Wednesday, May 25, 2011

அழகர் சாமியின் குதிரையும்,எங்கேயும் காதலும்...!



மன்னிக்கவும் ..கொஞ்சம் தாமதனான பதிவுக்காக :

12ம்தேதி காலை...கோவையிலிருந்து ஒரு முக்கிய அழைப்பு...13ம்தேதி ஒரு தொழில்முறை சந்திப்பு...கண்டிப்பாகக் கலந்துகொள்ளவேண்டும் ....13ல் சாலை நிலவரம் எப்படி இருக்கும் என்றுத் தெரியவில்லை..அதனால் இன்றே செல்ல முடிவு செய்து அவசரமாகக் கிளம்பினேன் ...குழந்தைகளும் சேர்ந்துகொள்ள ..குதூகலமாகக் கிளம்பினோம்...

13..காலை...கோவை: தொலைக்காட்சிமுன் நாங்கள் ஆவலுடன் அமர்ந்திருக்க...உள்ளிருந்து ஆளாளுக்கு அவர்களது நம்பிக்கையைக் கொட்டிக் கொண்டிருக்க... மின்தடை 9-12 வரைக்கும் ........

சரி...இனி கதைக்கு ஆவாது..எல்லாரும் கிளம்பி ...எந்தக் கவலையும் இன்றி ஊர் சுற்றி ...சந்திப்பையும் முடிக்கும் போது ஆட்சி மாறி இருந்தது .......

ஆனால் அதே வழக்கமான...அதே பரபரப்பில் கோவை..எந்த விதமான மாற்றமும் இன்றி ........

வந்தவேலை சீக்கிரமே முடிந்ததால் .....குழந்தைகள் ஏதாவது படம் பார்க்க ஆசைப்பட.....கேஜி காம்ப்லக்சில் நுழைந்தோம் .... 4 அரங்கிலும் வாரிசுகளின் படங்கள் ........எனது முதல் தேர்வு

‘அழகர்சாமியின் குதிரை ‘
Azhagarsamiyin-Kuthirai-Tamil-Movie-Stills-2.jpg
சிறப்பம்சங்கள் :
1)அச்சு அசலாய் ஒருகிராமத்தை கண்முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்...பேருதவியாக ஒளிப்பதிவாளர்...உறுத்தாத இசையமைப்பாளர் ...படம் பார்க்கிறோம் என்ற நினைப்பே வராமல் ..இயல்பாய் நம்மைத் தோளில் கைபோட்டு அழைத்துச் செல்லும் வசன கர்த்தா........

2)பாத்திரமாகவே மாறிப்போன தாநாயகன் அழகர்சாமி , இன்ஸ்பெக்ட்டர், முற்போக்குப் பெரியம்மா

3) மிக முக்கியமாக குதிரைக்காக கதாநாயகன் போடும் சண்டை ... ஓடிப்போய் அவனுக்கு உதவவேண்டும் என்னும் அளவுக்கு இயல்பானது

4) அங்கங்கே வரும் இயல்பான பாத்திரங்கள் ( செவிடாக நடிக்கும் கிழவி, சர்பத்துக்கு காசு கேக்கும் பையனை அடிக்கும் அப்பா, ஊர்ப் பெரிசுகள் ,பரோட்டா சூரி )

5) கலக்கல் நகைச்சுவைக் குத்தல்கள்

6)கதா நாயகன் பெண்பார்க்கும் இடம்..மிக அழகானபெண் என்பதால் வேண்டாம் எனறு மறுக்க...பெண்ணோ மனதுமட்டும் போதுமானது எனச் சம்மதிக்கும் இடம் ....

7)கையைத் தொட்டுப் பார்க்கலாமா என்று கேட்டுவிட்டு தொடும் இடம் ...கவிதை :)

8) குழந்தைத் தோழிலாளர்கள் / கிராமங்களின் பொருளாதார அவல நிலையை காட்டும் இடம்

9) மூட நம்பிக்கையை கிண்டல்செய்யும் தொணி / பாணி

10) மலையக மக்கள் வாழுமிடத்தை/ போக்குவரத்து நிலையை உள்ளதை உள்ளதுபோல காட்டி இருப்பது

சறுக்கல்கள் :
1) அந்த மைனர் ....கிராமத்தின் மேலுள்ள மதிப்பை எல்லாம் மொத்தமாய்ப் போட்டு கொளுத்தும் பாத்திர வடிவமைப்பு ... நகைச்சுவைக்காகத்தான் என்று எடுக்கவே முடியாது .... பொது இடத்தில் எதிரில் உள்ள (திருமணமான) பெண்களை கண்சாடையிலேயே பேசி தனியாக அழைத்துச் சென்று விடுவாராம் ....பெண்களும் அவனுக்கு வழிகாட்டி முன்னே செல்வார்களாம் ....மிகக் கேவலப் படுத்தி இருக்கிறார்கள் ...

2) மலையாள மாந்தரீகர் ...இந்தப் பாத்திரம் தவிர்த்திருக்கப் பட வேண்டிய ஒன்று .... நம்ம ஊர் ப்ராடாகவே காட்டி இருக்கலாம் . வேறு மொழி பேசுபவர்களை ஏமாற்றுக்க்காரராகக் காட்டுவது இனவேற்றுமையையே வளர்க்கும் ... ( நம்மை அவர்கள் ‘பாண்டி’ என்று சொல்வதை எதிர்க்கும் நடு நிலையாளர்கள் ..இதையும் எதிர்க்க வேண்டும் ... யார் முதலில் நிறுத்துவது என்பதுதான் இப்போதைய கேள்வி... அது நாமாகவே இருப்போமே ).

3) பல இடங்களில் இடறும் லாஜிக் ( அவ்ளோ பெரிய மரக்குதிரையை தனியாளாக ஆசாரி இருமுறை யாருக்கும் தெரியாமல் இரவு மாற்றுவது ....குதிரைக்கு திடீரென வீரம் வருவது ....கடைசியில் குதிரையை கிராமத்து மக்கள் கண்டுகொள்ளாமல் விடுவது ...)

4) அந்த வில்லன்...தெளிவில்லா பாத்திர அமைப்பு ..(ஊர்மக்கள் நடுவி வைத்து குதிரைக்கு விசம் கொடுத்தா மாட்டிக்குவோமுன்னு கூடவாத் தெரியாது?)

5) சாதி எதிர்ப்பை உயர்த்திப் பிடிக்க நினைத்து , மூட நம்பிக்கைக்கு சல்யூட் அடித்திருக்கும் க்ளைமாக்ஸ் (திருவிழா முடிந்தவுடன் போலிச் சாமியார் சொன்னது போலவே வரும் மழை)

பொதுவாக : சில குறைகளைத் தவிர்த்து ..பல பரிமாணங்களை சிறப்பாகப் பதிந்துள்ள நல்லதோர் படம்

படம் முடிந்து வெளியே வந்தோம் ........

வாசலில் நண்பர் அடுத்த இரவுக் காட்சிக்கு 6 டிக்கெட்டுகளுடன் சிரித்தபடியே நிற்கிறார் ......:)))

Popcorn-01-june[1].gifpopcorn-02.gifpopcorn-01.gif(அப்போ.....இதுதான் இடைவேளையா ?)


எங்கேயும் காதல்

enkeeyum kathal.jpg

இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல்கள் உள்ள படம் மற்றும் ப்ரபுதேவாவின் நடனம் என்ற குறைந்த பட்ச உத்திரவாதத்துடன் உள்ளே நுழைந்தோம்..

ப்ரான்ஸ்-ல் ப்ரபுதேவா..... காதல் பற்றிய ஒர் அற்புத அறிமுகத்துடன் படத்தைப் பாடலுடன் வித்தியாசமாய் ஆரம்பிக்க...ஆகாவென்று நானும் இருக்கையில் நன்றாக நிமிர்ந்து உக்கார... எழுத்துப் போட ஆரம்பித்த உடனேயே இடி இறங்க ஆரம்பித்தது தலைக்குள்...

..ப்ரான்ஸில் காதலென்றால் ‘உதட்டோடு உதடு' முத்தம் கொடுப்பது மட்டும்தான்...அதுவும் தொடர்ந்து மணிக்கணக்கில் நாள்கணக்கில்...பார்க்கில், பாதையில், பஸ்ஸில், பைக்கில், சாலையில் , கைகோர்த்துப் போகும்போது...இவ்வளவு ஏன்????...ஆய் போகும்போதுகூட விடாமல் முத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்களாம் அங்கே .......

(இந்தப் படம் அங்கே வெளியாகாமல் இருக்க ஆண்டவனை வேண்டுவோம்.....அவர்களை இந்த அளவுக்குக் கேவலப் படுத்தியதற்காக நம்மேல் போர்த்தொடுத்தாலும் ஆச்சரியமில்லை )

தீராத விளையாட்டுப்பிள்ளை நம் கதா நாயகன் ...தினம் ஒரு பெண் வேண்டும் அவர்க்கு...ஆனால் காதல் என்றால் மட்டும் காத தூரம் ஓடுவாராம் ....கதா நாயகியை மட்டும் சீண்ட மாட்டாராம்...

வெளி நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ்ப்பண்பாட்டின் சிகரம் நம் கதாநாயகி ...... நாயகன் அவளைத் தினமும் தவிர்த்து அவள் கண் முன்னாலேயே வேறு வேறு பெண்களை படுக்கைக்கு அழைத்துக் கொண்டு சென்றாலும் .....அவனைத்தான் காதலிப்பாளாம்........அரைவேக்காடு,லூசு, மொக்கை...எல்லாம் தாண்டி அதற்கும் மேலான விசித்திரப் பாத்திரப் படைப்பு..


நிற்க : ஒரு உண்மையை நம்பித்தான் ஆக வேண்டும் . இந்தப்படமும் மன்மதன் அம்பும் ஒட்டி உருவான இரட்டைக் குழந்தைகளாகத்தான் இருந்திருக்க வேண்டும் . ஆனால் ஒன்று முந்திப் பிறந்து விட்டது ...

எ.கா: ம.அம்புவில் கமலின் அறிமுகக் காட்சி....அந்தத் துரத்தல்...சண்டை ..எல்லாம் அப்படியே காட்சி / ப்ரேம் மாறாமல் ...இதிலும் இருக்கிறது ..கமலுக்குப் பதிலாக ரவி ..:)

காமெடி என்ற பெயரில் கேஸ் ட்ரபுளை மையமாக வைத்துக் கேவலமான/ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்தி இருக்கிறார் இயக்குனர் ...... இன்னும் தீராத அவரது கலைத்தாகம் அடுத்த படத்திலும் தொடர வாழ்த்துகள்.

ஒரு கட்டத்தில் என்னைப் பார்க்க ...எனக்கே பாவமாய்ப் போக ..ஆண்டவன் இருக்கிறான் என்பதை உறுதி செய்யும் விதமாக வந்தது இடைவேளை ....

ஒரு 10 நிமிடப் பெயிலுக்குப் பின் மீண்டும் ஜெயில் ஆரம்பம் ...

(எனக்கு)

சாலையில் கதாநாயகி சேலையில் அழகாக வந்து நிறக....அங்குள்ள வெளி நாட்டு இளைஞர்கள் ...ஓடிவந்து ‘வாவ்சொல்ல , கதா நாயகன் அவர்களிடம் ‘இவள் தமிழ்ப் பொண்ணுஎன்று தமிழில் அறிமுகப் படுத்த...

அதைப் புரிந்து கொண்டு அவர்கள் ”ஓ..5 மினிட்ஸ் ப்ளீஸ் என்று அவகாசம் கேட்டுவிட்டு

‘அரைமணி நேரத்தில் தமிழ் கற்கலாம்என்னும் புத்தகத்தோடு திரும்பிவர..ஆரம்பமாகிறது ஒரு அதகலப் பாடல்

மங்காய்..... நிலாவின் தங்காய்

வெளி நாட்டு நாக்குகளின் உச்சரிப்பில் அழகுத் தமிழில் பாடல்..வலுக்கட்டாயமாய் ஆங்கிலப்பாடல்களைச் சொருகும் சூழலில்...இப்படி ஒரு அருமையான சிச்சுவேசன்...அதுவும் மிகப் புதுமையாக.....சேர்ந்த சோர்வெல்லாம் கலைந்து மீண்டும் நிமிர்ந்து உட்க்கார்ந்தேன்....அருமையான நடனம் ...பாதிப்பாட்டில் எல்லாம் கெட்டு ஒழிந்து குட்டிச் சுவராகி விட்டதுL

அந்த லூசுக் கதாநாயகி இங்கேயும் நடுரோட்டில் நின்னுக்கிட்டே கனவுகான ...அந்த வாலிபர்களை ஒதுக்கிவிட்டு...கதா நாயகன் வந்து ஆட ஆரம்பித்துவிட்டான் ...சே.....இந்த எழவைத்தான் ஏற்கனவே பார்த்துக்கிட்டுத்தானே இருக்கோம் .......

