Showing posts with label பாடம். Show all posts
Showing posts with label பாடம். Show all posts

Monday, January 3, 2011

நேரான பாதையை விட்டு விலகியும்....

திரும்பிப் பார்க்கிறேன் :

நிதானமாய்ச் செல்லும்

நேரான பாதையைத் தவிர்த்து...

சுற்றிச் சுழலும்

மாற்றுப் பாதையைத் தேர்ந்து...


சீரற்ற வேகத்தில்

சரேலென வளைந்து...

இடமும் வலமுமாய்

திடீரென நுழைந்து...

குறுக்கும் நெடுக்குமாய்

வேகத்துடன் விரைந்து...

திகைக்கவைக்கும் திருப்பங்களுடன்

திசையெல்லாம் பயணித்து.........


முடியுமிடத்தில் இருந்து

திரும்பிப் பார்க்கிறேன்


அழகாய்

உருவாகி இருந்தது

கோலம் ஒன்று ............!

Sunday, October 24, 2010

ஏதோ புரிய ஆரம்பிக்கிறது எனக்கு ...!


























காலை வேளையில் கடுமையாய்

கலவரப் படுத்துகிறது மேகம்....


அடிக்கும் காற்றில் தடுமாறி

கூட்டுக்குள் அடைகிறது காகம்....


நடுஇரவுப் பொழுதைப் போல்

திரண்டு நிற்கிறது இருட்டு.....


தரையில் தஞ்சம் புகுந்திட

தயாராகிக் கொண்டிருக்கிறது மழை...


நிலையைத் தாண்டிய பின்னரும்

நிலையில்லாமல் தத்தளிக்கிறது மனம்...


ஒரு நாள் மட்டும் தானே...

விடுப்பு எடுத்தால் என்ன..!

குடியா முழுகி விடும் ?

ஒருசில திட்டங்களோடு

ஓய்வெடுக்க முடிவெடுத்து

கதவைத் திறக்கக் கைவைக்கிறேன்


உணவைத் தேடியபடி

கதவின் இடுக்கின் ஊடாக

வீட்டின் உள்ளிருந்து

வெளியேறிக் கொண்டிருக்கின்றன

வரிசையாய் எறும்புகள்...........

.