Showing posts with label ஆண். Show all posts
Showing posts with label ஆண். Show all posts

Wednesday, February 2, 2011

ஆண்மையின் ரகசியம் இதுவாகவும் இருக்கக்கூடும்......!

வெளியே.....

அலுவலக ஆளுமையால்

வெளியுலக அடக்குமுறையால்

வாழ்க்கை நடைமுறையால்

தலைதூக்க வழியின்றி

அழுத்தப்பட்ட ஆண்மை.....


உள்ளே....

சாதகச் சூழலில்

சூழ்ந்திருக்கும் வெற்றிடத்தில்

எதிர்ப்பில்லா மனையாளிடம்

ஏதுமறியாக் குழந்தையிடம்

வெடித்துக் கிளம்புகிறது....

மீசையைத் திருக்கியபடி

விசுவரூபம் எடுக்கிறது .....


நிமிர்ந்த மீசையின் நிழலில்

மறைந்த அடர்ந்த ஆழத்தில்

புதைக்கப் பட்டிருக்கக்கூடும்

தேங்கிய வலிகளும்

ஏங்கிய சோகங்களும்

பொங்கிவழியும் ஏமாற்றங்களும்.........


வாய்ப்பிருக்கும்

இந்த உண்மையை

நாமும் ஏற்றுக்கொள்வோமே....


பாவம்.....!

இதைத் தன்மையாய்

அவர்க்கும் புரியவைப்போமே....


ஆமாம்......!!

’அந்த’ ஆண்மையை

மன்னித்து விட்டுவிடுவோமே......

Wednesday, December 22, 2010

பெண்ணியத்தைப் போற்றடா....!



பாதி(50%) கேட்டு

நீதியை நிலைநாட்ட

நாளை நடத்தப்போகும்

மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஒரு வருங்கால

வரலாறாகப் போகிறது.......


போராட்டமாய்த் தொடங்கி

ஒருபுரட்சியாய் முடியப்போகிறது

நாளைய பொழுது.....


பெண்ணியத்தைப் போற்றவும்

பெண்ணினத்தின் முன்னேற்றவும்

தலைவன் நானே தெருவிலிறங்கி

என்னுயிரையும் தாரைவார்த்து

தீக்குளிக்கவும் தலைமை

ஏற்பேன் அப்பொழுது.......


நாளைய எனது உரை....

ஆண்களின் சுயநல முகத்திரையை

அகற்றும்படி அமையப் போகிறது...

ஒவ்வொரு வார்த்தையிலும்

பொறி பறக்கப் போகிறது...

கூடி இருக்கும் கூட்டத்துள்

தீப் பிடிக்கப் போகிறது....


இதோ.....

33%தான் தருவோமென

வேசமிட்டிருக்கும் ஆண்முகத்தை

ஆவேசமாகக் கிழித்து வெளிப்படுத்தும்

வாசகங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும்

அந்திசாய்ந்த வேளையில்.........


மெல்லக் கதவுதிறந்து

உள்ளே வருகிறாள் அவள்...!


முன்னாலிருந்த அந்த

பாதி மீதியிருந்த கோப்பையை

ஓரத்திற்கு ஒதுக்கி வைக்கிறேன் நான் ...


இனி

தேவையிருக்காது இதற்கு ....!!

Tuesday, November 2, 2010

பார்......இது(வும்) ஒர் உலகம்....!



முற்றிலும்....

தன்னை மறந்த நிலையில்

கையில் வழியும் பணத்தோடு...

கூட்டத்தின் நடுவில் அமர்ந்து ....

தொடர்பில்லாமல் எதையோ

தொடர்ந்து உளறிக் கொண்டே

இருக்கிறான் அவன்.....


சுற்றிலும்....

தலை சுற்றிய நிலையில்

பையில் வழியும் வெறுமையோடு...

மேலும் எதையோ எதிர்பார்த்து...

தொடர்ந்து எதற்காகவோ

கைதட்டிக் கொண்டே

இருக்கிறார்கள் அவர்கள்......