என்னடா இது???? எப்படா முடியும் ??? என எனக்குள்ளேயே ஏங்க ஆரம்பித்தேன் ...( அட ..இப்படி ஏங்கித்தான் எவ்ளோ நாளாச்சுது !)

ஒரு காட்சி...கதாநாயகன் சோகத்தில் பேப்பரை / சோபாவைக் கிழித்து வீசும் காட்சி....அட..சொல்லவே இல்லையே விளம்பரத்தில் கூட !!!....ஆச்சரியமாக படத்தில் இந்த ஒருகாட்சி மட்டும் 3Dல் வைத்திருக்கிறாரா இயக்குனர் ?? என வியந்த என் எண்ணத்தில் உடனே மண்/குப்பை/பஞ்சு எல்லாம் விழுந்தது ....எனக்கு முந்தைய வரிசையிலிருந்து ஒரு மிதவாதி எதையோ (எதையோ என்ன எதையோ...சீட்டைத்தான்) கிழித்தி

வீசிக்கொண்டிருந்தார் .....அவரை ஆமோதித்து ஆதரவாகக் கைதட்டல்கள் ...

உள்ளே வந்ததிலிருந்து முதல் முறையாய் ஒரு சின்ன சந்தோசம் எனக்குள் துளிர்ந்தது

அட.. நாம மைனாரிட்டி இல்ல ..மெஜாரிட்டித்தான்... !

திடீரென எல்லாரும் எழுந்து நிற்கும் போதுதான் கவனித்தேன்...

படம் முடிந்துவிட்டதாம் ....கடவுளுக்கு நன்றி

(ஒரு நல்ல சுற்றுலா .... இப்படியாக முடிந்து போனது L

ஒரு முக்கிய வேண்டுகோள் :

திருட்டு விசிடி/டிவிடியில் படம் பார்க்காதீர்கள் !


இந்தப்படத்தை......திருட்டு விசிடி/டிவிடியில் கூடப் பார்க்காதீர்கள் !!

முடிவாக :

வீடு வந்து , திட்டு வாங்கிக்கொண்டே ஊருக்கு வந்து சேர்ந்த வேளையில்...ஆட்சி மாற்றத்திற்கு இடையே நடந்த ஒரு பயணம் முடிந்து போனது ......


வழக்கம்போலவே இப்பொழுதும் ...கண்விழித்து...பல்துலக்கி...காபி குடித்து ..வேலைக்குக் கிளம்பி.....

Monday, May 2, 2011

உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை :)) : தினமணி நாளிதழில் நான் ...!

http://epaper.dinamani.com/newsview.aspx?parentid=22250&boxid=25548265&archive=false

காலையில் இருந்து அலைபேசி அழைப்புகள் ...
”உங்கள் படம், கவிதை தினமணி நாளிதழில் வந்துள்ளது .. நல்லா இருக்கு ...வாழ்த்துகள் “

எனக்குக் குழப்பம் ... ’ நாம ஒண்ணும் அனுப்பவில்லையே .வேறு படைப்பையும் ,பெயரையும் பார்த்து குழம்பி இருப்பார்களோ ‘

சந்தேகத்துடன் நாளிதழை வாங்கிப் பார்க்கிறேன் .......ஆனந்த அதிர்ச்சி .....தமிழ்மணி பகுதியில் .....
உழைப்பாளர் தினத்தில் எனது உழைப்பிற்கு ஒர் அங்கீகாரம் ........
நான் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து கிடைத்திருக்கிறது ......


நன்றி: .திரு .கலாரசிகன் அவர்கள் ( எனக்கு இன்னும் அறிமுகம் கூட ஆகாதவர் இவர்....முன்மொழிந்திருக்கிறார் என்றால் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் ), சந்தவசந்தம் குழுமம், தினமணி நாளிதழ்.....மற்றும் ஊக்கமளிக்கும் எனது இணைய உறவுகள்

DINAMAN1 1.jpg
DINAMAN1 2.jpg
-- DINAMAN1 3.jpgDINAMAN1 4bmp.jpg
DINAMAN1 5bmp.jpg
DINAMAN1 6bmp.jpg
DINAMAN1 7bmp.jpg
DINAMAN1 8bmp.jpg