Showing posts with label பயணக் குறிப்பு. Show all posts
Showing posts with label பயணக் குறிப்பு. Show all posts

Wednesday, May 25, 2011

அழகர் சாமியின் குதிரையும்,எங்கேயும் காதலும்...!



மன்னிக்கவும் ..கொஞ்சம் தாமதனான பதிவுக்காக :

12ம்தேதி காலை...கோவையிலிருந்து ஒரு முக்கிய அழைப்பு...13ம்தேதி ஒரு தொழில்முறை சந்திப்பு...கண்டிப்பாகக் கலந்துகொள்ளவேண்டும் ....13ல் சாலை நிலவரம் எப்படி இருக்கும் என்றுத் தெரியவில்லை..அதனால் இன்றே செல்ல முடிவு செய்து அவசரமாகக் கிளம்பினேன் ...குழந்தைகளும் சேர்ந்துகொள்ள ..குதூகலமாகக் கிளம்பினோம்...

13..காலை...கோவை: தொலைக்காட்சிமுன் நாங்கள் ஆவலுடன் அமர்ந்திருக்க...உள்ளிருந்து ஆளாளுக்கு அவர்களது நம்பிக்கையைக் கொட்டிக் கொண்டிருக்க... மின்தடை 9-12 வரைக்கும் ........

சரி...இனி கதைக்கு ஆவாது..எல்லாரும் கிளம்பி ...எந்தக் கவலையும் இன்றி ஊர் சுற்றி ...சந்திப்பையும் முடிக்கும் போது ஆட்சி மாறி இருந்தது .......

ஆனால் அதே வழக்கமான...அதே பரபரப்பில் கோவை..எந்த விதமான மாற்றமும் இன்றி ........

வந்தவேலை சீக்கிரமே முடிந்ததால் .....குழந்தைகள் ஏதாவது படம் பார்க்க ஆசைப்பட.....கேஜி காம்ப்லக்சில் நுழைந்தோம் .... 4 அரங்கிலும் வாரிசுகளின் படங்கள் ........எனது முதல் தேர்வு

‘அழகர்சாமியின் குதிரை ‘
Azhagarsamiyin-Kuthirai-Tamil-Movie-Stills-2.jpg
சிறப்பம்சங்கள் :
1)அச்சு அசலாய் ஒருகிராமத்தை கண்முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்...பேருதவியாக ஒளிப்பதிவாளர்...உறுத்தாத இசையமைப்பாளர் ...படம் பார்க்கிறோம் என்ற நினைப்பே வராமல் ..இயல்பாய் நம்மைத் தோளில் கைபோட்டு அழைத்துச் செல்லும் வசன கர்த்தா........

2)பாத்திரமாகவே மாறிப்போன தாநாயகன் அழகர்சாமி , இன்ஸ்பெக்ட்டர், முற்போக்குப் பெரியம்மா

3) மிக முக்கியமாக குதிரைக்காக கதாநாயகன் போடும் சண்டை ... ஓடிப்போய் அவனுக்கு உதவவேண்டும் என்னும் அளவுக்கு இயல்பானது

4) அங்கங்கே வரும் இயல்பான பாத்திரங்கள் ( செவிடாக நடிக்கும் கிழவி, சர்பத்துக்கு காசு கேக்கும் பையனை அடிக்கும் அப்பா, ஊர்ப் பெரிசுகள் ,பரோட்டா சூரி )

5) கலக்கல் நகைச்சுவைக் குத்தல்கள்

6)கதா நாயகன் பெண்பார்க்கும் இடம்..மிக அழகானபெண் என்பதால் வேண்டாம் எனறு மறுக்க...பெண்ணோ மனதுமட்டும் போதுமானது எனச் சம்மதிக்கும் இடம் ....

7)கையைத் தொட்டுப் பார்க்கலாமா என்று கேட்டுவிட்டு தொடும் இடம் ...கவிதை :)

8) குழந்தைத் தோழிலாளர்கள் / கிராமங்களின் பொருளாதார அவல நிலையை காட்டும் இடம்

9) மூட நம்பிக்கையை கிண்டல்செய்யும் தொணி / பாணி

10) மலையக மக்கள் வாழுமிடத்தை/ போக்குவரத்து நிலையை உள்ளதை உள்ளதுபோல காட்டி இருப்பது

சறுக்கல்கள் :
1) அந்த மைனர் ....கிராமத்தின் மேலுள்ள மதிப்பை எல்லாம் மொத்தமாய்ப் போட்டு கொளுத்தும் பாத்திர வடிவமைப்பு ... நகைச்சுவைக்காகத்தான் என்று எடுக்கவே முடியாது .... பொது இடத்தில் எதிரில் உள்ள (திருமணமான) பெண்களை கண்சாடையிலேயே பேசி தனியாக அழைத்துச் சென்று விடுவாராம் ....பெண்களும் அவனுக்கு வழிகாட்டி முன்னே செல்வார்களாம் ....மிகக் கேவலப் படுத்தி இருக்கிறார்கள் ...

2) மலையாள மாந்தரீகர் ...இந்தப் பாத்திரம் தவிர்த்திருக்கப் பட வேண்டிய ஒன்று .... நம்ம ஊர் ப்ராடாகவே காட்டி இருக்கலாம் . வேறு மொழி பேசுபவர்களை ஏமாற்றுக்க்காரராகக் காட்டுவது இனவேற்றுமையையே வளர்க்கும் ... ( நம்மை அவர்கள் ‘பாண்டி’ என்று சொல்வதை எதிர்க்கும் நடு நிலையாளர்கள் ..இதையும் எதிர்க்க வேண்டும் ... யார் முதலில் நிறுத்துவது என்பதுதான் இப்போதைய கேள்வி... அது நாமாகவே இருப்போமே ).

3) பல இடங்களில் இடறும் லாஜிக் ( அவ்ளோ பெரிய மரக்குதிரையை தனியாளாக ஆசாரி இருமுறை யாருக்கும் தெரியாமல் இரவு மாற்றுவது ....குதிரைக்கு திடீரென வீரம் வருவது ....கடைசியில் குதிரையை கிராமத்து மக்கள் கண்டுகொள்ளாமல் விடுவது ...)

4) அந்த வில்லன்...தெளிவில்லா பாத்திர அமைப்பு ..(ஊர்மக்கள் நடுவி வைத்து குதிரைக்கு விசம் கொடுத்தா மாட்டிக்குவோமுன்னு கூடவாத் தெரியாது?)

5) சாதி எதிர்ப்பை உயர்த்திப் பிடிக்க நினைத்து , மூட நம்பிக்கைக்கு சல்யூட் அடித்திருக்கும் க்ளைமாக்ஸ் (திருவிழா முடிந்தவுடன் போலிச் சாமியார் சொன்னது போலவே வரும் மழை)

பொதுவாக : சில குறைகளைத் தவிர்த்து ..பல பரிமாணங்களை சிறப்பாகப் பதிந்துள்ள நல்லதோர் படம்

படம் முடிந்து வெளியே வந்தோம் ........

வாசலில் நண்பர் அடுத்த இரவுக் காட்சிக்கு 6 டிக்கெட்டுகளுடன் சிரித்தபடியே நிற்கிறார் ......:)))

Popcorn-01-june[1].gifpopcorn-02.gifpopcorn-01.gif(அப்போ.....இதுதான் இடைவேளையா ?)


எங்கேயும் காதல்

enkeeyum kathal.jpg

இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல்கள் உள்ள படம் மற்றும் ப்ரபுதேவாவின் நடனம் என்ற குறைந்த பட்ச உத்திரவாதத்துடன் உள்ளே நுழைந்தோம்..

ப்ரான்ஸ்-ல் ப்ரபுதேவா..... காதல் பற்றிய ஒர் அற்புத அறிமுகத்துடன் படத்தைப் பாடலுடன் வித்தியாசமாய் ஆரம்பிக்க...ஆகாவென்று நானும் இருக்கையில் நன்றாக நிமிர்ந்து உக்கார... எழுத்துப் போட ஆரம்பித்த உடனேயே இடி இறங்க ஆரம்பித்தது தலைக்குள்...

..ப்ரான்ஸில் காதலென்றால் ‘உதட்டோடு உதடு' முத்தம் கொடுப்பது மட்டும்தான்...அதுவும் தொடர்ந்து மணிக்கணக்கில் நாள்கணக்கில்...பார்க்கில், பாதையில், பஸ்ஸில், பைக்கில், சாலையில் , கைகோர்த்துப் போகும்போது...இவ்வளவு ஏன்????...ஆய் போகும்போதுகூட விடாமல் முத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்களாம் அங்கே .......

(இந்தப் படம் அங்கே வெளியாகாமல் இருக்க ஆண்டவனை வேண்டுவோம்.....அவர்களை இந்த அளவுக்குக் கேவலப் படுத்தியதற்காக நம்மேல் போர்த்தொடுத்தாலும் ஆச்சரியமில்லை )

தீராத விளையாட்டுப்பிள்ளை நம் கதா நாயகன் ...தினம் ஒரு பெண் வேண்டும் அவர்க்கு...ஆனால் காதல் என்றால் மட்டும் காத தூரம் ஓடுவாராம் ....கதா நாயகியை மட்டும் சீண்ட மாட்டாராம்...

வெளி நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ்ப்பண்பாட்டின் சிகரம் நம் கதாநாயகி ...... நாயகன் அவளைத் தினமும் தவிர்த்து அவள் கண் முன்னாலேயே வேறு வேறு பெண்களை படுக்கைக்கு அழைத்துக் கொண்டு சென்றாலும் .....அவனைத்தான் காதலிப்பாளாம்........அரைவேக்காடு,லூசு, மொக்கை...எல்லாம் தாண்டி அதற்கும் மேலான விசித்திரப் பாத்திரப் படைப்பு..


நிற்க : ஒரு உண்மையை நம்பித்தான் ஆக வேண்டும் . இந்தப்படமும் மன்மதன் அம்பும் ஒட்டி உருவான இரட்டைக் குழந்தைகளாகத்தான் இருந்திருக்க வேண்டும் . ஆனால் ஒன்று முந்திப் பிறந்து விட்டது ...

எ.கா: ம.அம்புவில் கமலின் அறிமுகக் காட்சி....அந்தத் துரத்தல்...சண்டை ..எல்லாம் அப்படியே காட்சி / ப்ரேம் மாறாமல் ...இதிலும் இருக்கிறது ..கமலுக்குப் பதிலாக ரவி ..:)

காமெடி என்ற பெயரில் கேஸ் ட்ரபுளை மையமாக வைத்துக் கேவலமான/ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்தி இருக்கிறார் இயக்குனர் ...... இன்னும் தீராத அவரது கலைத்தாகம் அடுத்த படத்திலும் தொடர வாழ்த்துகள்.

ஒரு கட்டத்தில் என்னைப் பார்க்க ...எனக்கே பாவமாய்ப் போக ..ஆண்டவன் இருக்கிறான் என்பதை உறுதி செய்யும் விதமாக வந்தது இடைவேளை ....

ஒரு 10 நிமிடப் பெயிலுக்குப் பின் மீண்டும் ஜெயில் ஆரம்பம் ...

(எனக்கு)

சாலையில் கதாநாயகி சேலையில் அழகாக வந்து நிறக....அங்குள்ள வெளி நாட்டு இளைஞர்கள் ...ஓடிவந்து ‘வாவ்சொல்ல , கதா நாயகன் அவர்களிடம் ‘இவள் தமிழ்ப் பொண்ணுஎன்று தமிழில் அறிமுகப் படுத்த...

அதைப் புரிந்து கொண்டு அவர்கள் ”ஓ..5 மினிட்ஸ் ப்ளீஸ் என்று அவகாசம் கேட்டுவிட்டு

‘அரைமணி நேரத்தில் தமிழ் கற்கலாம்என்னும் புத்தகத்தோடு திரும்பிவர..ஆரம்பமாகிறது ஒரு அதகலப் பாடல்

மங்காய்..... நிலாவின் தங்காய்

வெளி நாட்டு நாக்குகளின் உச்சரிப்பில் அழகுத் தமிழில் பாடல்..வலுக்கட்டாயமாய் ஆங்கிலப்பாடல்களைச் சொருகும் சூழலில்...இப்படி ஒரு அருமையான சிச்சுவேசன்...அதுவும் மிகப் புதுமையாக.....சேர்ந்த சோர்வெல்லாம் கலைந்து மீண்டும் நிமிர்ந்து உட்க்கார்ந்தேன்....அருமையான நடனம் ...பாதிப்பாட்டில் எல்லாம் கெட்டு ஒழிந்து குட்டிச் சுவராகி விட்டதுL

அந்த லூசுக் கதாநாயகி இங்கேயும் நடுரோட்டில் நின்னுக்கிட்டே கனவுகான ...அந்த வாலிபர்களை ஒதுக்கிவிட்டு...கதா நாயகன் வந்து ஆட ஆரம்பித்துவிட்டான் ...சே.....இந்த எழவைத்தான் ஏற்கனவே பார்த்துக்கிட்டுத்தானே இருக்கோம் .......

என்னடா இது???? எப்படா முடியும் ??? என எனக்குள்ளேயே ஏங்க ஆரம்பித்தேன் ...( அட ..இப்படி ஏங்கித்தான் எவ்ளோ நாளாச்சுது !)

ஒரு காட்சி...கதாநாயகன் சோகத்தில் பேப்பரை / சோபாவைக் கிழித்து வீசும் காட்சி....அட..சொல்லவே இல்லையே விளம்பரத்தில் கூட !!!....ஆச்சரியமாக படத்தில் இந்த ஒருகாட்சி மட்டும் 3Dல் வைத்திருக்கிறாரா இயக்குனர் ?? என வியந்த என் எண்ணத்தில் உடனே மண்/குப்பை/பஞ்சு எல்லாம் விழுந்தது ....எனக்கு முந்தைய வரிசையிலிருந்து ஒரு மிதவாதி எதையோ (எதையோ என்ன எதையோ...சீட்டைத்தான்) கிழித்தி

வீசிக்கொண்டிருந்தார் .....அவரை ஆமோதித்து ஆதரவாகக் கைதட்டல்கள் ...

உள்ளே வந்ததிலிருந்து முதல் முறையாய் ஒரு சின்ன சந்தோசம் எனக்குள் துளிர்ந்தது

அட.. நாம மைனாரிட்டி இல்ல ..மெஜாரிட்டித்தான்... !

திடீரென எல்லாரும் எழுந்து நிற்கும் போதுதான் கவனித்தேன்...

படம் முடிந்துவிட்டதாம் ....கடவுளுக்கு நன்றி

(ஒரு நல்ல சுற்றுலா .... இப்படியாக முடிந்து போனது L

ஒரு முக்கிய வேண்டுகோள் :

திருட்டு விசிடி/டிவிடியில் படம் பார்க்காதீர்கள் !


இந்தப்படத்தை......திருட்டு விசிடி/டிவிடியில் கூடப் பார்க்காதீர்கள் !!

முடிவாக :

வீடு வந்து , திட்டு வாங்கிக்கொண்டே ஊருக்கு வந்து சேர்ந்த வேளையில்...ஆட்சி மாற்றத்திற்கு இடையே நடந்த ஒரு பயணம் முடிந்து போனது ......


வழக்கம்போலவே இப்பொழுதும் ...கண்விழித்து...பல்துலக்கி...காபி குடித்து ..வேலைக்குக் கிளம்பி.....

Thursday, April 14, 2011

எனக்குள் இருப்பவன்...தேடிப்பாருங்கள் ...உங்களுக்குள்ளும் இருப்பான் ......!

ஒரு பயணத்தின் முடிவில்..........

தூத்துக்குடி.....
மூன்றுபக்கமும் தொழிற்சாலைகளாலும் , ஒருபக்கம் துறைமுகத்தாலும் சூழப்பட்ட தொழில் நகரம் ....
’மால்கள் , காம்ப்ளக்ஸ்கள்’ என அல்ட்ராமாடர்ன் சிட்டியாக மாறிக்கொண்டிருக்கும் நகரம் ...