அருகே.....


முற்றிலும்....

காலியாகிக் கிடக்கிறது

ஒரு கோப்பை.....


சுற்றிலும்....

பறந்து கொண்டிருக்கின்றன

பல ஈக்கள்.........

.

Tuesday, April 13, 2010

முள்ளாய் .. ! வேலியாய்..!!




அதிகாலையில் எழுந்த உடன்
ஆதரவாய்த் தட்டி எழுப்பி
என்னுடன் குளிக்கக் கிளம்புகிறார்
என் அக்காவின் கணவர்

அடுக்களையில் இருக்கும்
அக்காவுக்குத் தெரியாமல்
எனக்குத் தலைவாரி சிரிக்கிறார்
என் அக்காவின் கணவர்

அக்காவுக்குக் கையசைத்தும்
கதவுக்குப் பின்னால் வந்து
எனக்கும் முத்தம் கொடுக்கிறார்
என் அக்காவின் கணவர்

மாலையில் திரும்பி வரும்போது
ஆசையாய் அக்காவுக்குப் பூவும்
எனக்கு அல்வாவும் வாங்கிவருகிறார்
என் அக்காவின் கணவர்

இருநூறு ரூபாயில் அக்காவுக்கும்
அறுநூறு ரூபாயில் எனக்கும்
புத்தாடை வாங்கிக் கொடுக்கிறார்
என் அக்காவின் கணவர்

பள்ளிக்கூடத்திற்கு சாயங்காலம்
பெற்றோர் சந்திப்பிற்கு வருவார்
எனது அப்பாவாய் வருவார்
என் அக்காவின் கணவர்



.

Wednesday, October 7, 2009

விசமா ? வேசமா ?? விசேசமா ???.....


மெளனம்...........

இன்று அவளின் மெளனம் - அதனால்
ஆனதென் மனம் ஊனம்

ஒலி இல்லாமல் -
பேசும் மொழி இல்லாமல்

அவளின் மெளனம் -
அது ஆயிரம் வழியில் பேசும்

ஆம்........

அணைப்பில் சம்மதம் சொல்லும்
அரவணைப்பில் என்மனம் வெல்லும்

மகிழ்வில் மனம்கொள்ளை கொள்ளும்
இகழ்வில் தினம்என்னைக் கொல்லும்

கோபத்தில் கொடுவாளை எடுக்கும்
தாபத்தில் விடியலைத் தடுக்கும்

பழக்கத்தில் சாமரம் வீசும்
குழப்பத்தில் சமரசம் பேசும்

கொஞ்சுகையில் வீணையே கெஞ்சும்
மிஞ்சுகையில் நானே தஞ்சம்

மஞ்சத்தில் எனைத் தகிக்கும்
தஞ்சத்தில் எனையேத் துதிக்கும்

ஒட்டிவந்தால் வாடையாய் வீசும்
எட்டிநின்றால் சாடையில் பேசும்

ஆனாலும்......

அவளின் மெளனம்....
இன்றவளின் மெளனம்........

அது..........

வீழ்த்தும் விசமா ? வெறும் வேசமா ??
உள்ளுக்குள் எதுவும் விசேசமா ???

அர்த்தமென்ன இதுவரை! தெரியவில்லை - அதன்
ஆழமும் எதுவரை? புரியவில்லை

.

Wednesday, August 5, 2009

பயந்தாங்கொள்ளிகள்........!


வங்கியில் சம்பளம்
வாங்கிய கையோடு
பேருந்தில் பயணித்து
நிறுத்தத்தில் இறங்கும்போது

திடீரென வந்தது மின்தடை
தடுமாறி நின்றது என்நடை

"தெருவில் தொடருமே நாய்ப்படை !
ஆரம்பிக்கிறதா எனக்குப் பீடை ?
மனிதனின் நிலை தெரியாமல்
மாதாந்திரப் பராமரிப்பா தேவை !

இருளில் நடக்கவேண்டும்
திருடர்களைக் கடக்கவேண்டும்
பதட்டம் மறைக்கவேண்டும்
பாதுகாப்பாய் இருக்கவேண்டும்
பத்திரமாய் வீடு போய்சேர்வதற்குள்
பாதி உயிர் போய்சேர்ந்துவிடும்"


உயிரைக் கையில் பிடித்து
தெருவில் இறங்கி நடக்கிறேன்

குட்டிச்சுவற்றில் நாலுபேர்
வெட்டியாய் அமர்ந்துகொண்டு
குத்துமதிப்பாய் என்னையே
உற்றுப் பார்த்துக்கொண்டு !

நுரையீரல் வெளியே துள்ளி
தரையில் வலிய விழுகிறது
தாண்டியபின் கவனிக்கிறேன் - அட
தெருவைத்தான் பார்தது இருக்கிறார்கள்

தூரத்திலிருந்து ஆளரவம் வேகமாய்
அருகே நெருங்கி வருகிறது
இருக்கும் இடத்திலிருந்து இதயம்
குதித்து நொறுங்கி விழுகிறது

வரிசையாய் என்னைச் சுற்றி
வியூகம் அமைக்கிறார்கள்
ஒருநொடியில் 'ஐஸ்பால்' சொல்லி
திரும்பிப் பறக்கிறார்கள்

*எதிரே கட்டியிருக்கும் எருமை
*என்னைச் சுற்றியிருக்கும் கருமை
*வேகமாய்த் துரத்தி ஓடும் நாய்
*வெகுதூரத்தில் ஊளையிடும் பேய்

உலகமே ஒன்றுகூடி என்
ஒருவனைத்தான் கவனிக்கிறது !
இருளிலும்கூட இது எனக்குத்
தெளிவாகவேப் புரிகிறது !!

பதைபதைக்கும் மனத்தையும்
பையிலிருக்கும் பணத்தையும்
தடவிக் கொடுத்தபடியே
வீதிக்குள் நுழைகிறேன்

வரும் வழியெல்லாம் தப்பி வந்தவன்
வீட்டுவாசலில் தடுக்கி விழுகிறேன்
திடுக்கிட்டுப் எழுகிறேன்


கால்களுக்கு இடையில் புகுந்து
கருப்பு உருவம் ஒன்று
அலறிக் கொண்டு ஓடுகிறது

"அப்பா வந்தாச்சு - இதோ
அப்பா வந்தாச்சு - இனி
பயமில்லை நமக்கு"


மீசையைத் திருக்கிக் கொண்டு
தரையைத் தடவிக் கொண்டே
தலை நிமிர்ந்து வீட்டுக்குள்

மெல்ல நுழையும்போது
மெதுவாய் முணுமுணுக்கிறேன்

"சரியான பயந்தாங்கொள்ளிகள்"

Tuesday, July 28, 2009

வெட்டியானுக்கொரு வேண்டுகோள்...


நண்பனே !
விவசாயி மகனாய்ப் பிறந்து
வாழ்க்கக்ப் பூராம் ஏமாந்து
(வி)சாரிக்க ஆளில்லாம
சருகாகி உதுந்தவனே
வானத்துல கரைஞ்சவனே
வனத்துல தொலைஞ்சவனே
ஏ என்னோட நண்பனே !!

நாலுதெருவு தாண்டிப் போனாலும்
ஏழுதடவ சொல்லிட்டுப் போவியே
ஏழுலகம் தாண்டி போறப்போ
ஏங்கி நிக்கிறனே நானுமிங்கே
எங்கிட்ட சொல்லாமலே
ஏமாத்திப் போயிட்டியே
ஏ நட்ப்பை மறந்த நண்பனே !!!


மக்களே !
அறுபது ஆண்டுகாலமா மாடா
அடுத்தவனுக்கே உழைச்சவனோட
இறுதி ஊர்வலம் இங்கே
ஆறுபேரோட முடிஞ்சிடுச்சே
ஏ நன்றிகெட்ட மக்களே!!

ஊர்ப்பெரிசே !
உயிர்பாய்ச்சி பயிர்வளர்த்து
கதிர் புடிக்கக் காவலிருந்து
முதிர்ந்ததெல்லாம் சேர்த்துக்கட்டி
உதிர்ந்ததயும் சேத்துலக் கூட்டி

வயிறு வளக்க உம்முன்னால
கையக்கட்டிக் பாத்துநின்னானே
வாயப்பொத்தி உம்முன்னால
வாழ்க்கப்பூராக் காத்துநின்னானே
கரையேத்தி விடாம
கையக்கழுவி விட்டிட்டியே
ஏ சுயநல ஊர்ப்பெரிசே !!


வரட்டி பொறுக்க,வரப்பு பெருக்க
களை எடுக்க,கரை புடிக்க
குடும்பம் சுமக்க,குழந்தை வளர்க்கன்னு
அஞ்சு வயசுல குனிஞ்சவன்

அரைவயித்துக் கஞ்சிக்காக
ஆண்டே முன்னாடிக் குனிஞ்சவன்

பெண்டுகளக் கரைசேக்க
வந்தவங்க முன்னாடிக் குனிஞ்சவன்

குடும்பநலம் வேண்டி
கடவுள்முன்னாடிக் குனிஞ்சவன்

கடைசிவரைக்கும் நிமிரவேயில்லையே
கண்ணும் பகல்வானம் பாக்கவே இல்லையே

ஏ நல்ல வெட்டியானே !
எரியூட்டும்போது அவன்
நரம்பு முறுக்கேறி
விரைத்து எழுவான்
நிமிர்ந்து அமர்வான்
வீழ்த்திவிடாதே அவனை

எல்லாம் முடிந்தபின்
கடைசிக்கும் முன்னால்
வாழ்க்கைக்குப் பின்னால்
முதன்முதலாய் நிமிர்வான்

வீழ்த்திவிடாதே அவனை
அவனாகவே வீழும்வரை
வாழ்த்திவிடு அவனை
வானகம் வாழ்த்தும் உன்னை


ஏ நாலும் தெரிந்த வெட்டியானே !!
நானும் வருவேன் நல்ல வெட்டியானே !!!

Tuesday, July 21, 2009

இந்தியாவில் இரண்டு இமயம் ....!


ஜுலை 21
சிவாஜி அய்யாவின் நினைவு நாளில்
அவர் பாதங்களில் சமர்ப்பணம் :


இமயம் :


தூரமிருந்து பார்ப்போருக்கு
...கரும் புள்ளியாய்ப் புரியும்
அருகில் வருவோருக்கு அது
...வெறும் முக்கோணமாய்த் தெரியும்

நெருங்க ஆரம்பிக்கும்போது தான்
...அதன் பிரமாண்டம் கிட்டும்
ஒவ்வொரு திசையிலும் அது
...வெவ்வேறு பரிமாணம் காட்டும்

ஏறும் உங்களுக்குள் இதமாய்
...அதன் புனிதம் இறங்கும்
வெறுமையான மனதுக்குள்ளும்
...அதன் இனிமையை இறக்கும்

உச்சியை அடைய வேண்டாம்
...உணர்ந்தாலே போதும்
நவரச உலகத்தையே மெதுவாய்
...நமக்குள் உணர்த்திவிடும்

இமயம் _ அதுதான்
இமயம்

இந்தியாவில் உண்டு
இமயம் இரண்டு

வடக்கில் ஒன்று - இங்கே
தெற்கில் ஒன்று

Wednesday, February 4, 2009

ஆண் பாவம்...!!!


