Wednesday, January 7, 2009

மொட்டையாய் யானை...!


நாட்டிலுள்ள யானைகள் எல்லாம்
மொட்டையான வால்களோடு
முடி இல்லாமல் மூழியாய்
வேதனையோடு அலைகின்றன
வெட்க்கப்பட்டுத் திரிகின்றன

இது எப்படி நடந்தது?
இயற்கையின் குறைபாடா?
இல்லை படைப்பின் கோளாறா?

விடை தெரியவில்லை என
விதியை நொந்து கொள்ளாதே
பாவி மனிதா! நிகழ்த்தியதே நீ தானே!
பதிலும் நீ தான் சொல்லியாக வேண்டும்!!

ஆறறிவு மனிதனின் உயிரை காக்க
ஐந்தறிவு யானை வாலின் மயிரா ?

உண்மை உணர்ந்து கொள்
உன்னைத் திருத்திக்கொள்

இந்த அவல நிலை
இனியும் நீடித்தால்
நாளைய உலகில்
நம் குழந்தைகள் பார்க்கலாம்
பல் இல்லாத பசு !
வால் இல்லாத வாத்து !
காது இல்லாத முயல் !
நகம் இல்.......!
நாக்..............!
...................!

No comments: