Showing posts with label பதிவுகள். Show all posts
Showing posts with label பதிவுகள். Show all posts

Tuesday, January 25, 2011

Sunday, July 25, 2010

தில்லாலங்கடி ; தில்லா சொல்லியடி .......


தில்லாலங்கடி ; தில்லா சொல்லியடி

சங்கரின் பார்முலாவில் வந்த தெலுங்கு ‘கிக்’ ஒன்றை ’தில்லாலங்கடி’யாக்கி இங்கே தில்லா சொல்லி அடிச்சிருக்காங்க .
வெற்றியை.

தனது இலக்கினைப் பற்றிய தேடலில் இருக்கும் ஒரு இளைஞனின் (வழ்க்கமான) கதை தான். அதைத்தான் அதக்களமாகச் சொல்லி இருக்கிறார்கள் . லாஜிக்கெல்லாம் பார்க்காமல் ஜாலியாக 3 மணி நேரத்தை எஞ்சாய் பண்ண நினைப்பவர்களுக்கு சரியான படம் இது ...

’இவ்வளவு ஜாலியான ஒருவன் காதலனாய்க் கிடைத்தால் ...
இப்படி ஒரு லூசுப் பொண்ணு காதலியாக கிடைத்தால்...
இந்தமாதிரி ஒரு அப்பா,அம்மா நமக்குக் கிடைத்திருந்தால்...........
இப்படி ஒருவேலை(க்ளைமாக்ஸ்) நமக்குக் கிடைத்தால்........’

இப்படி சில ஏக்கங்களை படம் முடிந்து வெளியே வருபர்களிடையே விதைத்திருப்பது இயக்குனரின் வெற்றி

தியேட்டருக்கு வெளியே வயிற்றுவலி மாத்திரையின் விற்பனையைக் கூட்டி இருப்பது திரைக் கலைஞர்களின் வெற்றி

ஒரேபாடலில் நாயகனும் நாயகியும் 15க்கும் மேற்பட்ட பாத்திரங்களாகக் கலந்து வருவது , மலேசியாவை ’நம்ம ஊரு’ போலக் காட்டுவது ஒளிப்பதிவாளரின் வெற்றி

ஒரு (பெண்)அரசியல்வாதியிடம் பண உதவி கேட்க , எதிரியான உனக்குத் தரமாட்டேன்,உன்னை என்காலில் விழவைக்க எவ்வளவு ஆனாலும் செல்வு செய்வேன் என அவர் கூற, தடாலென அவர்காலில் விழுந்து நாயகன் பணத்தைப் பெற்றுச் செல்ல , அரசியல்வாதி குழம்பி ‘இப்போ இங்கே செயிச்சது யாரு?’ என்று புலம்ப , அந்தக் கேள்வி அரங்கில் பார்வையாளர்களயும் தொற்றிக் கொள்கிறது . இது வசனகர்த்தாவுக்குக் கிடைத்த வெற்றி

பாடல்கள் வரும் நேரத்தில் கடைகளில் வியாபாரம் சூடு பிடிப்பது இசையமைபாளரின் வெற்றி


’ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் ’ / ’நாலுபேருக்கு நல்லது செஞ்சா எதுவும் தப்பு இல்ல’ என்பதை இன்று

– ’முடியாதக் குழந்தைகளுக்குச் செய்யும்போது அவங்க முகத்துல தெரியுதே ஒரு சிரிப்பு , அதுலதான் இருக்கு ’கிக்’கு. அதுக்காக என்னவேணா செய்யலாம்’’
என்று லேசாக மாற்றிச் சொல்லி இருக்கிறார்கள்

இது சொல்லவந்த செய்தி 1

அவ்வளவுதான் ., இதுதான் கதையும். அப்படியே கதையோட ஓட்டத்தில் போகுறபோக்குல ஒரு செய்தி வரும் பாருங்க

”தலைக்கனத்தைத் தரும் வெற்றியைவிட
ஜெயிக்கணும்ங்கிற வெறியைத் தரும் தோல்வியிலயும் ஒரு ‘கிக்’ இருக்கு ”

இதுதான் செய்தி 2 , மிக முக்கியமானதும் கூட ..

இதுமட்டும் புரிந்துவிட்டால் தோல்வியில் துவண்டு போவோர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட இதைவிட வேறு மருந்து இருக்க முடியாது

இந்த இரண்டு செய்திகளும் குறைந்தது இரண்டுபேரின் மனதுக்குள் பதிந்துவிட்டாலும் இந்தப்படத்திற்கு மாபெரும் வெற்றிதான் . ஏற்கனவே 50% வெற்றிப்படமாகிவிட்டது ( 1 ஆளுக்குள் (எனக்குள்) பதிந்துவிட்டதே :-)

வாழ்த்துகள் ...
.

Monday, September 21, 2009

உன்னை, என்னை, நம்மைப் போல ஒருவன் ..!


மகாபாரதம் :

துரியோதனன் கண்ணனிடம்
”துரோகம் இழைத்துவிட்டாய் கண்ணா
அவதாரமாய் இருந்தும்,
தர்மம் மீறி போர்க்களத்தில் நடந்து கொண்டாய் ,
வதந்தி பரப்பிக் குழப்பம் விழைவித்தாய் ,
கர்ணனை சூழ்ச்சியால் வீழ்த்தினாய் ,
அர்ச்சுனனுக்கு சாரதியாய் வந்து மாயம் செய்தாய் ,

அதர்மமாய் நடந்து கொண்டாய் கண்ணா
அதர்மம் விளைவித்துவிட்டாய் ! “

கண்ணின் பதில்
“அதர்மம் செய்பவர் , எதிரேயிருப்பவரிடம் தர்மம் எதிர்பார்ப்பது முறையில்லை !

