Saturday, January 10, 2009

வானம் ஏறி...!!!


அமெரிக்காவில் பொருளாதாரம்
அடியோடு ஒடுங்கிப் போய்விட்டது
இங்கிலாந்தில் இன்றும் அது
இறங்கிக்கொண்டே இருக்கிறது
சப்பானில் தலைவர்கள்
சதிராடும் நிலவரம் புரியாமல்
தலைமையே வேண்டாம் என்று
தலை தெரிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்

கார்டுகளையே கடவுளாகக் கொண்டு
கணக்கில் மட்டுமே பணத்தைக் கண்டு
கணினியில் ஏறி கனவுலகம் போக
நிகழ்காலம் கடந்தவர்களின் வாழ்க்கை
நிமிட நேரத்தில் சூன்யமாகிப்போனது

அதிகமான எழுச்சியும்
அபரிதமான வளர்ச்சியும்
ஆபத்தில் தான் முடிந்துபோனது
தெருவில் ஒதுங்க இடம் கிடைப்பதே
தேவலாகம் அடைந்தது போலானது

"இருங்க..
இருங்க...
எப்படி இருக்கிறது
எங்க ஊரில் நிலமை?
எங்கோ எழவு விழுந்ததுக்கு
இங்கே அழ வேண்டி வந்துருமோ??"


இல்லை!
இந்தியாவிலும் அது
இறங்கு முகமாகத் இருந்தாலும்
சாமானியனுக்கு அந்தச்செய்தி போய்
சேர்ந்த மாதிரித் தெரியவில்லை!!

வறுமையில் விவசாயிகள்
வசதியில் வியாபாரிகள்

வாடிப்போன தொழிலாளிகள்
வளமையான முதலாளிகள்

வேடிக்கை பார்க்கும் பொதுசனம்
வாழ்ந்துகொண்டிருக்கும் சனநாயகம்


மாற்றம் இதுவரை தெரியவில்லை
ஏமாற்றமும் பெரிதாய் ஏதுமில்லை

இன்றைய இக்கட்டான நிலமையில்
இடிந்துபோன உலகைப் பார்க்கையில்
இப்படியே இருப்பதும் கூட
இனிமையாகத்தான் தெரிகிறது

No comments: