Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts
Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts

Saturday, August 13, 2016

சிறுகுறிப்பாய் .... இரு சாதனையாளர்களின் ஒருகதை... பெரிய செய்தி...!


2008:
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்...
அவன் .. 13வயதுச் சிறுவன் ..
அவரைச் சந்தித்த மகிழ்வில் சொல்கிறான்’’என் கனவுக் கதாநாயகன் இவர்.. நானும் ஒருநாள் இவர்போல் சாதிப்பேன் ’’
அவர் சொல்கிறார் ’’நன்றாக வருவான் இவன்’’

8 ஆண்டுகளுக்குப்பின் ...............

2016:
ரியோ ஒலிம்பிக்ஸ் – நீச்சல் – 100மீ / பட்டர்ஃப்ளை போட்டி
அவன் – வெற்றி – முதலிடம் – தங்கப் பதக்கம் - புதிய ஒலிம்பிக் சாதனை – 50.39 நொடிகள்
அவர் – இரண்டாம் இடம் - வெள்ளிப் பதக்கம் (#மூவரில் ஒருவர்)

அவன் சொன்னான் பெருமையுடன் ’’ இது என் தொடக்கம்’’
-- இவனே மாணவன் --

அவர் சொன்னார் பெருமையுடன் ‘’ நான் அன்றே சொன்னேன் ‘’

பின்னர் அவர் அறிவித்தார் ‘’ நான் ஓய்வு பெறுகிறேன்’’
-- இவரே தலைவர் --

அவர் ; Michael Phelps
அவன் : Joseph Schooling

Friday, April 1, 2011

மறையும் பழைமையை நிலைநிறுத்த முயலும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்...!

--இது விளம்பரம் அல்ல--
அன்பர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று

நாள் : 27.03.11
இடம் : திருநெல்வேலி

ரீச் பவுண்டேசன் ஏற்பாடு செய்திருந்த செய்முறை விளக்கப் பட்டறையில்
தமிழ்மரபு அறக்கட்டளை/மின்தமிழின் பின்வரிசை மாணவன் என்ற தகுதியுடன் திருமதி.சாந்திதுரை அவர்களுடன் கலந்துகொண்டேன்...

(ஒரு சிறு அறிமுகம் :
ரீச் பவுண்டேசன் : ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் , சென்னை
குறிக்கோள் : அழிந்துகொண்டிருக்கும் புராதானச் சின்னங்கள் ,கல்வெட்டுகள் ,கோவில்களைக் கண்டறிதல்,அதன் சிறப்பை வெளிப்படுத்துதல், புனரமைத்தல், பாதுகாத்தல்.... இன்னும் பல)

கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் கல்வெட்டுகள்/கோவில்களின் தொன்மை மாறாமல் சீரமைக்கும் முறைகளையும் ,சிதிலமாவதிலிருந்து தடுக்கும் பாதுகாப்புவழிகளையும் மிக எளிமையாய் கற்றுத்தந்த சந்திப்பு அது

நம் பண்டைய மரபு,பண்பாடு,கலாச்சாரம் பற்றிய ஒரு புதிய புரிதலை, எனக்குள் விளக்காய் ஏற்றி, வழியனுப்பி வைத்த சந்திப்பு அது

’ நம்மைப்பார்த்து மற்றவர் வியந்து போற்றும் வகையில் வாழ்ந்திருகிறோம்...ஆனால்..தெளிவான புரிதலின்றி , சரியான வழிகாட்டுதலின்றி.... ’நாம் பிறரைப் பார்த்து வாய்பிளந்து நின்று கொண்டிருக்கிறோம் ’ என்ன்னும் உண்மையை உரத்துச் சொன்ன சந்திப்பு அது

தென்தமிழகத்தின் சிறப்பினை,( மலைத்துப்போகும் அளவுக்கு இருக்கின்றன ...மறைக்கப்பட்ட பெருமைகள் ), உலகறியச் செய்யவேண்டும் என்ற உத்வேகத்தை உறுதியுடன் எடுத்துகொள்ள வைத்த சந்திப்பு அது

இன்னும்...இன்னும்...பல புதிய செய்திகள்...அருமையான பெரியவர்களுடன்...மிகச் சிறந்த நாளாகிப்போனது .....இந்தநாள் எங்களுக்கு...

மதிய உணவுக்குப் பின்...செயல்விளக்கப் பட்டறைக்காக (திருநெல்வேலியில்)அருகில் இருக்கும், சிதிலமாகி இருக்கும் உச்சிஷ்ட மகா கணபதி திருக்கோயில், மணிமுத்தீசுவரம், சென்றோம்...

தலச் சிறப்பு : ( நானறிந்த வரையில் மட்டும் .....)
ஒரே கருவறையில் கணபதியும், சிவனும்
அன்னையை மடியில் வைத்திருக்கும் கணபதி
சித்திரையில் கணபதிமேல் சூரிய ஒளிபடும் அமைப்பு
மிகப்பெரிய நுழைவாயில் கோபுரம்.......................

27032011A.jpg 27032011(010)A.jpg
பராமரிப்பில் உள்ளது கோபுரத்தின் மேல்பகுதி மட்டும்தான்..................பிரம்மாண்ட நுழைவாயில்


27032011(002)A.jpg 27032011(004)A.jpg
சிதிலமான சுற்றுச் சுவர்


27032011(013)A.jpg 27032011(014)A.jpg
தொழில் நுடபக் குறைபாடுகள் உள்ள கல் உத்திர அமைப்பு.....விழும் நிலையில் கருவறை முகப்பு


27032011(016)A.jpg 27032011(008)A.jpg
சிதிலமாகிக் கொண்டிருக்கும் மேற்கூரை....................... நுழைவாயிலில் மரத்துடன் தூண்

27032011(024)A.jpg 27032011(029)A.jpg
உள்பிரகாரச் சுவர்.............................................................சுற்றுச் சுவர்


27032011(026)A.jpg 27032011(027)A.jpg
கல்வெட்டின் பொருள்தேடி.................................................ஒரு கலந்தாய்வு

27032011(028)A.jpg 27032011(032)A.jpg
வெளிச் சுற்றுச் சுவர்.......................................................வெளிக் கோபுரம்


27032011(019)A.jpg
நல்லதொரு விடியலை எதிர்பார்த்து.........................

ஒரு வேண்டுகோள் : இணைய அன்பர்களே ....தங்கள்பகுதியில் உள்ள கவனிப்பாரற்ற புராதானச் சின்னங்கள் , கல்வெட்டுகள் , பழங்காலக் கோவில்கள் , பற்றிய விபரங்கள் இருந்தால் அறியத் தாருங்கள்..... உங்கள் மூலமாக முன்னோர் பெருமைகளில் ஒன்று உலகின்முன் புதியதாய்ப் பிறந்து வந்ததாக இருக்கட்டும் ...........

’இயன்றதைச் செய்வோம்.....முடிந்தவரை முயல்வோம்.....எண்ணம்போலவே எல்லாம் அமையும்’

நன்றி : மிக அருமையாய் வரவேற்று ,ஒருங்கிணைத்த அன்பர்களுக்கும்.....
வந்து வழிகாட்டிய பெரியவர்களுக்கும் ,அரியனவற்றை அறியத்தந்த அறிஞர்களுக்கும்........
கலந்துகொண்டு பெருமை சேர்த்த ஆர்வலர்களுக்கும்..............
நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.........




வாழ்க ......

Tuesday, January 25, 2011

Wednesday, January 12, 2011

பயம் கொல்வேன்..பதறாமல் வெல்வேன்.....!

சுற்றிலும் வியூகம் அமைத்துச்

சூழ்ந்திருக்கிறார்கள் அவர்கள்....


இடுப்பிலிருக்கும் கத்தியின்உறையை

ஒருகையால் இறுக்கியபடி..........

உருவுவதற்குத் தயாராய்

உறையின் முனையில்

மறுகையை இறக்கியபடி............

வருவது எதுவென்றாலும்

எதிர்கொள்ளும் எண்ணத்துடன்

எதிர்த்துக் கொல்லும் திண்ணத்துடன்.......

கண்கள் சிவக்க

உதடுகள் துடிக்க

தசைகள் உருள

தோள்கள் திரள

தன்னந் தனியனாய்

திறமாய் நிற்கிறேன் நான்........


துளியும்

அசையாமலிருக்கும்

எனது கைகளின் மேல்

மொத்த கவனத்தையும்

இமைக்காமல் குவித்தபடி...


இதுவரை

உருவப்படாதிருக்கும்

கத்தியின் உருவத்தையும்...


வெளியே வந்தபின் அது

சொருகப்போகும் வேகத்தையும்

உதிரப்போகும் உதிரத்தையும்

கருகப்போகும் உயிர்களையும்

சருகாகப்போகும் உடல்களையும்

மனதுக்குள் உருவகப் படுத்தியபடி....


பயத்தை மறைத்து

பாதுகாப்பாய் மறைந்தபடி...

தமது வாள்களைத்

தொடர்ந்து கூர்தீட்டியபடியே

இருக்கிறார்கள் அவர்கள்........


குறையத் தொடங்கியிருந்த

அவர்களது வாளின் அளவு...

தொடர் தீட்டுதலில்

திடம் குலைந்து

மேலும் கரைந்து

கைப்பிடிகள் மட்டுமே

மீதமாகும் வரையிலும்...


நிலை நிறுத்தியிருக்கும்

எனது பிம்பத்தை

கலைக்கப் போவதில்லை நான்


இடையிடையே

சூழ்நிலையை புரியாமல்.....


எனது இடையிலிருந்தபடி

என்னைக் கேலிசெய்த படியே

கத்திச் சிரித்துக் கொண்டிருக்கிறது...



'கத்தி' இல்லாத

அந்த வெற்று உறை.......


[நன்றி : கரு; ப்ராங்க்ளின்குமார்]

Sunday, January 2, 2011

முயல்.......!

ஊடே விழுந்து வழிமறிக்கும்

கூட இருந்தே குழிபறிக்கும்

உலகின் தரம்பார்த்து

உடைந்து கலங்காமல்

நிமிர்ந்தே

ஒருமுறை

களமிறங்கி முயன்றுதான் பாரேன்.....


நிலவும் உன்கையில் கிட்டும்...

உலவும் மேகமும் முன்வந்து கைகட்டும்...

மின்னும் நட்சத்திரங்களும் உனக்கு எட்டும்...

இன்னும் முயன்றுபார் அந்த

விண்ணும் உன்தலையில் தட்டும்.......


Saturday, December 11, 2010

பாரதியின் வளர்ப்பாகிய நான் ...!


பாரதியின் பிறந்த நாளுக்கு ஒரு சமர்ப்பணம் :



வேரோடு மண்மீதில் வீழ்த்தியதாய் எண்ணியே
பாரா(து) இருக்காதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரச் சூழ்வேன்;நான்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..








(வெண்பா : நேரிசை)
.

Tuesday, September 14, 2010

அறிந்துகொள்வோம் இவர்களையும் ....!


குறுந்தகவல் இதழ்கள் :

12.09.10 . திருச்சி ; ஒரு சந்திப்பு ; 70பேர் சந்தித்துக் கொண்ட ஒரு சிறிய சந்திப்பு. ஆனால் கலைத் தமிழுலகம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமானதொரு சந்திப்பு. குறுந்தகவல் (SMS) பறிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட கலைஞர்கள் சந்தித்துக் கொண்ட ஒரு முப்பெரும் விழா . எளியோரின் இணையமாக மாறி இருக்கும் அலைபேசித் தகவல் பரிமாற்றத்தின் இன்னுமொரு பரிணாம வளர்ச்சியின் சாட்சியான சந்திப்பு இது . இதற்குப் பின்புலமாக மறைவில் இருக்கும் சக்திகளை வெளிக்காட்டும் பதிவு இது .



SMS குறுந்தகவல் செய்தி . இன்றைய தொலைத் தொடபில் மிக முக்கியமான ஒன்று . வியாபார, விளம்பர நிறுவனங்கள் இதனைத் தவறாகப் பயன்படுத்தி தொல்லைத் தொடர்பாக மாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு இனிய , ஊக்கமளிக்கும் செய்தியும் இதில் உண்டு

.ஆம்

குறுந்தகவல் இதழ்கள் ....



20 க்கும் மேற்பட்ட குறுந்தகவல் இதழ்கள்.

தினம் ஒரு படைப்பாளியின் படைப்பினை ,கவிதையினை ,கருத்தினை தமிழகம் முழுவதும் குறைந்தது 10000 வாசகர்களிடம் குறுந்தகவல் மூலமாக கொண்டு சேர்க்கின்றன இவைகள் .



கண்காணாத இடத்தில் தனக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளை , அவர்களின் படைப்புகளை வெளியிட்டு ,

வெளி உலகுக்குக் காட்டி , அவர்களுக்கு ஊக்கம் ஊட்டி , புதிய கவிஞர்கள் , கலைஞர்கள் ,படைப்பாளிகளை உருவாக்கி வருகின்றன் .



முன்பெல்லாம்

படைப்புகளை உருவாக்கிவிட்டு ,

பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவிட்டு ,

வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த கவிஞர்கள், கலைஞர்கள் ஏராளம் ..



பொதுப் பார்வைக்கு சமர்பிக்கும் முறையறியாமல் ,

புதைந்து போன புதையல்களோ ஏராளம் , ஏராளம் ...........



இன்று நிலைமை மாற்றம் வந்திருக்கிறது . மாற்றாக ஒரு புதிய தொழில் நுட்பம் துணைக்கு வந்திருக்கிறது

தொட்டுவிடும் தூரத்தில் தொடுவானம் போல் ,

கணினி , இணையத்தளம் தொட முடியாதவர்களின் முன்னால்

விரல் நுனியில் ஒரு இலவசப் பதிவுலகம் . அலைபேசியால் இணைக்கும் அற்புத உலகம் அது .



முக்கிய செய்தி ; இந்தச் செய்தி பரிமாற்றம் ஒரு இலவசச் சேவை . இவை இணைய கூகுள் ,யாகூ குழுமங்கள் போன்ற இலவசச் சேவை .. அனால் அவைகளைப்போல பலம் படைத்த பின்புலம் கொண்டவைகள் அல்ல. ஆம். ஒவ்வொரு இதழாசிரியரும் தனிமனிதனாய் நின்று தமிழுக்கு ஆற்றும் சேவை இது .


இந்த இதழ்களைத் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் வாழ்கையில் வசதியான இடத்தில் இல்லை . தானிருக்கும் இடத்தையே தக்கவைத்துக்கொள்ள போராடிக் கொண்டிருக்கும் பொருளாதார பலமில்லாத நடுத்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கும் சராசரியானவர்கள்தான் . தனது தினக் கூலியில் இருந்து , மாத வருமானத்தில் இருந்து , பொருள் ஒதுக்கி இந்தச் சேவையைத் தொடர்பவர்கள் இவர்கள். பணிச் சுமைக்கு இடையிலும் , குடும்பச் சூழலுக்கு நடுவிலும், பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஊடாகவும் கடமையாக நினைத்து கருத்தாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் செயல் வீரர்கள் இவர்கள் . எந்தவிதப் பலனும் எதிர்பாராமல் இவர்கள் ஒவ்வொருவரும் பிற முகமறியாத கலைஞர்களின் படைப்புகளை 500லிருந்து 1000 பேர்வரையிலும் கொண்டு சேர்க்கிறார்கள் குறுஞ்செய்திகள் மூலமாக .



’அப்படி என்னய்யா வந்துச்சு இவங்களுக்கு ?

பேசாம இருக்க வேண்டியதுதானே ??

எதுக்கு தேவையில்லாம இழுக்கணும் /சுமக்கணும் இதை ???’



பலகேள்விகள் தோன்றலாம் மனதுக்குள் ....!



அதற்கான விடையை என்னிலிருந்தே ஆரம்பிக்கிறேன் .தொடர்ந்து வருவது தற்பெருமை இல்லை . உண்மையை உலகுக்குச் சொல்லும் வேளையில் ( நெல்லும் நீர்பாய்ச்சும் வேளையில், சரிவிலுள்ள புல்லுக்கும் சிறிது கசிவது போல ) வெளிப்படும் செய்தி இது



நான் பிறந்த இடம் இது . நான் ஒரு கட்டுமானப் பொறியாளர் .ஆங்கிலவழியில் கல்வி கற்றவன் . கல்லையும் , மண்ணையும் , கலவையையும் , ,கட்டுமானத்தையும் தவிர எதுவும் தெரியாதவன் நான். 2008வரையில் பத்திரிக்கைகள் வாசிக்கும் வழக்கம் கூட இல்லாதவன் நான். விளையாட்டாக நான் எழுதிய ஒரு 3வரிகளை திரு.கன்னிக்கோவில் ராஜா அவர்கள் (திருத்தம் செய்து) , அவரது SMS இதழில் நான் எதிர்பார்க்காத வேளையில் வெளியிட்டார் .

