விதைக்கும் வழியில்லாமல்
விதியை நொந்து எழமுடியாமல்
விழுந்து கொண்டே இருக்கிறான்

வகை தெரியாமல் நானும்
விழித்துக்கொண்டே நிற்கிறேன்!-நம்மக்கெல்லாம்
வழிதெரியாத எங்கோபோய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது
விதியை மாற்றும் அந்தப் பணமெல்லாம் !!

No comments: