Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Tuesday, July 5, 2011

க(தை)விதை : அந்தக் கட்டை விரல் ........!


குருதட்சணை என்றபெயரால் குரூரமாய்க்

குறிவைத்து வெட்டி எறியப்படுகிறது

கட்டைவிரல் ஒன்று ........


கற்றுத்தர மறுத்த குருவின் தேவையை

நிறைவேற்றிய மகிழ்ச்சியில் திளைக்கிறான்

விரலை வெட்டிக் கொடுத்தவன்...


தானே கற்றறிந்த மாணவனின் கலையை

வேரறுத்த களிப்பில் மிதக்கிறார்

விரலைக் கேட்டுப் பெற்றவர்...


குருதட்சணை கொடுப்பதற்காக

அந்தத் துரோணரினரின் கட்டைவிரலுக்குக்

குறிவைத்துக் காத்திருக்கிறேன்.....


ஏகலைவனை குருவாகக் கொண்டு

வித்தை பயின்று கொண்டிருக்கும்

நான்........



[நன்றி :- கரு: யாழி]

Wednesday, September 15, 2010

தொடக்கம் : (வெண்பாவும்,என்பாவும்)


தொடக்கம் : ( வெண்பா / நேரிசை)

மரத்தினடி நோக்கிவரும் ஆதாம் ; உருகி

வரவுக்குக் காத்திருக்கும் ஏவாள் - அருகில்

உருவில் குறைந்ததோர் ஆப்பிள்; தொடங்க

மரத்தின்மேல் காத்திருக்கும் பாம்பு





தொடக்கம் : [என்பா / க(தை)விதை ]


மரத்தின்மேல் வலைவிரித்த பாம்பு;
மரநிழலில் காத்திருக்கிறாள் ஏவாள்; அருகில்
கடிக்கப்பட்ட ஒரு கனி ; தொலைவில்............
வந்து கொண்டிருக்கிறான் ஆதாம் !


( நன்றி:கரு : யாழி )