நமது படைப்பை கண்முன்னால் பார்க்கும் வேளையில் ’நம்மாலும் முடியும் ‘ என்ற எண்ணத்தை ,

நம்மேலுள்ள தன்நம்பிக்கையை எனக்குள்ளேயே ஆழமாய் விதைத்து விட்டது அந்த குறுந்தகவல் செய்தி

’அட நமக்குள்ளும் ஏதோ ஒன்று இருக்கிறதே !!! , முயன்றால் நம்மாலும் முடியும் போல !!!’ என்று என்னையும் திசை திருப்பி விட்டது அது .



இரண்டே வருடங்கள்



குறுஞ்செய்தி இதழில் அறிமுகமாகி , இணையத்தில் இணைந்து ,( நன்றி : அய்யா . கிரிஜா மணாளன் அவர்களுக்கு )

இன்று எனக்கென வலைப்பூக்களை உருவாக்கி இருக்கிறேன் , ஒருங்குறித் தமிழில் ஒருவிரல் தட்டச்சில் ஓரளவு வேகம் காட்டுகிறேன் , கவிதைகளாய் கொடுக்கிறேன் , வெண்பாவாய் வடிக்கிறேன் , குறும்பாக்கள் தொடுக்கிறேன் , திருக்குறளுக்கு விளக்கமாக , குறளுரையாக 1330 புதியகுறள்களை வெண்பாவில் அமைத்திருக்கிறேன் .(எனக்குத் தெரிந்த அளவில்)



குறுஞ்செய்தி இதழ்களின் விளைவுக்கு நானே நேரடிச் சான்று’.

எங்கோ ஆரம்பித்து, எப்படியோ சென்று கொண்டிருந்தவன் , இன்று இங்கே வந்து நிற்கிறேன் .

( இது நல்லதா , கெட்டதான்னு நீங்கதான் சொல்லணும் :)



மிகச்சிறந்த எழுத்தாளர்கள் இங்கிருந்து உருவாகி இருக்கிறார்கள் . , உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் .....

தமிழகத்தில் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்

குறுந்தகவல் இதழ்கள் : ஆசிரியர்கள்



கேகேஆர்-ன் SMS ஹைக்கூ: கன்னிக்கோவில்ராஜா,சென்னை[9841236965]

தேசிங்குராஜா குறுஞ்செய்தி இதழ்: இயற்கை சிவம்,விழுப்புரம்
[9941116068]

கேகேஐ குறுஞ்செய்தி இதழ் : கொள்ளிடம் காமராஜ்,திருச்சி

[9894058651]

சுந்தர் குறுஞ்செய்தி இதழ் : அண்ணாமலை,ஆரணி

[9842106170]

மழைத்துளி குறுஞ்செய்தி இதழ் : சத்யா

எண்ணத்தின் வண்ணம் : எம்.எஸ்.பாபு

ஜெயம் குறுஞ்செய்தி இதழ் : ஜெயக் குமார், அந்தியூர்

[9842163703]

வாலிதாசன் குறுஞ்செய்தி இதழ் :பாரதி ராஜா,பனையடி ஏந்தல்

[9894887705]

சம்பூரணம் குறுஞ்செய்தி இதழ் : தமிழாளி,அழகாபுரம்

[8144260620]

ராகா குறுஞ்செய்தி இதழ் : ராஜீவ் காந்தி,செய்யாறு

[9786098440]

செந்தமிழ் குறுஞ்செய்தி இதழ் : ராஜீவ் காந்தி,செய்யாறு

[9688429731]

சித்தன் குறுஞ்செய்தி இதழ் : நித்யானந்தம்,மாமண்டூர்

[9095942789]

தெனாலி குறுஞ்செய்தி இதழ் :கலைவாணி

உதயம் குறுஞ்செய்தி இதழ் : செல்லதுரை ,ஓசூர்

[9578129090]

சிற்பி குறுஞ்செய்தி இதழ் : ரம்யா,மாமண்டூர்

லிங்கம் குறுஞ்செய்தி இதழ் : ராமலிங்கம்,சிறுவந்தாடு

[9976227703]

யவசம் குறுஞ்செய்தி இதழ் : ஜானி அந்தோணிராஜ்,உறையூர்

[9842163703]

ஜாலி கவிக்கடல் : ஹயத்பாஷா , சென்னை

[9952071178]

தெரியுமா ? :ப்ராங்ளின் குமார்

[9843921471]

மற்றும்

யாழிசை : யாழி ,கோவை

[9976350636]




வேரின்றி மண்ணிலே நிற்பதாய் எண்ணியே
பாரமாய் எண்ணாதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரப் பாய்வோம்;யாம்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..


இந்த விதையை என்னுள் வித்தவர்கள் இவர்கள்


புதிய படைப்பாளிகளை உருவாக்கும்

இவர்களின் உன்னத உள்ளத்தை உணர்ந்து கொள்வோம் !

இவர்களின் தன்னலமில்லா உழைப்பு சிறக்க வாழ்த்துவோம் !!