வெளியூர் சுற்றுப்பயணம் முடித்து காலையில்தான் வீடுவந்து சேர்ந்திருந்தேன் ..அம்மா ஒரு திருமண அழைப்பிதழோடு வந்தார் .

“தம்பி ..(என்னை தம்பி என்றுதான் அழைப்பார் ) ...ஒரு முக்கியமான கல்யாணம் ... போயிட்டு வந்திரலாம்” என்றார் .

எனக்கு சிறிது அசதியாக இருந்தாலும் சரி எனக் குளித்துக் கிளம்பினேன் .
காரில் ஏறும்பொழுது மெல்ல ”குலசாமி கோயில்ல கல்யாணம் .கார் கோயில் பக்கம் வரைக்கும் போக வழி கிடையாது “ என்றார் ...
”ஓ! ... நடக்கணுமா??? .. அப்போ என்னால வரமுடியாது .... நீங்க போய்ட்டுவாங்க ”என்று இறங்க ஆரம்பித்தேன் .

சட்டென என் கையைப் பிடித்து உக்கார வைத்தார்

” கண்டிப்பா போகணும் ...அப்பா வழியில் பையன் நெருங்குன சொந்தம் ..சென்னைல இருந்து இங்கே வந்திருக்காங்க ...பொண்ணு உங்க தாத்தா வழி (அம்மா வழிச் சொந்தம் ) ...கயத்தாறில் இருந்து வந்திருக்காங்க .....இங்கே கோயில்லதான் செய்யணுமுன்னு வேண்டுதலாம்... நமக்கும் தலைக்கட்டு உண்டு....சீக்கிரமா போய்ட்டு வந்திடலாம் “ என்றார் ....

தட்டமுடியவில்லை எனக்கு ....அரை மனதோடு கிளம்பினேன் அவர்களோடு
”அரைமணி நேரத்துக்கு மேலே இருக்க மாட்டேன் .எனக்கு ஆபீஸ்ல மீட்டிங் இருக்குது .இப்போவே சொல்லீட்டேன்” என்ற கண்டிசனோடு

15 நிமிடப் பயணம்தான் ..இடம் வந்துவிட்டது
வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினோம்.. இந்த இடம் பற்றிக் கேள்விதான் பட்டிருக்கிறேன் ...நேரில் இதுவரைக்கும் வந்ததில்லை....
மாடிவீடுகளுக்கு நடுவே ....ஒரு சிறிய பாதை..முடிவில் ஒரு வாழைத் தோரணத்துடன் ஒரு சின்ன அலங்கார வளைவு வரவேற்றது ...
இருவர் மட்டுமே ஒரே நேரத்தில் நுழையுமளவுக்கு சின்ன வாயில் ......

உள்ளே நுழைந்த எனக்கு ஆரம்ப அதிர்ச்சி காத்திருந்தது ...

அட....ஊருக்கு நடுவில் இப்படி ஒரு இடமா ???? உள்ளே சிறிய பூடத்துடன் கூடிய சுடலைசாமி கோவில்...முன்னால் பரந்து விரிந்த மரங்கள் அடர்ந்த தோட்டம் போன்ற அமைப்பு ..... பக்கத்தில் இருப்பவர் பேசுவது கேட்காத அளவுக்கு பலவிதமான பறவைகளின் குரல்கள் .......அவ்வப்போது விழுந்து சிதறும் எச்சம்....
முகம் சுழித்தபடியே உக்காரும் இடைத்தைத் துடைத்துவிட்டு அமர்ந்தேன்..

அடுத்து.........
கையைப் பிடித்துக் கொண்டு ”அப்பா போலவே இருக்கியே ராசா” என கண்ணத்தைப் பிடித்து இழுத்து உச்சிமுகர்ந்து முத்தம் கொடுத்த பாட்டிகள்......
எல ...இவனப்பாருல ... டவுனுக்குள்ள இருந்துக்கிட்டு நம்மூருப் பயமாதிரியே திரியறான் ‘ ( பெரிய மீசை வைத்திருக்கிறேனாம் !!) என கையைப் பிடித்துக் கொண்டு கிண்ண்டலடிக்கும் தாத்தாக்கள் ,பெரிசுகள்......

’ஏவுலா... ஆத்தா...அப்பத்தா....பூட்டி...கொளுந்தியா....மச்சான்...’என காதைச் சுற்றிலும் உறவுமுறைகள் துள்ளிவிளையாடும் நாகரீகம் துளியும் கலக்காத வெள்ளந்திப் பேச்சுவார்த்தைகள் ......

என்னை அப்படியே வேரோடு புடுங்கி ...எங்கோ நாடுகடத்தி.....ஏதோ ஒரு கிராமத்துக்குள் நட்டு வைத்ததைப் போல உணர்ந்தேன்...எனக்குள் எங்கோ புதைந்துகிடந்த ஏதோ ஒன்று பொங்கி எங்கும் பரவுவதையும் நன்றாகவே உணர்ந்தேன் ........

நகர வாழ்க்கையில் சுத்தம் ,சுகாதாரம், நாகரீகம் என்று பெயரால் அண்டை மனிதர்களிடம் இருந்து விலகியே பழக்கப் பட்டுவிட்டேன் ...இப்பொழுது இந்த பாசமான வருடல்களும் , கைப்பிடித்தல்களும், தாங்கல்களும் எனக்கு ஒரு புதிய உலகினைக் காட்டிக் கொண்டிருந்தது ....... நான் இது நாள் வரையில் ஒர் உன்னதமான வாழ்க்கைமுறையை மிகவும் இழந்திருக்கிறேன் என்பதும் புரிந்தது .......

