இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Friday, October 31, 2008
இடுக்கண் களையும் நட்பு ?
வறுமை சூழலில் நான்
வசதியாய் இருக்கிறார் நண்பர்
பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல
அலைபேசியில்
அழைக்கும் போதெல்லாம்
அவரது மகள்தான்
மறுமுனையில்
"அப்பா குளித்துக்கொண்டிருக்கிறார்"
ஒரு வாரமாகவா ?
ஒன்றும் புரியவில்லை.
உண்மை ஏதேனும்
உங்களுக்குத் தெரிகிறதா ?
Tuesday, October 28, 2008
அம்மா
அம்மா
என் மனைவியை மருமகளாய்
ஏற்றுக்கொள்ளவே இல்லை
எனக்குத் தெரிந்து அவளிடம்
எதிர்மறையாகவே நடக்கிறாள்
ஏன் என்றே தெரியவில்லை
ஆனாலும் அம்மாவை
என்னால் எவரிடமும்
விட்டுக்கொடுக்க முடியவில்லை
என்னால் எப்படி முடியும்?
அம்மாவைப் பற்றி இந்த
அறியாத ஒன்றைவிட
தெரிந்தது நிறைய உண்டு
புரிந்தது இன்னும் உண்டு
முந்தா நாள் பார்த்திருந்தாலும்
இன்று புதியதாய் பார்த்ததுபோல
"மெலிஞ்சு போய்ட்டீயே அய்யா"
எனக் கேட்ப்பதில் உள்ள பாசம்
என்னுடன் இருந்து கவனிப்பவரை
கனிசமாய் காயப்படுத்தினாலும்
எனக்குப் புரியும்
சிகை கோதி
சாப்பிடவைக்கும்
சிரித்த முகத்துக்குப் பின்
குடிகார அப்பாவிடம்
அடுக்களையில்
வாங்கிய அடியும்
அடக்கிவைத்த அழுகையும்
எனக்குத் தெரியும்
தவிர்க்கமுடியாமல்
மஞ்சளை கழுத்தில் கட்டி
தாலி கழட்டி அடகு வைத்து
வட்டி மட்டும் மொத்தமாய் கட்டி
கலங்கி நொறுங்கி நின்றதும்
எனக்குத் தெரியும்
ஐம்பது ரூபாய்க்காகவும்
ஐந்து கிலோ அரிசிக்காகவும்
அறுவை சிகிச்சை செய்து
அறுபட்டுக் கிடந்ததும்
எனக்குத் தெரியும்
அந்த அரிசியில்
காய்ச்சிய கஞ்சியின் ருசி
இன்றுவரை என் தொண்டையில்
தொக்கி நிற்பதும்
எனக்கு மட்டுமே தெரியும்
பிறகு எப்படி முடியும்
Sunday, October 19, 2008
கலாம் !
மூழ்காதே உனக்குள்
முளைத்து வா வெளியே
புதிய உலகம் படைக்கலாம்
காத்திராமல் காலையில்
கிழக்கு நோக்கி நடந்து பார்
உலகின் முதல் சூரியன்
உனக்காக அங்கே காத்திருக்கலாம்
குட்டக் குட்டக் குனியாமல்
தடைப்பட்ட உரிமைகளை
தாழ்மையோடு கேட்டுப்பார்க்கலாம்
கிடைக்கவில்லையா கவலையில்லை
தலைநிமிர்த்தி தைரியமாய்
தடையுடைக்க போட்டுப்பார்க்கலாம்
அக்னிக்குஞ்சே உன் சிறகுகளை
அடக்கிவைக்காமல் விறித்து வா
முட்புதராய் மண்டிக்கிடக்கும்
மூட நம்பிக்கைகளை எரிக்கலாம்
கைபிடித்து அழைத்துச்செல்ல
நல்லவற்றை எடுத்துச்சொல்ல
தலைதட்டி நடத்திச்செல்ல
காத்திருக்கிறார் கலாம்
Saturday, October 18, 2008
சன நாயகம்:உள்ளே-வெளியே
வெளி நாட்டில் 10 வட்டிக்கு
100 கோடி கடன் வாங்கும்
நம்ம நாடு
அடுத்த நாட்டில் வறுமையென்றால்
80கோடி வட்டியில்லாமல்
கடனாய் கொடுக்கும்
பக்கத்து நாட்டில் பஞ்சமென்றால்
40கோடி கேள்விகேட்க்காமல்
இனாமாய் கொடுக்கும்
இங்கே சொந்த வீட்டையும்
எங்க சொத்துப் பத்தையும்
அடமானமா வச்சு
அம்பதாயிரம் கடனாக் கேட்டா
ஆயிரம் கேள்வி கேட்டு
அங்கே இங்கே அலையவிட்டு
சரியான ஆளாப் பார்த்து
சாமீனு கொடுன்னு கேட்டு
புரியாத சட்டம்சொல்லி சுத்திவிட்டு
கடைசியில் தலைய சொரிஞ்சிகிட்டு
கை நீட்டுதே நம்மகிட்டயே
Thursday, October 16, 2008
ஆன்-லைன் வர்த்தகம்?