என் வீட்டில் உள்ளோருக்கும்
என் சொந்தங்கள் எல்லோருக்கும்
அம்மாவின் ஒரு வார்த்தைதான்
ஆண்டவனின் திரு வார்த்தை
அம்மாவை சுற்றித்தான் இங்கே
அனைவரும் சுழன்று வருவோம்

அவளன்றி அங்கே ஒரு
அணுவும் கூட அசையாது
அப்பா வெறும் பார்வையாளராய்
ஒப்புக்குத் தனியாகவே இருப்பார்

நடப்பது எதையும் ஒன்றும் சொல்லாமல்
நிகழ்வது எதுவானாலும் கண்டு கொள்ளாமல்
மெலிதாய் சிரித்து விட்டு அவர்
மெல்லக் கடந்து போய்விடுவார்

மாமியாருக்கு ஏற்ற மருமகளாய்
மாறாமல் வந்துசேர்ந்தாள் என்னவள்

குடும்பத்தின் நிகழ்ச்சிகள்
குழந்தைகளின் பராமரிப்பிகள்
பெரியவளின் கல்யாண வேலைகள்
அடுத்தவனின் கல்லூரிக் கனவுகள்
வரவு செலவு விபரங்கள்
வயல் வெளி நிலவரங்கள்
................
................
சொந்தங்களை சேர்த்து
பந்தங்களைப் பாதுகாத்து
அனைத்தையும் முன் நின்று
அவள்தான் பார்த்துக் கொள்கிறாள்

ஊர்கூடி நின்று அவளை
உயர்த்தி வைத்து பேசுகிறது
நான் வலம்வரும் இடமெல்லாம் அவள்
நலம் பற்றித்தான் தான் விசாரிக்கிறது

வருடம் இருபது கடந்தபின் எந்தன்
பொறுமை முழுவதும் இழந்துவிட்டேன்

"இங்கு நான் ஒருவன் இருப்பது
உங்கள் கண்ணுக்குத் தெரியவே இல்லையா?

என் தோளில்மீது அமர்ந்துதான் அவள்
எல்லாவற்றையும் தாங்குகிறாள்
என்பது யாருக்கும் புரியவே இல்லையா?

எனது தைரியத்தால் தான் அவள்
எதிர் நீச்சல் போடுகிறாள்
என்பது யாருக்கும் உறைக்கவே இல்லையா?

மொத்த சுமையையும் தாங்கிக்கொண்டு
சத்தமில்லாமல் நின்று கொண்டிருக்கும்
எங்களையும் கொஞ்சமாவது
ஏறிட்டுத்தான் பாருங்களேன்"


அப்போதுதான் தற்செயலாய்
அப்பாவை கவனிக்கிறேன்

அப்பாவிடம் அங்கே
அம்மாவைப் பாராட்டி
என்னவோ சொல்லிவிட்டு
எழுந்து போகிறார் யாரோ ஒருவர்

மெல்லிய சிரிப்புடன்
மெதுவாய் தலையாட்டியபுடி
எதுவுமே நடக்காதது போல
ஏகாந்தமாய் அமர்ந்து இருக்கிறார் அவர்

நான் அந்த சிரிப்பை கடந்த
நாற்பது வருடங்களாகப் பார்த்திருக்கிறேன்
ஆனாலும் அதன் முழுஅர்த்தத்தை
அப்போது தான் உணர்ந்துகொள்கிறேன்
விட்டுக் கொடுக்கும் வாழ்க்கைப் பாடத்தை
வரிக்கு வரி புதியதாய் தெரிந்துகொள்கிறேன்

நாலே நொடியில் மனதிற்குள் அப்பா
நாலு மடங்காய் உயர்ந்து நிற்கிறார்

Saturday, December 13, 2008

உள்ளே, வெளியே !