சந்திப்பில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதி :


(சரஸ்வதி பஞ்சு (உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் , திருச்சி தலைமை) , கிரிஜா மணாளன், சேதுமாதவன் , சி.ம.சரவணன், ஆங்கரை பைரவி, நடராஜன்,கொள்ளிடம் காமராஜ்,முத்து நிலவன் ,பிச்சை முஹைதீன்,தஞ்சை மனோகர்,பேராசிரியர்.சந்திரா பெருமாள்,பாபு, தனலெட்சுமி பாஸ்கரன்,சேலம் சுமதி,ஜோதி லட்சுமி, சோமசுந்தரம்,ஸ்ரீகாந்த்(ஆல் இந்தியா ரேடியோ),யாழி , நாணல்காடான்,ப்ராங்ளின்குமார்,விநாயக மூர்த்தி, லெட்சுமணன்,மு.வேலா,அய்யாவாடி சத்யா,ஜெயக்குமார்,கீரைத்தமிழன்,ராஜீவ்காந்தி,சந்திரசேகரன்,சார்லஸ்,உதயகுமாரன் , யோகானந்தன், குமாரப்பாளையம் துரை, மற்றும் பெயர் அறியமுடியாத சகோதரர்கள் பலர் ...

வழக்கம்போல நான் தாமதம் :( . கோவையில் ஒரு விழாவில் கலந்துகொண்டு 11 மணிக்குக் கிளம்பி 1.45க்குத்தான் போய் சேர்ந்தேன் . காலை நிகழ்ச்சி முடிந்து பலர் கிளம்பி இருந்தனர் )



வாழ்க உறவுகள் !

--
என்றும் அன்புடன் -- துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

Wednesday, September 8, 2010

பதிவுகள்(2) : வாழும் வழிகாட்டி




14.04. 2000 :

தாதன்குளம் , தூத்துக்குடி மாவட்டம் . ஒரு பள்ளிக் கூடம கட்டும்வேலை சம்பந்தமாக எனக்கு ஒரு அழைப்பு . 13மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் தலைவர் , தமிழகத்தின் குறிப்பிடத்தக்கப் பெரியவர்களுள் ஒருவரை சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணமே பெரும் மகிழ்வைத் தந்தது . ஒரு கார்ப்பொரேட் அலுவலகம் , ரிசப்சனிஸ்ட் , நுனி நாக்கு ஆங்கிலத்தில் கேள்வி பதில்கள் என சில எதிர்பார்ப்புகள் / ஒத்திகைகளுடன் கிளம்பிச் சென்றேன் .

தோட்டத்து பண்ணைவீட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒருசிலரைத் தவிர நான் எதிர்பார்த்த பரபரப்பு ஏதுமில்லை . கதர்துணியில் தைக்கப்பட்ட பனியன் , பழைய நைந்துபோன தேங்காய்ப்பூத்துண்டுடன் ஒரு பெரியவர் , வந்திருந்த யாரையோ கார் கதவைத் திறந்துவிட்டு , வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்.

வாசலில் நின்றுகொண்டிருந்தேன் . காத்திருந்த வேளையில் மெலிதான பதட்டம் . கைகள் பக்கதிலுள்ள வேப்பமரத்தின் இலைகள் ஒவ்வொன்றாக கிள்ளிக் கொண்டிருந்தது .

சிறிது அமைதி . பின்னாலிருந்து எனது தலையில் செல்லமாக ஒரு குட்டு விழுந்தது . அதே பெரியவர் பின்னால் நின்றிருந்தார் .

’’அந்த மரம் உங்களை என்ன பண்ணுச்சு கண்ணு ’’

தீர்க்கமாக எனது கண்களுக்குள் பார்த்துவிட்டு

“தம்பிக்கு சாப்பிடக் கொடுங்க”


எனச் சொல்லிவிட்டு உள் நோக்கி சென்றுவிட்டார் .மரம்தானே , இலைதானே என சாதாரணமாக நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அந்தக் கேள்வி சம்மட்டி அடியாய் விழுந்தது . ஏதோ தவறாக செய்து கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரியத் தொடங்கியது அந்த நொடியில் .

உள்ளே சென்றேன் . வெளிமுற்றத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார் அவர் .

‘எங்கே போனாலும் இவருதான் இருக்காரு ,யாராய் இருக்கும் ?’


மேற்கொண்டு விசாரிக்க அருகில் யாரும் இல்லை . மெதுவாக அவரிடமே விசாரிக்க முடிவு செய்தேன் .

”இங்கே சேர்மன்.குப்புசாமி சார் அவர்களை பார்க்கணும்”


”சொல்லுங்க கண்ணு , நான் தான் குப்பன்”

இடி இறங்கியது போல உணர்ந்தேன் . எனது கணிப்புகள் / எதிர்பார்ப்புகள் எல்லாம் குலைந்து நொடியில் பாலையில் ஒருபிடி மண்ணைப்போல என்னை உணர்ந்தேன் .

இந்த அளவுக்கு எளிமையாய் நான் இதுவரையில் யாரையும் சந்தித்ததில்லை .அப்போதைக்கு இருசக்கர வாகனத்திலிருந்து நான்கு சக்கரத்திற்கு மாறி இருந்தைதையே நான் உலக சாதனைபோல எண்ணியிருந்தது அப்போதுதான் எனக்கு உறைத்தது . அய்யாவின் சந்திப்பு வாழ்க்கையில் புதிய மாற்றத்தை எனக்குள் உரைத்தது .
எனக்கான போதிமரம் அங்கே இருந்தது .

நான் வந்து சேர்ந்த இடம் பற்றி தெரியத் தொடங்கியது எனக்கு. உழைப்பின் பொருள் புரிய ஆரம்பித்தது எனக்கும் . புதியதாய் ஒரு உலகம் விரிய ஆரம்பித்தது எனக்குள்.