மிக எளிமையாய் திறந்த வெளியில் திருமணம்... மணமக்கள் முன்னிலையிலேயே சாப்பாடு ....
சாப்பாடு முடிந்து பழைய நினைவுகளை அசைபோட்டபடியே பெரிசுகள்..எனது முன்னோர்களைப் பற்றி கதைகதையாகச் சொல்லிக் கொண்டிருக்க .......ஒரு வார்த்தை சொல்லாமால் அத்தனையையும் திறந்த வாய் மூடாமால் கேட்டுக் கொண்டிருந்தேன் ..அவர்களுக்குள் ஒன்றிப் போயிருந்தேன் ....

நான்கு மணி நேரங்கள் போனதே தெரியவில்லை ........
அம்மா மெதுவாக வந்து ‘‘ தம்பி போவோமா ? “ எனக் கேட்டார் ....

மெல்ல சிரித்து ...’’என்ன அவசரம் ...இருங்கம்மா ..போகலாம் ’‘என்றேன் .....

அனைத்து சடங்குகளும் முடிந்து , அனைவரையும் வழியணுப்பிவைத்துவிட்டுக் கிளம்பி வீடு வந்து சேரும் போது மணி மாலை 5 ....

எதையோ இழந்தது போல மனம் கனக்க வண்டியிலிருந்து இறங்கினேன் ...
குழந்தைகள் எல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு என்னைப் பார்த்து கிண்டலடித்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் ....

எதுவும் புரியாமல் கண் சுருக்கிஎன்ன என்பதுபோல அவர்களிப் பார்க்க

கடைக்குட்டி “அப்பா ...சட்டைல காக்கா ஆயி “ என சத்தமாகச் சொல்ல ..(தோள்பட்டையில் ஏதோ ஒரு பறவையின் எச்சம் )....அதைக்கேட்ட மற்ற குட்டிப் பிசாசுகள் அனைத்தும் திசைக்கொன்றாகப் பறந்தன ...
நான் தொட்டுவிடக் கூடாதாம் ..தொட்டால் அவர்கள் குளிக்க வேண்டுமாம் .......

மற்ற நேரமென்றால் பதறி உடனே அந்தச் சட்டையைக் கழற்றி வீசி இருப்பேன் ....
அன்றென்னவோ தெரியவில்லை.....சட்டையைக் கழட்ட எனக்கு மனமே வரவில்லை........
அப்படியே நின்று கொண்டிருக்கிறேன்..............

ஏன் எனவும் புரியவில்லை!!!!!
என்னவாயிற்று எனக்கு ?????

உங்களுக்காவது தெரியுமா ????


இணைப்பு :
சில அலைபேசிப் படங்கள் :

வரவேற்ற (மறைந்துபோன) ஒலி பெருக்கி ....................தெய்வமாகிப் போன மரம் (வரலாறு இருக்கும்)
24032011(039)a.jpg 24032011(013)a.jpg

மணமக்கள் .(திறந்தவெளி மேடை )..............................திறந்தவெளி சாப்பாட்டுப் பந்தி
24032011(002)a.jpg 24032011(006)a.jpg

எளிய உணவு................................................................... நலம் விசாரிப்பு
24032011(007)a.jpg 24032011(016)a.jpg

கிண்டல் பேச்சுகள்....................
24032011(020)a.jpg 24032011(015)a.jpg

100 ஆண்டுகள் கடந்த நுரைக்கல் கிணறு......................கொடுக்காப்புளி ( நான் நிறைய பொறுக்கி சாப்பிட்டேன் :))
24032011(012)a.jpg 24032011(025)a.jpg

அடர்ந்த தோப்பு ...............................................................குழந்தைகளின் வழக்கமான சேட்டை :))
24032011(017)a.jpg 24032011(024)a.jpg

தலைமுறை.......................................................................மணமக்கள்
24032011(033)a.jpg 24032011(038)a.jpg

Friday, April 1, 2011

மறையும் பழைமையை நிலைநிறுத்த முயலும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்...!

--இது விளம்பரம் அல்ல--
அன்பர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று

நாள் : 27.03.11
இடம் : திருநெல்வேலி

ரீச் பவுண்டேசன் ஏற்பாடு செய்திருந்த செய்முறை விளக்கப் பட்டறையில்
தமிழ்மரபு அறக்கட்டளை/மின்தமிழின் பின்வரிசை மாணவன் என்ற தகுதியுடன் திருமதி.சாந்திதுரை அவர்களுடன் கலந்துகொண்டேன்...