"புத்திகெட்ட மனுசனுக்கு
எத்தனை சொன்னாலும் புரியாது"

வாசலில் நுழைந்தவுடன்
வந்து விழுகின்றன வசவுகள்
எதற்காகவோ என்னை
ஏசிக்கொண்டே இருந்தாள்
கவனித்துவிட்டேன் ஆனாலும்
கவனிக்காமல் உள்சென்றேன்

பேருந்தில் இடம் பிடிக்க ஓடி
படியில் இடறி தடுமாறி
இடம் கிடைக்காமல் நின்றேன்
"இதுகூட முடியலின்னா
எதுக்கு மீசைன்னு ஒன்னு"

அவளின் கேலிப்பேச்சு
ஆழமாய்க் குத்தினாலும்
சட்டை செய்யாமல்
சன்னல் வழியே
வெளியே பார்த்தேன்

திரையரங்க வாசலில்
தெருவரையுள்ள வரிசையில்
முட்டி மோதும் சிறுவர்களுக்கு
ஓரம் ஒதுங்கி இடம் கொடுத்து
கொஞ்ச நேரம் கழித்து
கசங்கிப்போய் வெளியேவந்தேன்
"சின்னப் பசங்களக்கூட
சமாளிக்க முடியல
என்னத்த சாதிப்பிங்களோ?
என்னதான் பன்னுவீங்களோ?"

எப்போதும் போலவே
இந்தக்காதில் வாங்கி
அந்தக்காதில் விட்டு
அடுத்த வேலைக்குத் தயாரானேன்

கடற்கரையில் கால் நனைக்கையில்
"கொஞ்ச நேரம் இருங்க
குழந்தையை பாத்துக்கோங்க"

பதில் எதிர்பாராமல்
பரபரவென விலகிப்போனவள்
பதட்டத்தோடு திரும்பிவருகிறாள்
"வாங்க போயிறலாம் இங்கேயிருந்து
வம்பு செய்ராங்க ஏங்கிட்ட அங்கேயிருந்து"


அவளைக் கடந்து பார்க்கிறேன்
அங்கே திருட்டுப் பார்வையோடு
திடகாத்திரமாய் நால்வர்
தொடர்ந்து வந்திருக்கிறார்கள் அவளை

அடுத்த நான்கு நிமிடங்களில்
அங்கே யாரும் எதிர்பாராமல்
ருத்திரத் தாண்டவம் ஆடி அடங்குகிறேன்
யுத்தக் காண்டமே நடத்தி முடிக்கிறேன்

அந்த நால்வரும்
அவள் முன்னால் மண்டியிட்டு
மன்றாடி வேண்டி மன்னிப்புக் கேட்டு
மறு விநாடி மறைந்து போகிறார்கள்

"எந்தப் பிரச்சினையும் இல்லை
எல்லாம் முடிஞ்சு போச்சு
எங்கே போகலாம் அடுத்து?"

எதுவுமே நடக்காதது போல
அவள் முகம் பார்த்து கேட்டு
அப்பாவியாய் நிற்கிறேன்

அவளோ என்முகம் பார்த்து
அனைத்தும் உறைந்து நிற்கிறாள்
குழம்பிய முகத்தோடு
கலங்கிய சிந்தனையோடு
குற்ற உணர்ச்சியோடு
குறுகுறு பார்வையோடு
இதுவரைப் பார்த்துதற்கும்
இப்போது பார்ப்பதற்கும்
உள்ள வித்தியாசம்
உள்ளபடியே உணர்கிறேன்

மெதுவாய் என் கை பிடிக்கிறாள்
இதமாய் வாய் திறக்கிறாள்

"நீங்க போங்க முன்னாடி!"

மறுநாள் மாலை
மதிமயக்கும் வேளை
வரவேற்பு எதிர்பார்த்து
வீட்டுக்குள் நுழைகிறேன்
"புத்திகெட்ட மனுசனுக்கு....
..........................."

Sunday, September 28, 2008

மீசை முறுக்கும் ரகசியம்


அவசரமாய் வீடுதிரும்பி
ஆத்திரத்தோடு அறைக்குள் நுழைந்து
இல்லாளிடம் பேச நினைத்து

எல்லாமே தலைகீழாய் மாறி
நன்றாக வாங்கிக் கட்டி
வெளியே வந்தபின்

சுற்றும் முற்றும் பார்த்து
ஆதரவாக மீசையை
தடவிக்கொடுக்கும் விரல்கள்