அதர்மத்தை அதர்மத்தால் அழிக்கலாம் , தப்பில்லை !! ”

--இதுதான் படத்தின் செய்தி


அடர்ந்த கானகம் :
வேட்டைக்களம் .
உயர்ந்த பாறையின் மேல் அமர்ந்திருக்கிறது சிறுத்தை .
புகுந்து விளையாட வாய்ப்பிருந்தும் பொறுமையாய் ,
குட்டிகளுக்கு வேட்டையாட தளம் அமைத்துக்கொடுத்து விட்டு
நடப்பவற்றை நிதானமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது பெருமையாய் !

-- இதுதான் (உலக) நாயகன்


ஆங்காங்கே குறிப்பால் உணர்த்தும் சின்னச் சின்ன செய்திகள் :
(படத்திற்கு சம்பந்தம் இல்லையென்றாலும் , நாம் தெரிந்துகொள்வதற்காக ....)

[படத்தில் வந்த வரிசையில்]

#)மனைவியால் தாக்கப்படும் (சிறுபான்மை) கணவன்மார்களுக்கான சட்டப் பாதுகாப்பு பற்றியக் கேள்விகுறி?
#) கன்ஸ்யூமர் சட்டங்களின் உண்மை நிலை பற்றிய சந்தேகம் ! ( குக்கர் )
#) இடதுகைப் பழக்கமிருந்தாலும் அடுத்தவருடன் புழங்கும்போது வலதுகையை உபயோகப்படுத்த வேண்டும் ( பேனாவைத் திருப்பிக் கொடுக்கும் போது )
#) அரசாங்க அலுவலகக் கட்டிடங்களின் நிலமை ( பாத்ரூமில் தண்ணி வராது )
#) லஞ்சத்தை எதிர்க்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள் ! கவனம் !!
#) இடமாற்றம் போன்ற இடர்களையெல்லாம் பொருட்படுத்தாமல் இயங்கும் இளைய சமுதாயம் ( காவல்துறையிலும் )வந்துகொண்டிருக்கிறது ! ( ஆரிப்)
#) விஞ்ஞான முன்னேற்றத்தை வரவேற்க வேண்டும் ( பேக்ஸ் வேண்டாம் , ஈ-மெய்ல் அனுப்பு)
#) பதட்டம் / அலட்சியம் குறைக்க வேண்டும் ( ஆரிப் - 20 மாடிகள் தேடி ஏறியவர், மொட்டை மாடிதானே எனக் கவனிக்காமல் விடுவது )
#)அரசியலின் உண்மை முகம் ( தேர்தல் வெற்றிக்கு பாதிப்பு வராதே )
#) புகழுக்காக செயல்படும் ஊடகங்களின் நிலை ( எது நிகழ்ந்தாலும் நேரடி ஒளிபரப்பு )
#) அரசியல் கனவில் உள்ள நட்சத்திரங்கள் ( ’தளபதி’ ஸ்ரீமான் )
#) பெண்களுக்கான முக்கியத்துவம் ( சக்தி வாய்ந்த ஹோம் செக்ரட்டரி , விஜெவுக்கு காவலதிகாரி சிகரெட் பற்ற வைக்கும் இடம் )
#) பலியாடுகளாக்கப்படும் உயரதிகாரிகளின் மனநிலை ( மோகன் லால் )
#) ஐடி இளைஞர்களின் தெளிவான பிம்பம் ( தொலைபேசியில் ‘கேர்ள் ப்ரண்ட்’ ,/ உண்மையான இடத்தைக் கண்டுபிடித்த பிறகும் , [ நிகழ்வது நியாயத்திற்குத்தான் எனத் தெரிந்தபின் ] கண்டுபிடிக்கவில்லை என மறுப்பது )
#) மதத்தின் புனிதத்தை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்திக்கொள்ளும் தீவிரவாதிகள்
#) உடனடி நீதியை எதிர்பார்த்து ,( தாமதமான நீதியைத் தவிர்க்க ) நமது சட்ட அமைப்பின் முன்னால் எழுப்பப் பட்டிருக்கும் கேள்வி !


--இது(வும்)தான் படம்


பி.கு : 20 மாடிகளுக்கும் மேலான கட்டிடத்தின் , கைப்பிடிச் சுவறில்லாத மொட்டைமாடியின் விளிம்பில் முன்னும் பின்னும் அசைந்துகொண்டே நாயகன் நிற்பது (பயமாக இருந்தாலும் (இருக்கும்)வெளியே காட்டிக்கொள்ளாமல் இருப்பது ) ஒரு மிகப்பெரிய சாதனை

உயரத்திலிருந்து உலகினை (பறவைப் பார்வையில்) உள்ளபடி காட்டிய தொழில் நுட்ப்பக் கலைஞர்கள் , படைப்பாளிகள் அனைவருக்கும் வெற்றிப் பயணம் தொடர உளமார்ந்த வாழ்த்துக்கள்


காட்சிக்குக் காட்சி ரசிங்க
திரையரங்குக்குப் போய் ருசிங்க

தவறு நடக்கும்போதே தட்டிக் கேளுங்க
தீவிரவாதத்தை வேரிலேயே வெட்டிக் கொளுத்துங்க

வாழ்க பாரதம் !


.