அவர்
ஆர்.வி.எஸ்.கல்வி அறக்கட்டளையின் தலைவர் .
திரு.கே.வி. குப்புசாமி அய்யா .அவர்கள்
. 69 வயதிலும் அரை நொடி ஓயாமல் அனைத்து இடங்களிலும் சுழன்று வருகிறார் . கல்வித்துறையில் மிகப் பெரிய சாதனையாளர் . இங்கே அவருக்குள் மறைந்திருக்கும் விவசாயியையும் , மனித நேயத்தையும் வெளியுலகப் பார்வைக்கு எடுத்து வைப்பதே கட்டுரையின் முதன்மை நோக்கம் .

திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் புதிய செயல் முறைகளுக்குச் சொந்தக்காரர் அவர். திட்டங்களை விளையாட்டாய் ஆரம்பித்து ,வித்தியாசமாய்த் தொடர்ந்து , விதிமுறைகளைக் கடந்து , விசுவரூபமாக்கிக் காட்டுவார்.

( ஏடுத்துக் காட்டாக
: மாலை ஆறுமணி . செம்மண்சரல் அடித்து நிரப்பப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளி மைதானத்தில் வந்து அமர்ந்தார் . மெதுவாக சில கற்கலைப் பொறுக்க ஆரம்பித்தார் . நாங்களும் தொடர்ந்தோம் . அந்த வழி வந்தவர்களும் தொடர்ந்தார்கள் .மூன்றே நாட்கள் .. விளையாட்டாக அந்த மைதானமே குழந்தைகள விழுந்து விளையாடும் அளவுக்கு சுத்தமாகி இருந்தது )

2010 :பத்தாண்டுகளில் மழைமறைவுப் பிரதேசங்களாக இருந்த , மேய்ச்சல் நிலங்களாக , காலடித்தடமே படாத வறண்ட இடங்களில் மழையின் நேசம் , மண்வாசம் வீசத்துவங்கி இருக்கிறது

தரிசாகக் கிடந்த இடங்களை சோலைகளாக்கி , மரங்களுக்கு நடுவில் மழை நீரை சேகரிக்க ஒரு குளம் வெட்டி , வறண்ட் பூமிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவைத்து , தன்னை சுற்றியுள்ள விவசாயிகளின் வாழ்வு உயரவும் வழி செய்திருக்கிறார் .

ஒரு தனிமனித முயற்சியில் ,பத்தாண்டுகளில் இது சாத்தியமென்றால் , ஆள்வோரும் ,அதிகாரவர்க்கமும் அய்யாவின் பாதையில் தொடர மனம்வைத்தாலே போதும் ., தமிழகம் சொர்க்கமாகும் காலம் வெகுதொலைவில் இருக்காது .


அசோகர் மரம் நட்டினார் ,கரிகாலன் குளம் வெட்டினார் என்று பள்ளிப்பாடங்களில் வரலாறாகப் படித்தை நேரில் காணும் வாய்ப்பும் , அந்நிகழ்வில் பங்குபெறும் பாக்கியமும் பெற்றதே எனது பிறவிப் பயனாகும் .

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பரந்து விரிந்த மிகப் பெரியக் கூட்டுக் குடும்பம் இவருடையதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது . குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 லட்சங்களுக்கும் மேல் . ஆம் அவர் தனது குழந்தைகளாக பராமரித்து வரும் மரங்களின் எண்ணிக்கை இது . ஒவ்வொரு மரத்திற்கும் தனித்தனி கவனிப்பு முறைகள் , வளர்ச்சிக் குறிப்புகள் , சொட்டு நீர்ப்பாசன வசதிகள் , இயற்கை உரங்கள் .

எங்கோ ஒரிடத்தில் ஒருமரத்தின் கிளை முறிந்தாலும் உடனடியாக செய்தி அவரை வந்து சேரும் அளவுக்கு மிகப்பெரிய அமைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். மரங்களின் மேல் பாசம் கொண்ட ஒரு தனி மனிதச் சாதனையாகும் இது .


அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் பல கட்டிடங்கள் நேர்கோட்டில் இல்லாமல் சில இடங்களில் விலக்கிக் கட்டப் பட்டிருக்கும் . சிறிது கூர்ந்து கவனித்தால்தான் தெரியும் .அது பொறியாள்ர்கள் தவறல்ல என்பதும் ,அவை மரங்களுக்காக தனது நேர்த்தியை விட்டுக்கொடுத்து ஒதுக்கிக் கட்டப்பட்டுள்ளன என்பதும் .இங்கே கட்டிடமே முதன்மை என்றாலும் , ஏதாவது ஒரு மரத்தின் ஒரு கிளை கூட இதனால் ஊனமாக அவர் ஒருபோதும் ஒத்துக்கொள்ள் மாட்டார்

மரம் வளர்த்து ,மண்ணுயிர் போற்றி , வரும்காலம் காக்கும் மாமனிதரின் அருகில் குடியிருக்க ஆண்டவனும் விரும்புவார் . விரும்புகிறார் .

ஆம் .... அய்யா இருக்கும் கோவை , சூலூரில் அவரது அயராத உழைப்பில் ,தமிழகத்தின் ஆறுபடை முருகனும், ஆந்திரத்தில் இருந்து பூதேவி, ஸ்ரீதேவியுடன் திருப்பதியும்
எற்கனவே குடிகொண்டு விட்டார்கள் .

12.09.10ல் கேரளத்தில் இருந்து பகவதி அம்மனும் குடியேறுகிறார்

உழைப்புக்கு ஒர் உண்மையான எடுத்துக்காட்டு .
உலகைக் காக்கும் மரம் வளர்ப்புக்கு ஒரு வாழும் வழிகாட்டி .

பலன் எதிர்பாராமல் பாரம் சுமந்து கொண்டிருக்கிறார். அதையும் கடமையாய் செய்து கொண்டிருக்கிறார் .