(ஒரு சிறு அறிமுகம் :
ரீச் பவுண்டேசன் : ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் , சென்னை
குறிக்கோள் : அழிந்துகொண்டிருக்கும் புராதானச் சின்னங்கள் ,கல்வெட்டுகள் ,கோவில்களைக் கண்டறிதல்,அதன் சிறப்பை வெளிப்படுத்துதல், புனரமைத்தல், பாதுகாத்தல்.... இன்னும் பல)

கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் கல்வெட்டுகள்/கோவில்களின் தொன்மை மாறாமல் சீரமைக்கும் முறைகளையும் ,சிதிலமாவதிலிருந்து தடுக்கும் பாதுகாப்புவழிகளையும் மிக எளிமையாய் கற்றுத்தந்த சந்திப்பு அது

நம் பண்டைய மரபு,பண்பாடு,கலாச்சாரம் பற்றிய ஒரு புதிய புரிதலை, எனக்குள் விளக்காய் ஏற்றி, வழியனுப்பி வைத்த சந்திப்பு அது

’ நம்மைப்பார்த்து மற்றவர் வியந்து போற்றும் வகையில் வாழ்ந்திருகிறோம்...ஆனால்..தெளிவான புரிதலின்றி , சரியான வழிகாட்டுதலின்றி.... ’நாம் பிறரைப் பார்த்து வாய்பிளந்து நின்று கொண்டிருக்கிறோம் ’ என்ன்னும் உண்மையை உரத்துச் சொன்ன சந்திப்பு அது

தென்தமிழகத்தின் சிறப்பினை,( மலைத்துப்போகும் அளவுக்கு இருக்கின்றன ...மறைக்கப்பட்ட பெருமைகள் ), உலகறியச் செய்யவேண்டும் என்ற உத்வேகத்தை உறுதியுடன் எடுத்துகொள்ள வைத்த சந்திப்பு அது

இன்னும்...இன்னும்...பல புதிய செய்திகள்...அருமையான பெரியவர்களுடன்...மிகச் சிறந்த நாளாகிப்போனது .....இந்தநாள் எங்களுக்கு...

மதிய உணவுக்குப் பின்...செயல்விளக்கப் பட்டறைக்காக (திருநெல்வேலியில்)அருகில் இருக்கும், சிதிலமாகி இருக்கும் உச்சிஷ்ட மகா கணபதி திருக்கோயில், மணிமுத்தீசுவரம், சென்றோம்...

தலச் சிறப்பு : ( நானறிந்த வரையில் மட்டும் .....)
ஒரே கருவறையில் கணபதியும், சிவனும்
அன்னையை மடியில் வைத்திருக்கும் கணபதி
சித்திரையில் கணபதிமேல் சூரிய ஒளிபடும் அமைப்பு
மிகப்பெரிய நுழைவாயில் கோபுரம்.......................

27032011A.jpg 27032011(010)A.jpg
பராமரிப்பில் உள்ளது கோபுரத்தின் மேல்பகுதி மட்டும்தான்..................பிரம்மாண்ட நுழைவாயில்


27032011(002)A.jpg 27032011(004)A.jpg
சிதிலமான சுற்றுச் சுவர்


27032011(013)A.jpg 27032011(014)A.jpg
தொழில் நுடபக் குறைபாடுகள் உள்ள கல் உத்திர அமைப்பு.....விழும் நிலையில் கருவறை முகப்பு


27032011(016)A.jpg 27032011(008)A.jpg
சிதிலமாகிக் கொண்டிருக்கும் மேற்கூரை....................... நுழைவாயிலில் மரத்துடன் தூண்

27032011(024)A.jpg 27032011(029)A.jpg
உள்பிரகாரச் சுவர்.............................................................சுற்றுச் சுவர்


27032011(026)A.jpg 27032011(027)A.jpg
கல்வெட்டின் பொருள்தேடி.................................................ஒரு கலந்தாய்வு

27032011(028)A.jpg 27032011(032)A.jpg
வெளிச் சுற்றுச் சுவர்.......................................................வெளிக் கோபுரம்


27032011(019)A.jpg
நல்லதொரு விடியலை எதிர்பார்த்து.........................

ஒரு வேண்டுகோள் : இணைய அன்பர்களே ....தங்கள்பகுதியில் உள்ள கவனிப்பாரற்ற புராதானச் சின்னங்கள் , கல்வெட்டுகள் , பழங்காலக் கோவில்கள் , பற்றிய விபரங்கள் இருந்தால் அறியத் தாருங்கள்..... உங்கள் மூலமாக முன்னோர் பெருமைகளில் ஒன்று உலகின்முன் புதியதாய்ப் பிறந்து வந்ததாக இருக்கட்டும் ...........

’இயன்றதைச் செய்வோம்.....முடிந்தவரை முயல்வோம்.....எண்ணம்போலவே எல்லாம் அமையும்’

நன்றி : மிக அருமையாய் வரவேற்று ,ஒருங்கிணைத்த அன்பர்களுக்கும்.....
வந்து வழிகாட்டிய பெரியவர்களுக்கும் ,அரியனவற்றை அறியத்தந்த அறிஞர்களுக்கும்........
கலந்துகொண்டு பெருமை சேர்த்த ஆர்வலர்களுக்கும்..............
நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.........




வாழ்க ......

Wednesday, March 23, 2011

கிராமத்துக்குள்ளே வாரீயளா..........!

அன்பு உள்ளங்களுக்கு ...........

பங்குனி உத்திரம் ......குலதெய்வ வழிபாடு நடைபெறும் நாள்........

வருடம் முழுவதும் பாழடைந்து கிடக்கும் பல கிராமத்துக் கோவில்கள் ,பூடங்கள் , கிராம தெய்வ அடையாளங்கள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு , பூசை ,திருவிழா, உறவுகளின் சந்திப்பு என பரபரப்பாய் இருக்கும் நாள் ....

எங்கெங்கோ புலம் பெயர்ந்து கிடப்பவர்களையும் ஓரிடத்தில் நம்பிக்கையின் பெயரில் இணைக்கும் நாள்...

தந்தைவழிச் சொந்தங்கள்/ உறவுகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்துக் கொள்ளும் நாள் ..........

(ஒரு குறிப்பிட்ட கோவிலில் வழிபட வருபவர்கள் அனைவரும் ....முன்பின் அறிமுகம் இல்லாதவர்களாய் இருந்தாலும் தந்தைஐவழி உறவின் முறையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஒருவருக்கொருவர் நலம்/அன்பு பரிமாறிக்கொள்ளும் நாள்...இன்னும் விபரமாக தனி இழையில்:)

போவோமா......வாருங்கள் ...ஒரு கிராமத்து பங்குனி உத்திர விழாவிற்கு
( மு.கு : அலைபேசியில் எடுத்தப் படங்கள்.....தெளிவாய் இல்லாத இடங்களில் ...மன்னிக்கவும் )

1)மலை ஏறுவோம்..........................................................2) சீவலப்பேரி
19032011(001)aa 300.jpg 19032011(053)a.jpg


3) வரவேற்கிறார்..............................................................4)அடுக்கிவைத்தாற்போன்ற பாறைகள்..
19032011(003)a.jpg 19032011(015)a.jpg


5) விடலை......................................................................6) மேலிருந்து ஒரு பார்வை
19032011(004)a.jpg 19032011(007)a.jpg


7)தொட்டிக்குக் கீழே நம்ம ‘boss'......................................8) வேண்டுதல்/ஆசீர்வாதம்/வசூல்
19032011(020)a.jpg 19032011(017)a.jpg


9)முக்கிய செய்தி : குழந்தைவரம் வேண்டி, மலைக்கு மேலே பிச்சை எடுத்துவரும் பணத்தைக் கொண்டு ,அடிவாரத்தில்(பிறர் உதவியின்றி) உணவு தயாரித்து, பிறருக்கு வழங்குவதாக நேர்ந்துகொண்டு மடியேந்தி நிற்கும் தாய் இவர்....
அவரது நிலையையும் அருகில் இருப்போரையும் கவனிக்கும் பொழுது ....பொருளாதாரத்தில் குறை இல்லாதவர்கள் என்று தெரிகிறது....... நம்பிக்கைதான் வாழ்க்கை என்ற உறுதியுடன் கண்கலங்கி நின்றவரைத் தாண்டிச்சென்ற ...சாமிகும்பிட்டு இறங்கும் அனைவரும் ஒரு நிமிடம் நின்று ...திரும்பி ஆண்டவன் சனிதானம் நோக்கி வேண்டிவிட்டு ,அவரது மடியில் தனது கையில்ம் இருப்பதை போட்டுச் சென்றதைப் பார்க்கும்பொழுது ...மேற்கொண்டு தொடர்ந்து என்ன எழுதவென்று தெரியவில்லை......ஒவ்வொரு கிராமத்தானிடமும் ’மனித நேயம்’ வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது ....( நான் கூட நாகரீக வேடத்தில் என்னை மறைத்துக்கொண்ட கிராமத்தானாக என்னை உணர்ந்தேன் அந்த இடத்தில்)

மருத்துவம் செய்யாததை..அவர்கொண்ட நம்பிக்கையும்...அவருக்காக அவரை இதற்குமுன் அறியாதவர்கள் செய்த வேண்டுதல்களும் செய்துமுடிக்கும்.... நாமும் வேண்டிக் கொள்வோம் அன்பர்களே ...........
19032011(027)a.jpg
வரும் வருடத்தில் அவர் குழந்தையுடன் அங்கே வருவார் என்ற நம்பிக்கையுடன்..........


10)மொட்டைக் கிணறு /மொட்டைபோட்டுக் ................11) வெறும் பாறையில் வேர்விட்டு உயிர்வளர்க்கும்
குளிக்கும் கிணறு ..................................................................ஆலமரக்கன்று
19032011(025)a.jpg 19032011(018)a.jpg


12) மேலிருந்து ஒரு கோணம்.........................................13) பாரம்பரிய வழித்தடம்
19032011(023)a.jpg 19032011(028)a.jpg


14) வண்டித் தடம்............................................................15) கீழே இறங்குவோம்
19032011(031)a.jpg 19032011(033)a.jpg

16)வழியணுப்புகிறார்.......................................................17) சந்தையில் வரவேற்கும் ‘எந்திரன்’
19032011(032)a.jpg 19032011(063)a.jpg



19032011(036)a.jpg 19032011(035)a.jpg
18) பூந்தி , கருப்பட்டி முட்டாய்........................................19) கருப்பட்டி முட்டாயும், சீனி முட்டாயும்
................................................................................................(ஏணி முட்டாய் என்றும் வேறுபெயர் உண்டு)


19032011(049)a.jpg 19032011(040)a.jpg
20) வெங்காய வடை........................................................21) இனிப்புச்சேவு,காராச்சேவு, காராப்பூந்தி
..................................................................................................(காரச்சேவு,காரப்பூந்தி தான் உண்மையான பேரு:))




19032011(037)a.jpg 19032011(048)a.jpg

22) கொதிக்கும் எண்ணையில்........................................23)குதித்த முட்டை போண்டா......


19032011(041)a.jpg 19032011(039)a.jpg
24) பருப்புவடை,பஜ்ஜி,முட்டைக்கோசு ........................25) கேக்...அந்த காப்பி டம்ப்ளரைப்பத்தி தனி
...................................................................................................சாகசக் கதை இருக்கிறது ..