கன்னியாக்குமாரியில்
இல்லாத பொருளுக்கு
காஷ்மீரிலிருந்து
பேரம் பேசி
விவசாயியிடம் விலைகுறைத்து
விநியோகத்தில் விலைகூட்டி
தரகர்கள் மட்டுமே தங்கள்
தரம் உயர்த்திக்கொண்டு போகும்
சீர்திருத்தம் என்ற பெயரில்
சாமானியர்களின் வாழ்க்கையை
சீரழித்துக்கொண்டிருக்கும் அது
ஆன்-லைன் வர்த்தகமா?
ஆப்-செய்யும் வர்த்தகமா! இல்லை
ஆப்பு வைக்கும் வர்த்தகமா!!
Wednesday, October 15, 2008
மாடி வீட்டு ஏழைகள்
சுழற்றியடித்த
சூறாவளி மழை
சிறுசிறு இழையாய் இன்னும்
தூறிக்கொண்டே இருக்கிறது
தாத்தாவின் காவலிலிருந்து
தப்பிவந்து தண்ணீருக்குள்
குட்டிக் கரணம் அடிக்கும்
குட்டித் தம்பிகள்
சேறும் சகதியும் காலுக்கு
செறுப்பாய் மாற கூட்டு சேர்ந்து
கும்மாளம் போடும்
குட்டிப் பாப்பாக்கள்
குதித்து வரும் தண்ணீருக்கு
குறுக்கே மணலில் அணைகட்டி
பக்கத்து வீட்டுப் பாட்டிகளோடு
பகை இழுக்கும் அக்காமார்கள்
கணக்கு நோட்டுகளை எல்லாம்
கப்பலாய் மாற்றி தெருவில் ஓடவிட்டு
அப்பாவின் அடிக்கு மாட்டாமல்
தப்பி ஒடும் அண்ணன்மார்கள்
பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்
பால்கனியிலிருந்து ஏக்கத்தோடு
ஆரோக்கியம் சுகாதாரம் என்ற
ஆகாத பெயர் சொல்லி
அனைத்தையும் இழந்த
அந்த மாடிவீட்டுக் குழந்தைகள்
Monday, October 13, 2008
அக்கரைப் பச்சை
தாமஸ் ஆல்வா எடிசனுக்கு இந்தியஅஞ்சலி
Sunday, October 12, 2008
அவிழாத முடிச்சு
ஏன்?
கோழி இறகு-சொர்க்கத்தின் சாவி
வருங்காலத் தூண்கள் ?
ஒரு ரூபாய் அரிசி வாங்க
பை தூக்கி ரேசனுக்குப் போனால்
கூடவே சேர்ந்து போகுது மானமே.
ஓப்பனிங் சோ பாக்க
முந்தா நாள் ராத்திரியிலிருந்து
வாசலில் வரிசையில் நின்றாலும்
டிக்கட் கிடைத்தால் தான் அனந்தமே.
மோரு வித்து அம்மா
சேத்து வச்ச காசில்
யாருக்கும் தெரியாமல்
கை வைக்கும் போது அது
தப்புன்னே தோணலியே
அந்த காசில் பீரு வாங்கி
எல்லோரும் சேந்து குடிக்கும்போது
கடைசியில் கொஞ்சம் குறையும்போது
கேவலமாய்த் தோணுதே
நெஞ்சுவலி அப்பாவுடன்
கொஞ்சநேரம் கூட இருந்து
மருந்துகொடுத்துப் பார்க்க
ஆறுதலாய் உக்காந்து பேச
கொஞ்சங்கூட நேரமில்லியே
வெளிநாட்டுத் தூதரக
வாசலில் நாக்கு வரள
விசாவுக்காக நாள்கணக்கில்
வரிசையில் நின்னாலும்
நேரம் போனதே தெரியலியே
காத்திருக்கும் உண்ர்வே வரலியே
என்ன ஆயிற்று நம்
வருங்காலத் தூண்களுக்கு?
Tuesday, October 7, 2008
இலவச அழைப்பு
Monday, October 6, 2008
நியாயம் வேணும்-2
என்ன தான் நடக்கிறது?
உங்களுக்காவது தெரியுமா?
Sunday, October 5, 2008
அப்பா எப்படி மாறிப்போனார்?
Saturday, October 4, 2008
சிக்னலில் தெரிந்த கறுப்பு நிறம்
பச்சை விளக்குக்காக சந்திப்பில்
பல நினைவோடு காத்திருக்கையில்
'அண்ணா' என்ற தங்கையின்
அவலக்குரல் கேட்டு
உலகமே நொடியில்
ஊஞ்சலில் சுற்றியதுபோல்
முன்னால் உள்ளதெல்லாம்
மஞ்சளாய்த் தெரிய
திடுக்கிட்டுத் தடுமாறி
திரும்பிப் பார்த்தால்
பிச்சைக் கேட்டு கை நீட்டி
பச்சிளங்குழந்தையோடு சிறுமி
நல்லவேளை அது தங்கையில்லை
நிம்மதியாய் மூச்சுவிட்டு
'இந்த சமூகத்தின்
இன்றைய நிலையை மாற்றி
ஒருநாள் ஏழ்மையை
ஒழித்தே தீரவேண்டும்' என்ற
சிவப்பு சிந்தனையோடு
சில்லரையைத் தேடும்போது
கையில் பட்டது
பையில் உள்ள பணமும்
பின்னால் உள்ள தர
இடமில்லாத கறுப்பு மனமும்.
Friday, October 3, 2008
முடி இழந்த மன்னர்கள்
Subscribe to:
Posts (Atom)