அவரது அயராத உழைப்பினை உணர்ந்து கொண்டுள்ளோம் எனபதை அவருக்குத் தெரியப் படுத்துவோம் . உற்சாகம் அளிப்போம் . [அய்யாவின் அலைபேசி எண் : 9443169333 , 9842288333]

அய்யா அவர்களின் வழி தொடர்வோம். வருங்காலம் காப்போம் !


எனக்கு முடிந்த அளவில்
அய்யாவுக்கு ஓரு குறள் அதிகாரம் :


உலகத்தைக் காக்க மரம்வளர்ப்போர் சுற்றி
உலவ விரும்பும் இறை...........................[01]

மரம்வளர்த்து மண்ணுயிர் காப்போர் அருகில்
குடியிருக்க எண்ணும் இறை.......................[02]

இரங்கும் மனம்கொண்டு இல்லாதோர் போற்று;
இறங்கும் உனக்குள் இறை........................[03]

செந்தமிழால் வாழ்த்துவார்; வந்தாரைப் போற்றுவார்
கந்தனே சாமி அவர்க்கு...........................[04]


ஐயன் அருகிருந்தால் ஐயம் தெளியும்;
வாய்க்கும் சிறந்தநல் வாழ்வு......................[05]

எட்டு திசையும் எடுத்துரைப்போம்; அய்யனென்றால்
நட்பென்றும் ஓர்பொருள் உண்டு...................[06]

எங்கிருந்து வந்தாலும் நல்அபயம் வாய்த்திடும்;
கொங்கில் கிடைத்திடும் வாழ்வு....................[07]

எதுவும் நிலையில்லை என்ப(து) உணர்ந்தார்க்(கு)
எதுவும் மலையில்லை இங்கு.....................[08]

வாழ்த்த வயதில்லை; வானுயர் அய்யாவின்
வாழ்க்கைத் தடம்தொடர் வோம்...................[09]

காணும் கனவெல்லாம் மெய்ப்படும்; மொத்தமாய்
வானமும் நம்வசப்ப டும்.........................[10]


என்றும் அன்புடன் -- துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

Tuesday, August 31, 2010

வழியா இல்லை வாழ்வதற்கு ...!


இருளைவிட வேகமாய்
சூழ்ந்தது கருமேகம் ..
இருப்பதை எல்லாம்
சுழற்றியடித்தது சூறாவளி..
கட்டுக்குள் வராமல்
கடுமையானது பேய்மழை..
கட்டவிழ்த்து விட்டதுபோல்
கரைபுரண்டது காட்டாற்று வெள்ளம்..

எல்லாம்
முடிந்த பின்னர்

அதிகாலை இருளை
வேகமாய் விரட்டியபடி
வெளியே வருகிறது சூரியன்....

கரையில்
வேரடி மண்ணோடு
தரையில் வீழ்ந்திருந்தன
அறுபதடி மரங்கள்....

அருகில்
தலையின் மேலிருந்த
சின்னஞ்சிறு நீர்த்துளி
வெயிலில் உருகிக் கலைய

தலை நிமிரத் தொடங்குகின்றன
ஆறங்குலப் புற்கள் ............
.

Thursday, March 11, 2010

பின்னிரவில்...... !


முன்னிரவு வானத்தில்
கண்ணில் படுவதையெல்லாம்
கண்ணுறங்கும் முன்
பாடிவைத்தனர் புலவர்கள்...
கேட்டதைக் கண்டும்
ரசித்தனர் புரவலர்கள்.....

நிலவும் நிலவுசார்ந்த மேகமும்
உலகம்புகழ உயர்ந்துவிட்டன

உங்களுக்குத் தெரியுமா ?

பின்னிரவு வானத்தில்
நிலவினைக்காட்டிலும்
அதிசயங்கள் பல உண்டு

மின்னியபடியே நகரும்
நுண்ணிய நட்சத்திரங்கள் ....
தாக்குவதுபோல வேடிக்கையாய்ப்
பயமுறுத்தும் எரிகற்கள்.......
யாரோ வரையப்போகும்
கோலத்திற்கான புள்ளிகளாய்க்
காத்திருக்கும் விண்மீன்கள்.....
வர்ணசாலமும் காட்டும்
நிர்மலமான மேகங்கள்.......

கவிஞனும் காண்பவனும்
உறங்கிப்போவதால்
கவின்மிகு அற்புதங்களை
வெளியுலம் அறியவில்லை

ஆனாலும்.....

நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
தினமும் அந்த அதிசயங்கள்.....
என்றாவது ஒருநாள்
எப்படியும் கிடைக்கும்
அங்கீகாரம் என்ற நம்பிக்கையில்...

என்னைப்போலவே...........


.

Thursday, January 7, 2010

கவனம் குவி / காரியம் கூடும்


கவனம் குவி / ஒரு நிலைப் படுத்து :

கோவில் திருவிழா...

அலையலையாய் சனத்திரள்
ஒலிபெருக்கியின் அலறல்
செவிகிழிக்கும் பலகுரல்...

யானைபுகுந்த
பாத்திரக்கடையின் கூக்குரலும்கூட
கடலில் கரைந்தக் காயமாய்ப்
காணாமல் போகுமதந்த பேரிரைச்சலுள்

ஓரமாய் அமர்ந்திருந்த
பார்வையற்ற அவனின்
இதழோரம் தோன்றியதோர்
கீற்றுப் புன்னகை…….

சுற்றியுள்ள எல்லாம் ஒதுக்கி
தட்டில் விழும் நாணயத்தின்
மெல்லிய ஒலிக்காக
மட்டுமே காத்திருக்கும்
அவனது செவிகள்
சொன்ன சேதிகேட்டு …………..

.

Thursday, December 31, 2009

இந்த ஆண்டே உனக்குள் வெடிக்க வாழ்த்துகள்


பெருவெடிப்பு/திருப்புமுனை:

சிறுமீன்கள் ஒற்றைக்
காலைச் சுற்றிவர,
பெரும் கெண்டைக்காக
மறுகாலைத் தூக்கித்
தவமிருக்கும் கொக்காய்....

முயல்கள் முன்னே
துள்ளி விளையாட
புள்ளி மானுக்காகப்
பதுங்கியிருக்கும் புலியாய்....

வந்ததை எல்லாம் விழுங்கி
தனக்கான எழுத்துக்காகக்
தன்னையேத் துடைத்து
எதிர்பார்த்திருக்கும் கரும்பலகையாய்....

காத்திருக்கிறேன் நான் .......
எனது வாழ்வின்
பெருவெடிப்புக்காக (பிக் பாங்க்)
.......................................................

நிகழ்வும் ,தகவும் சந்திக்கும்
அந்தப் புள்ளியே நிர்ணயிக்கும்

நான்
புத்தனாய் ஆவதையும்
சித்தார்த்தனாய்த் தொடர்வதையும்
……………


இனிய உள்ளங்களே....
இந்த வெடிப்பு உங்களுக்குள்
இந்த ஆண்டே நிகழ
இனிய வாழ்த்துகள் ,,,

Friday, December 11, 2009

முயன்றால்தான் முடியும் உன்னால்


எதிரே...

கரடு முருடாய்
மேடும் பள்ளமுமாய்
கல்லும் முள்ளுமாய்
தள்ளிவிடத் தயாராய்ப் பாதை

நாற்புறமும்
கூர்மிகு முட்களுடன்
குத்திக் கிழிக்கக் காத்திருக்கிறது
அடர்ந்த காத்தாடி முள்க்காடு

காலுக்குச் செருப்பிருந்தும்
மேலுக்குப் போர்வையிருந்தும்
தொடர இயலாமல்
மேலும் முயலாமல்
திகைத்து நிற்கிறேன்
நான்

அரவமற்ற அந்தப் பொழுதில்
என்னைத் தாண்டி தன்
பழையசட்டையைக் கழட்டிவிட்டு
பளபளக்கும் புதுத்தோலுடன்
தயங்காமல் நிதானமாய்
காடுகடக்க நுழைகிறது
அரவம் ஒன்று

.

Monday, October 5, 2009

பார், பார்,.....காத்திருக்கும் பார் ...!


பார் ! பார் !!

அதிகாரமையத்தின் ஆளுமையைப் பார்
அதிகாரவர்க்கத்தின் ஆணவத்தைப் பார்

அதிகாரிகள் அடக்குவதைப் பார்
வியாபாரிகள் விழுங்குவதைப் பார்

பாதிக்கப்பட்டோரின் சூழ்நிலை பார்
மிதிக்கப்பட்டோரின் கீழ்நிலை பார்

ஆசீர்வதிக்கப்பட்டோரின் வளமை பார்
அவதிப்படுவோரின் நிலமை பார்

வளமை ஓரிடமே சேரும் காரணம் பார்
வறுமையை ஓட விரட்டும் நிவாரணம் பார்

பணம் கைகொட்டி வரும் வலம் பார்
குணம் கைகட்டி நிற்கும் அவலம் பார்

அணுதினமும் உதிரும் வியர்வை பார்
அவனுதிரமாவது உயரும் தீர்வைப் பார்

களம் இருந்தும் திணறுவோர் பார்
தளம் புகுந்தும் தடுமாறுவோர் பார்

உனக்காகக் காத்திருக்கிறது பார் - ஆம்
உனக்காகவே காத்திருக்கிறது இந்தப் பார்

உன்வரவை எதிர்பார்த்திருக்கிறது பார் - ஆம்
உன்வரவுக்காகவே பார்த்திருக்கிறது இந்தப் பார்

வா !

எழுந்து வா !
வீறுகொண்டு எழுந்து வா !
விதி சமைக்க விரைவாய் எழுந்து வா !
வீர நடைபோட்டு விரைவாய் எழுந்து வா !

Thursday, September 17, 2009

பொய் X பொய் = மெய் = நான்


கண்ணால் காண்பதும் பொய் !

ஆம்....! இது பொய் !

கல்லுடைக்கிறேனா? - நான்
கல்லுடைக்கிறேனா மலையில்?

நன்றாகப் பாரும்...

உடைத்துக்கொண்டிருக்கிறேன் மலையை !
சிதைத்துக்கொண்டிருக்கிறேன் அதன் நிலையை !!

காதால் கேட்ப்பதும் பொய் !!


ஆம்...! இதுவும் பொய் !!

மணலுக்குள் எனைப் புதைத்துவிட்டதாய்
மாட்சிமைப் பேசித் திரிவோரே ....

இதையும் கேளும் ....

கவிழும் மணலுக்காகவே - நான்
காத்திருக்கும் விதையாவேன்

மூழ்கியபின் ஊடுருவுவேன் - நான்
ஆழமாய் வேர்விடுவேன்

வீரியமாய் வள்ர்வேன் - நான்
விருட்சமாய் விரிவேன்

தீர விசாரிப்பதே மெய் !!!

ஆம் !....


தீயினில் விழுந்த அங்கமல்ல - நான்
தீயினில் பழுத்த தங்கம்

இருவிழியில் நெருப்பை உமிழ்வேன் - நான்
எரிகுழம்பின் இருப்பை இகழ்வேன்

ஒருநாள்......

தீயிலிருந்தே விளைந்து வருவேன் - நான்
தீயினிற்கே விருந்தும் தருவேன்