19032011(043)a.jpg 19032011(044)a.jpg
26) அடிவாரத்தில் அவசரக்கடை.....................................27) நகைக் கடை


19032011(045)a.jpg 19032011(046)a.jpg
27) பேன்சி ஸ்டோர்..........................................................28) பூக்கடை


19032011(057)a.jpg 19032011(058)a.jpg
29)பாசி,மாலை..................................................................30) கொஞ்சம் பெரிய கடை


19032011(060)a.jpg 19032011(061)a.jpg
31) குளிர்ச்சியாய் வெட்டிவேர் நீரில் நன்னாரி சர்ப்பத், 32) தர்ப்பூசும் , அன்னாச்சியும்
சூடாய் சேமியாப் பாயாசம்


19032011(059)a.jpg 19032011(024)a.jpg
33)கெளம்பியாச்சு..கெளம்பியாச்சு.................................34) கொஞ்சம் கடந்தபின் ..எதையோ தொலைத்தது போல் ................................................................................................உணர்ந்து திரும்பிப் பார்கிறேன்
.................................................................................................தூரத்தில் கலங்கலாய்த் தெரிகிறது எல்லாமும்



30012011(009).jpg
35) முக்கியமான கதையை மறந்துட்டேன் பாருங்க .................

அடிவாரத்தில் வூட்டம்மா மற்ற சாமிகளையும் பார்த்துவரப்போன நேரத்தில்...காப்பி குடிக்கலாமேன்னு ‘ஒரு காப்பிண்ணே’ என்று ஆர்டர் கொடுத்து கொஞ்சம் நெழலப் பார்த்து ஒதுங்கி நின்னேன் ......

போலீசுன்னு நெனைச்சிருப்பாரு போல ....ஸ்பெசல் காப்பி வந்து சேர்ந்தது .......ஒரு 30 வருடங்களாக என்னால் இன்னும் செய்து முடிக்க முடியாத / கண்டு பிடிக்க முடியாத ஒரு மிகப்பெரிய புதிரான சங்கதியாக ..
டபராவில்(கப்பில்) கவிழ்ந்த நிலையில் டம்ப்ளர் ...அதுக்குள்ளே காப்பி ....கையிலே காப்பியை வாங்கியவுடன் உடல் ஒருமுறை நடுங்கி அடங்கியது ......
aqw (164).gifஇங்கே ஒரு ப்ளாஷ்பேக்....... 30 வருடங்களுக்கு முன்...........................
காப்பிக் கடை ...அப்பாவோடு நான்...கையில் இதேபோல ஒருகப் காப்பி.......பார்த்தவுடன் எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வருகிறது....காப்பி இல்லாத வெறும் கப்பைக் கொடுத்து கடைக்காரர் ஏமாற்றுகிறார் நம்மை...
கோபம் கொப்பளிக்க கப்பை கீழே போடுகிறேன்........உள்ளே இருந்து சிதறிச் சிந்துகிறது காப்பி.........
’ அட எங்கே இருந்தது காப்பி’ அதிர்ந்து போய் பார்க்கிறேன் .... சுத்தி இருந்தவங்க எல்லாம் சிரிக்க , வெக்கம் பிடுங்கித் தின்கிறது என்னை.....

அப்பா செல்லமாகத் தலையில் தட்டிவிட்டு.....இன்னும் ஒரு கப் வாங்கி டம்ப்ளரை நிமிர்த்தப் போக நான் ஓடிச் சென்று அவர்கையிலிருந்து காப்பியைப் பிடுங்குகிறேன் .....கேலி செய்தவர்கள் வாயடைக்க வேண்டுமே .....
நாமே திறந்து காட்ட வேண்டும்......

வேகமாக தலைகீழாக இருக்கும் அந்த டம்ப்ளரை நிமிர்த்திய நொடியில் ....கொதித்துக்கொண்டிருந்த காப்பி பொங்கி கப்பிலிருந்து வழிந்து ...கால், தொடை (இன்க்ளூடிங் ஆல்..:) எல்லாம் கொட்டி , வெந்து ...10 நாளைக்கு டவுசர் போடாமல் அலையும் நிலைவரையில் கொண்டுவந்து விட்டுவிட்டது ...:(((


---அந்தப் பயத்தில் இன்றும் இன்னும் ஒருமுறை உடம்பு நடுங்க ........அப்படியே காப்பியை கார்மேல வைத்துவிட்டு ...படம் எடுப்பதுபோல நடித்துக் கொண்டிருந்தேன் (எவ்வளவு நேரம்தான் நானும் படம் புடிக்கிற மாதிரியே படம் போடுறது :((
...வந்து சேர்ந்த வூட்டம்மா அந்த காப்பி டம்ளரையும்,என்னையும் மாத்தி,மாத்தி பாத்தாங்க....விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சவங்க வீடுவந்து சேரும் வரைக்கும் நிறுத்தவே இல்லை..:((,,,வீட்லயும் பிள்ளைங்க கிட்டே சொல்ல்லி ..அவங்களும் கிணடலடிச்சு...பெரிய கலாட்டாவாகி எனது வீரம்,மீசை எல்லாம் அன்னிக்கு ஒருநாள் குடை சாஞ்சுப் போச்சுது ;(


நீதி : ஆர்வக் கோளாரில் எல்லா விசயத்தையும் வூட்ல சொல்லீடாதீங்க :))))