Sunday, January 4, 2009

பெண் கல்வி...?????


இந்திய சனத்தொகையில்
இன்றைய கணக்கு வகையில்
சரிபாதிக்கும் மேலேயே
சதம் ஒன்று கூடுதலாகவே பெண்கள்

பள்ளிப் படிப்பில் சரிக்கு சரியாய்
போட்டியிட்டு செயிக்கிறார்கள் சாரிசாரியாய்
பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல்
பத்து இடமும் பறிபோகிறது அவர்களிடம்
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சியில்
முன்னிரண்டு வரிசையில்
பையன்கள் யாரும்
பக்கத்தில் கூட வரவில்லை

" அதுக்கப்புறமா ஆத்தா நீங்க
அத்தன பேரும் எங்கதான் போனீங்க?
இங்கொன்னும் அங்கொன்னுமா
அத்தி பூத்தாப்போல தெரியரீங்க!
மத்தவங்கல்லாம் என்னதான் ஆனிங்க?

பள்ளிக் கல்வி தாண்டி
துள்ளி மேலே எழுந்துவர
யாரும் வழி தரலியா? - இல்ல
யாருக்கும் வழி தெரியலியா?

பாத்திரம் கழுவினாலே போதுமுன்னும்
பாதுகாப்பா வைக்க வேணுமுன்னும்
பெத்துப் போடதுக்கு ஆகுமுன்னும்
பொத்தி உள்ளே வச்சுட்டாங்களா? "


பொறுத்தது போதுமே இதுகாறும் !
பொங்கி எழுவோமா இனிமேலும் ?

சோதனைகளை கொன்று தின்று
சாதனைகளாக்கும் சாத்தியக்கூறுகள்
சாத்தியமாக்கிக் கொடுப்போம்!

இந்திய சாவ்லாக்கள்
இங்கேயே உருவாக
இயன்றதைச் செய்வோம்!

பெண்கள் பயில களம் அமைப்போம் !
பெண் உயர்கல்வி கொடுப்போம் !

No comments: