Showing posts with label தேசம். Show all posts
Showing posts with label தேசம். Show all posts

Friday, January 27, 2012

குடியரசு தின வாழ்த்துகள் ! ..குடியரசு என்றால் என்ன ?




குடியரசுதின நல்வாழ்த்துகள்

குடியரசு என்றால் என்ன ?

குடியரசு நாளே முழுமையாய் நாம்நம்
விடுதலையைப் பெற்றடைந்த நாள்
(#என்குறள்)

ஒருவிளக்கம் :
( #என்போன்ற தெரியாதவர்களுக்கு மட்டும் )

1947 ஆக., 15ல் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு விடுதலை என்ற பெயரில் டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது
(இது விடுதலைக்கான ஆரம்ப அறிவிப்பு வெளியான நாள் )
(#டொமினியன் =ஆங்க்கிலேய மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி. இதன்படி நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை அவர்கள் தான் நிர்வகிப்பர். அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருப்பார்).

விடுதலைக்குப் பின், நம்மை நாமே ஆளும் வகையிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு செயல்படும் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தவும் ,83 நாடுகளின் அரசியல் சட்டங்களை அராய்ந்து , தேர்ந்து , திருத்தம் செய்து இந்திய அரசியலமைப்பு புதியதாக உருவாக்கப்பட்டது . அந்த அரசியலமைப்பு, 1949 நவ., 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. பிரிட்டிசாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக மக்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி பதவி(மறைமுகமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்) உருவாக்கப்பட்டது.
இந்தியக் குடியரசு உருவானது
(இதுதான் உண்மையான / முழுமையான விடுதலை நாள் )


வாழ்க உறவுகள்

Saturday, August 20, 2011

கொள்ளை போகுதே எம் பிள்ளைகளின் எதிர்காலம் ....!


தொலைவிலிருந்தே பாருங்கள் கனவான்களே.....
அங்கே அரசாங்க ஆணையுடன்
சாரிசாரியாய்க் காத்திருக்கிறார்கள் கயவர்கள்........
DSCN3263bf.jpg


வருங்காலத்துக்குச் சேர்த்துவைப்பதாய்
குருட்டுக் கணக்கிட்டுக் கொண்டு
தம் குழந்தைகளின் எதிர்காலத்தையும்
சேர்த்தேபோய் கொள்ளையடிக்கிறார்கள்...
மொத்தமாய்ப் புதைக்க
சோர்ந்தேபோகாமல் குழியெடுக்கிறார்கள்......
DSCN3266bf.jpg
DSCN3269bf.jpg
DSCN3268bf.jpg

ஆற்றுப் படுகையிலிருந்து ஒரு மரண வாக்குமூலம் :

கல்தோன்றி, மண் தோன்றா...... என நம் மக்கள் பேசும்போதெல்லாம் , நம்மையும் ஒரு பொருளாக எடுத்துப் பேசுகிறார்களே என்று மணல் பெருமைபட்டிருக்கும் முன்பு..

ஆனால்........

தொடரும் அடுத்த 10ம் ஆண்டின் முடிவில்

கல்தோன்றி, மண் தோன்றா...... என மேடை போட்டுப் பேசுபவரிடமே கேட்டுக் கொண்டிருப்பவர் எதிர் கேள்வி கேட்பார்

‘எல்லாம் சரிதான் ..மண்ணு, மண்ணுங்கறீங்களே ..

அப்படீன்னா என்ன ?

கடந்த 20 ஆண்டுகளில் , ஆற்று மணலின் இருப்பில் பாதியை கொள்ளையடிக்கப் பட்ட அவலம் கண்டு ,பொங்கி எழுவோர் யாருமில்லை... தவறி யாரும் எழுந்தாலும் அவருக்கு துணைவருவோர் யாருமில்லை .. நம் குழந்தைகளின் வருங்காலம் நம் கண்முன்னே கொள்ளை போய்க் கொண்டிருப்பதை யாரும் உணர்ந்ததுபோலவேத் தெரியவில்லை .

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ?

ஆற்றுப் படுகையில் 1 அங்குலம் உயரத்திற்கு மண் சேகரமாகிப் படிய ஆகும் காலம் 5000 ஆண்டுகள் ..

நமது அரசு ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அளித்திருக்கும் அளவு 3 அடி ..அதாவது 36 அங்குலம் தோண்டிக்கொள்ளலாம் ...

அதாவது 1,80,000 ஆண்டுகள் சேமிப்பை அரசாணை என்ற பெயரில் அபகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது ...

ஆனால் ... நடப்பது என்ன ???

இயந்திரங்களின் உதவியோடு 20 அடி ஆழம் தாண்டியும் மணல் தோண்டி எடுக்கப் படுகிறது ....அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் பல்லாயிரம் மடங்கு அதிகமாக......

என்னவாகும் ஆற்றுக்குப் பக்கத்திலுள்ள இடங்களில் நிலத்தடி நீரோட்ட நிலைமை ?

ஆற்றின் நீர்மட்ட அளவைப் பொறுத்தே அமையும் கிணற்றின் நீர்மட்டங்களும் ....ஏற்கனவே 20 அடியில் கிடைத்த தண்ணீர் இப்பொழுது 40 அடியைத் தாண்டியும் கிடைப்பதில்லை.

கடல் மட்டம் உயரும் பொழுது உள் நுழையும் நீர் பள்ளங்களில் தேங்கி பக்கவாட்டில் நீரோட்டங்கள் மூலமாக விளை நிலங்கள் , கிணறுகளில் கலந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் குலைக்கிறது ... குடிமக்களின் குடி நீர் ஆதாரங்களை அழிக்கிறது

இனி அணைகளில் திறந்துவிடப்படும் நீர்.... இடையிலேயே இந்தப் பள்ளங்களில் தேங்கி, கடைமடையை அடையாமலேயே போகக் கூடும்..

கேரள ஆறுகளில் மணல் எடுக்க அங்கே தடை உள்ளது.அந்த அரசுக்கு மணலின் தேவை புரிந்திருக்கிறது ...ஆனால் இங்கோ...!!

இரவு,பகல் பாராமல் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இங்கிருந்து நம் மணல் வளங்களை கேரளாவுக்குக் கடத்தி கொண்டிருக்கிறோம்....

ஏன் ..நமக்கந்த விழிப்புணர்ச்சி இல்லை...எங்கே போனது நம் சுயபுத்தி .... எப்போதிரிந்து இப்படி சுயநலமாகவே சிதிக்கத் தொடங்கினோம் ?

பழமொழிகளின் பெருமையே அது காலத்தைத் தாண்டியும் நிலைத்து நிற்பதுதான்...

ஆனால் நம் முன்னால் அது தோற்கப் போகிறது ... ஆம் பழமொழிகளின் பெருமையை சிதைத்த பெருமையை நாமே முதன்முதலில் அடையப் போகிறோம்

RIVERS NEVER GO REVERSE

--இந்தப் பழமொழி விரைவில் காணாமல் போகும்...ஆம் ..கடல் ஒருநாள் பொங்கும் போது .. நாம் தோண்டி வைத்திருக்கும் பள்ளங்களின் வழியே கடல்நீர் ஆறாக பின்னோக்கி ஓடத்தான் போகிறது ...

வாழ்க நமது திறமை !...வளர்க அதன் புகழ் ..!!

Monday, August 15, 2011

இன்றே / இன்றாவது பதியமிடுவோம் ......!

இன்றே / இன்றாவது பதியமிடுவோம் .....!


இருவண்ணம் சிறப்படைய
ஒரு வண்ணம் சிந்தி
மூவண்ணம் உயரச் செய்த
முகவண்ணம் தெரியாத

மூத்த உறவுகளின்
தியாகச் சுவடுகளை

இன்றைய இனிப்பையும்
ஒருநாள் விடுப்பையும்
’உலகத் தொலைக்காட்சியில்
முதல்முறையாக’வைத் தாண்டியும்

இன்று
ஒரு தளிர் இதயத்தில்
பதமாய்ப் பதியமிடுவோம்..

அங்கொன்று இங்கொன்று
என்றாலும் ஒருநாள்
ஒன்றாய் சேர்ந்தே தீரும்...
புதிய தலைமுறை
ஒன்று நம்முன் உருவாகும்....

சேர்ந்தே
உருவாக்குவோம்.....

தாய்மண்ணே வணக்கம் !

( நன்றி :படம் :இணையம் )

Wednesday, April 20, 2011

16 :நம் மரபைக் காக்க..இயன்றவரை என்னாலானதை இறுதிவரைச் செய்வேன் ....!


உலக மரபு தினம்..(18.04.11)

அழிவின் நுனி விளிம்பில்
பரிதாபமாய் நின்றபடி
பழைமையின் பெருமையை
பலன் எதிர்பாராது நம்முன்
பறைசாற்றிக் கொண்டிருக்கும்

’நினைவுச் சின்னங்களை
புராதானக் கோவில்களை
வண்ண நுண்ணோவியங்களை
கலைமிகு அழகுச் சிலைகளை’

மேலும் சிதையாமல்
யாரும் சிதைக்காமல்
பாதுகாக்கும் விழிப்புணர்வை
பொதுவில் உருவாக்கும் ஒரு
தன்னலமில்லாப் பண்பாளர்களின்
தன்னார்வச் சுற்றுலா அது .......

இந்தியா முழுதும் சுற்றிவந்து
இன்றுடன் முடிவடைகிறது
மன்றம் வைத்த மதுரையின்
மீனாட்சி அம்மன் கோவிலில்..........

நம் முன்னோரின்
கலை தொழில்நுட்பத்தின்
வானளாவிய முதிர்ச்சியை
இன்றும்காட்டிக் கொண்டிருக்கும்
காலக் கண்ணாடி அது......

கலையின் வீச்சில் மிரண்டு நான்
மலைத்துப் போய் நிற்கிறேன்
மறு நிமிடமே மனம் கலைந்து
வெறுத்துப் போய் விடுகிறேன்

சுற்றிலும் குப்பைகள்
சுகாதாரச் சீரழிவுகள்
சுற்றுச்சூழல் சீர்கேடுகள்
கசங்கிய காகிதப் பொட்டலங்கள்
காலியான குளிர்பானக் குடுவைகள்

”மாற்றவேண்டும் இந்த
மனிதனின் தன்மையை...
காக்கவேண்டும் கலைச்
சின்னங்களின் மேன்மையை....

நாம் மனது வைத்தால்தான்
நாளையாவது மாற்றங்கள் வரும் - எல்லாம்
நமது உடமைகள் எனக் கொண்டால்தான்
நம்மிடையுள்ள தடுமாற்றங்கள் தீரும்”

என்றாவது ஒரு நாளிந்த
உண்மை எல்லாருக்கும் புரியும்
என்னும் அதீத நம்பிக்கையோடு
அங்கிருந்து கிளம்புகிறேன்

”அட ,
.!!!”

கலைச் சின்னங்கள் பற்றிய
கவலையில் எனது மொத்த
கவனம் சிதறிப் போனதில்
முக்கியக் கடமை ஒன்றை
செய்யாமல் விட்டிருக்கிறேன் :(

’இந்தியா முழுதும் செய்ததை எப்படி
இங்கே முழுதாய் மறந்துபோனேன் ?
இங்கேவரும் வாய்ப்பெனக்கு
இனியும் இருக்குமோ எனத் தெரியவில்லை..!’

எனவே .........

கோவிலின்
சுவரிலில்
எனது வரவையும்
என்னவளின் பெயரையும்
சுரண்டிப் பதிக்கக் கிளம்புகிறேன் நான் ..............

Tuesday, January 25, 2011

Saturday, November 13, 2010

முளையிலேயே கிள்ளப்பட்ட........


அவர்களைப் போலவே................... :

அவர்களைப் பின் தொடர்ந்தும்

அவர்களின் முன் தொடர்ந்தும்

அவலத்தை விலக்கச் சொல்லியும்

அசிங்கத்தை விளக்கிச் சொல்லியும்

அவர்களின் முகத்தினை நோக்கி

அரற்றிக் கொண்டே இருக்கிறேன் நான்


எனது அரையின்மேல்

குவித்த பார்வையுடன்

குவிந்த புருவங்களுமாய்....

குறையெதையோக் கண்டதுபோல்

குனிந்து கிசுகிசுப்பாய்

தங்களுக்குள் பேசிக் கொள்வதிலேயே

கவனமாய் இருக்கிறார்கள் அவர்கள்......


வலிக்கும் மனதுள்

வழி என்றெதுவும்

புலப்படவில்லை எனக்கு...


புலம்பலை விடுத்து

அவர்களைப் போலவே

கோவணமின்றி

உலாவத் தொடங்குகிறேன்

நானும்.............!


.

Saturday, October 2, 2010

காந்தி ஜெயந்தி..: அவருக்கென்ன ?...விடச் சொன்னார் தான் ...!


விடிந்தால் பள்ளிவிடுமுறை

வீட்டிற்குப் போகும்முன்

நல்லதாக நாலுவார்த்தை

நாமளாவது காந்தியைப் பற்றி

நறுக்குன்னு சொல்லியணுப்புவோம்

பசங்களா .....

காந்தித் தாத்தா...

அவரது அறிவுரைகளைப் பற்றி

அணுஅளவாவது தெரிஞ்சிக்கோங்க .....

ஆழ்ந்த கருத்துக்களைப் பற்றி

மேலாகவாவது புரிஞ்சுக்கோங்க....

அவர்.........

இம்சைக் கிடம்கொடா(து) உந்தி விடச்சொன்னார்
அந்நிய மோகம் அணை(னை)த்தும் விடச்சொன்னார்

தீண்டாமை யைத்தூரத் தள்ளி விடச்சொன்னார்
ஆணாதிக் கம்அவநம் பிக்கை விடச்சொன்னார்

ஆள்க்கொள் ளுமாசை சித்தம் விடச்சொன்னார்
ஆழ்மன வேற்றுமையை உன்னில் விடச்சொன்னார்

வாய்மைப் பெருக்கியே பொய்மை விடச்சொன்னார்
சோம்பல் அதனை மொத்தம் விடச்சொன்னார்

மண்ணில் மதவேற் றுமையை விடச்சொன்னார்
உன்னில் பயமும் சுயமும் விடச்சொன்னார்


எடுத்தத் தலைப்பில் எடுப்பாய் முடித்தேன்

என்ன சந்தேகம் என்றாலும்

என்னிடம் கேளுங்கள் என்றேன்

இரண்டுபேர் எழுந்தனர்

ஆளுக்கொன்றாய் தொடுத்தனர்...

இதுவரைக்கும் என்னவெல்லாம் விட்டீங்க சார் ?

இன்றைக்கு லீவும் விடச் சொன்னாரா சார் ??

குட்டிக் குழந்தைகளின் கேள்விகள்

நெற்றிப் பொட்டில் அறைந்தன .....

‘விடச்சொன்னார் ..சரிதான் ...!

விட்டிருக்கிறோமா நாம் ? - அவர்

சொன்னது எதையும் விடவில்லை ஆனால்

சொல்லாததை எல்லாம் விட்டிருக்கிறோம் ..!

இரவெல்லாம் என்னைச் சுற்றிலும்

ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன

அந்தக் கேள்விகள்......!


தூங்கவில்லை நான்........!

”நீங்கள்” ............?

Sunday, August 15, 2010

இன்றே / இன்றாவது பதியமிடுவோம் .....!


இருவண்ணம் சிறப்படைய
ஒரு வண்ணம் சிந்தி
மூவண்ணம் உயரச் செய்த
முகவண்ணம் தெரியாத

மூத்த உறவுகளின்
தியாகச் சுவடுகளை

இன்றைய இனிப்பையும்
ஒருநாள் விடுப்பையும்
’உலகத் தொலைக்காட்சியில்
முதல்முறையாக’வைத் தாண்டியும்

இன்று
ஒரு தளிர் இதயத்தில்
பதமாய்ப் பதியமிடுவோம்..

அங்கொன்று இங்கொன்று
என்றாலும் ஒருநாள்
ஒன்றாய் சேர்ந்தே தீரும்...
புதிய தலைமுறை
ஒன்று நம்முன் உருவாகும்....

சேர்ந்தே
உருவாக்குவோம்.....

தாய்மண்ணே வணக்கம் !

( நன்றி :படம் :இணையம் )

Thursday, August 5, 2010

என்ன செய்யப் போகிறோம் நாம்........?


என்ன செய்யப் போகிறோம் நாம் ??

அன்பு உள்ளங்களே
சில சின்னச் சின்ன செய்திகளை முதலில் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் . அவைகளுக்கிடையே தொடர்பில்லாமல் இருந்தாலும் எனக்காக ஒரு நிமிடம் ஒதுக்கித் தொடர்ந்து வாருங்கள்
செய்தி 1 :
'' நான் கோவைக்கு டிரான்ஸ்பர் ஆகியிருந்த நேரம். என் பொண்ணுக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. அவசரமா ஹாஸ்பிடலுக்குத் தூக்கிட்டுப்போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட்டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு மாற்றலாகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா பாருங்க ...சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''
மாவட்டத்தின் மிகஉயர்ந்த பதவியில் இருந்த ஒரு அரசு ஊழியரின் பரிதாப வாக்குமூலம் இது .....

செய்தி 2:

வங்கி சேமிப்பு = 7,172 ரூபாய்

எல்.ஐ.சி. ஹவுஸிங் லோனில் வீடு = மதிப்பு ஒன்பது லட்சம்

இது பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை முதன்முதலில் வெளியிட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மொத்த சொத்தின் மதிப்பு

செய்தி 3 :

லஞ்சம் தவிர்த்து
நெஞ்சம் தவிர்த்து




இதனை தனது உயிர்மூச்சாகக் கொண்டு , அலுவலக நுழைவாயிலும், தனது தலைக்கு மேலும் அனைவரின் பார்வையிலும் படும்படியாக எழுதி வைத்துக்கொண்டு,. (மரத்தாலான பள்ளிக்கூட மேசை, ’S’ டைப் / வலைபின்னிய இரும்பு நாற்காலி .அதில் ஒரு வெள்ளைத் துண்டு விரிப்பு –இதுதான் அலுவலக அமைப்பு) நிமிர்ந்தபடி உழைத்துக் கொண்டிருக்கிறார் அவர்

செய்தி 4 :
தன்னுடைய மாவட்டத்தில் ஒரு கோடி மரங்கள் நட்டு வளர்க்க வேண்டும் என்ற மிகப் பெரிய கனவோடு, இது வரை தனது அலுவலக வளாகத்தில் மட்டும் 25,000 மரக்கன்றுகளுக்கு உயிர்கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிருவனங்கள் போன்றவற்றின் உதவியோடு நெடுஞ்சாலைகளில், பள்ளி வளாகங்களில், கிராமத்தில், கிராமத் தோப்புகளில் என இது வரை நட்டு வைத்து பராமரிக்கும் மரங்களின் எண்ணிக்கை இதுவரையிலும்.... மொத்தம் 25 லட்சத்திற்கும் மேல் ...........ஒரு அரசு ஊழியரின் நனவாகிக்கொண்டிருக்கும் கனவு இது.....

செய்தி 5 :

விவசாயிகளே நம் நாட்டின் ஜீவன் - முதுகெலும்பு
எனவே விவசாயிகளை கௌரவிப்போம் !
விவசாயிகளுக்கு நம் அலுவலகத்தில்
முன்னுரிமை அளிப்போம் !!

அவரது அலுவலகத்தில் அனைவர் பார்வையும் படும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு இது

செய்தி 6 :


விவசாய மக்களின் வேலைப் பளுவினைக் கருத்தில் கொண்டு

’குறைகளைச் சொல்ல இங்கே வாருங்கள்’ என தன் அலுவலகத்திற்கு இழுத்தடிப்பதை விட அவர்களைத் தானே நேரில்சென்று குறைகளைக் கண்டறிந்து தீர்த்துவைக்க , திடீரெனத் தேர்ந்தெடுத்து ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கேயே இரவு தங்கி விவசாய மக்களின் குறைகளை கண்டறிந்து, முடிந்த அளவுக்கு அங்கேயே தீர்த்தும் வருகிறார் அவர்

செய்தி 7 :


ஒரு கிராமத்தில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை கிளம்பும் வழியில், அந்தக் கிராமத்தைச் சார்ந்த ஒரு வயதான விவசாயத் தம்பதியினர் தங்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்ததைக் கவனித்து, தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, இறங்கிச் சென்று அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, ’தான் வந்திருக்கும் செய்தி அறிந்தும் கூட, தங்கள் நிலத்தில் உழைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு பெருமை’ கொள்வதாகக் கூறி அவர்களோடு புகைப்படம் எடுத்து அதைத் தனது அலுவலத்தில் பெரிதாக மாட்டி வைத்திருக்கிறார் அவர்

செய்தி 8 :

கிராமத்தில் இருக்கும் பள்ளிகளுக்குள் அறிவிப்பின்றி நுழைந்து, அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க ஆசிரியர்களைப் பெரிதும் ஊக்குவித்தும் , பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அவர்களுடன் நேரடியாக அவர்களுடன் கடிதத் தொடர்பும் கொள்கிறார் அவர்.

செய்தி 9 :
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் விவசாயிகள், கஷ்டப்பட்டு விளைவித்தப் பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யும் உழவர் சந்தைகள் ஓரளவு விவசாயிகளுக்குக் கைக்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்,

'விளையும் பொருட்களை அப்படியே விற்பதோடு நின்றுவிடாமல், மதிப்புக் கூட்டி விற்றால் கூடுதல் வருமானம் கிடைக்குமே'

என்ற மாற்றுச் சிந்தனையில் உழவர் சந்தையில் 'உழவன் உணவகம்' என்பதைத் தொடங்கினார் . காலையில் காய்கறி விற்பனை, மாலையில் உணவகம் என எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறது உழவர் சந்தை. வெறும் உணவாக மட்டுமல்லாமல், ஊட்டச்சத்து நிறைந்த நமது பாரம்பர்ய உணவுகள், மிகவும் குறைந்த விலையில் இங்கே கிடைக்கும் என்பதுதான் உழவன் உணவகத்தின் சிறப்பே. கம்புதோசை, தினைப் பாயாசம், தினைஉப்புமா, முருங்கைசூப், ராகி இட்லி, ராகிதோசை, வெஜிடபிள் சூப், காளான் சூப், மிளகுத்தக்காளி சூப், சோளக் குழிபனியாரம் என விதவிதமான உணவுகளை ருசி பார்த்த மக்கள் கூட்டம், நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது.

இங்கே உணவகம் நடத்த விரும்பும் விவசாயிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை வழஙகப்படுகிறது. சுற்றுவட்டார விவசாயிகளில் ஒருவரான எர்ணாபுரம் வெண்ணிலா, ''தினமும் 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரைக்கும் வியாபாரமாகுது. தினசரி 500 ரூபாய் வரைக்கும் லாபமா கிடைக்குது. கடைக்குத் தேவையான பொருளுங்களை தினமும் எங்க ஊர்ல இருந்து வாடகைக்கு ஆட்டோ பிடிச்சுதான் கொண்டு வந்துகிட்டிருந்தேன். வாடகை மட்டுமே மாசத்துக்கு ரெண்டாயிரம் ரூபாய். இப்ப, இதுக்காகவே சொந்தமா ஒரு மாருதி கார் வாங்கியிருக்கேன். எல்லாம் இந்த உணவகத்துல சம்பாதிச்ச காசுலதான்'' என்றவரின் முகத்தில் பெருமை பொங்கி வழிந்தது. “விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை என்பதால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நகரத்தை நோக்கி நகர்ந்தபடி இருக்கிறார்கள். விளைவிக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டியப் பொருளாக மாற்றினால்தான் விவசாயிகளின் வாழ்வு மேம்படும். அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் உழவன் உணவகம். இங்கு மொத்தம் 15 கடைகள் இருக்கிறது. ஆரம்பித்து ஐந்து மாதத்தில் 52 லட்சம் ரூபாய் வரை இங்கு உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்று தொடங்கினால் விவசாயிகள் வேலையும், நல்ல வருமானமும் பெறுவார்கள்'' என்று புதிய சிந்தனையை விதைத்திருக்கிறார் அவர்


செய்தி 10 :

தமிழகத்தின் தலைசிறந்த பத்துப் பேரில் ஆனந்த விகடன் பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் அவர்

--எனக்குத் தெரிந்த குட்டிச் செய்திகள் ( ஒரு நாள் அறிமுகத்தில் அறிந்து கொண்டது) இத்துடன் நிறைவு பெறுகிறது
’பெயரில் என்ன இருக்கிறது ?’என்று கேட்டான் அறிஞன் ஒருவன்

என்னைக்கேட்டால் ”பெயரிலும் எல்லாம் இருக்கிறது..!” என்றுதான் சொல்வேன்

ஆம்....

சகாயம்

உ.சகாயம் ஐ.ஏ.எஸ்

மாவட்ட ஆட்சியர், நாமக்கல் மாவட்டம்

(ஊர் : புதுக்கோட்டை. ;தந்தை : உபகாரம் பிள்ளை. தாயார் : சவேரியம்மாள்.)



மேலேயுள்ள செய்திகளின் நாயகர். ஏழை எளியவர்கள் சகாயம் அடைய நாளும் உழைத்துக் கொண்டிருப்பவர் அவர் .

அவரது ஒரு நாள் செயல்பாடுகளை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பினைப் பெற்றதே எனக்குக்கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன் . ஆம் .

‘ நான்’ என்று எனக்குள் இருக்கும் ’தற்பெருமையை’ பல சமயங்களில் / இடங்களில் /கிடைத்த பாடங்களால் செப்பனிட்டிருக்கிறேன் , சரி செய்திருக்கிறேன் . ஆனால் அதன் பெரும்பகுதியை அழித்தது நாமக்கல் ஆட்சியரின் அலுவலக வளாகத்தில்தான் .

நான் இங்கே எது சொன்னாலும் அவரது புகழ்பாடுவது போலவேத் தோன்றும் . ஆனாலும் இங்கெ இதைப் பதிவு செய்தே ஆகவேண்டும் .

அவரைப்போலவே சுற்றமும் !

ஒவ்வொரு மனிதனின் முன்னேற்றத்திற்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பதற்கான சாட்சியம் அவரது வீடு . குறை சொல்ல வந்த ஒரு கிராமத்து விவசாயியின் 2வயசுக் குழந்தையை கலெக்டர் வீட்டம்மா தூக்கிக் கொண்டு போய் (காலைலயே வந்துட்டாங்க போல ...மதியம் 2 மணி ஆகி விட்டதால் ) சாப்பாடு ஊட்டி, ஒன்னுக்குத் தொடைச்சு , ஒழுகிய மூக்கை சுத்தம் செய்து ...

’’’’’’’’’’’’’’’’’

சம்பந்தமே இல்லாத ஒருவருக்கு இதுபோன்ற பணிவிடை செய்ய எப்படி மனது வரும் ???? இதெல்லாம் எப்படி சாத்தியம் ??

நினைக்கும் போதெல்லாம் என்னால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை .

ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம் அவருக்கு............

என்ன ஒரு எளிமை !!

( அதிக விளக்கம் தேவை இல்லை .இணைப்புப் படத்தில் அவரது சட்டையின் [காலர்]கழுத்துப்பட்டையின் நிறமே இதற்குச் சான்று :)

தமிழக இளைஞர்களுக்கு அப்துல்கலாம் அய்யாவுக்கு அடுத்து , வாழும் வழிகாட்டியாக உருவாகிக்கொண்டிருப்பவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அய்யா .சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் என்றால் அது மிகையாகாது

‘நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக தண்டனை தரணுமுன்னா ,தாராளமாப் பண்ணிக்கோங்க'
ஒரு நாளைக்கு குறைந்தது 10 முறையாவது இப்படிப் பேசுகிறார்

( தொலைபேசியில் , நேரில் )

ஆலமரம் அதன் கடமையை செவ்வனே செய்துகொண்டிருக்கிறது
தன்னலமின்றி மேல் நோக்கி விரியும் கிளைகளை உரிய நேரத்தில் இறங்கித் தாங்க வேண்டியது விழுதுகளின் கடமை ! . நமது கடமை !!
வேர்களை வழுவாக்க விழுதுகள் கீழ் நோக்கி விழவேண்டும்
என்ன செய்யப்போகிறோம் நாம் ?

வெளிப்பார்வைக்கு சிங்கம் அரசாண்டு கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது . கூர்ந்து கவனித்தால்தான் தெரிகிறது . சிங்கத்தின் பாதையில் காத்திருக்கும் புதைகுழிகளும் , குள்ள நரிகளும் , தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திகளும் ,குறிவைத்து மறைந்திருக்கு அம்புகளும் .
உண்மையில் சிங்கம் ஒன்றும் அரியணையில் அமர்ந்திருக்கவில்லை .
கூரான கத்திமேல் நின்று கொண்டிருக்கிறது
என்ன செய்யப்போகிறோம் நாம் ?

’’நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!''
- தடதடக்கும் அவரது வார்த்தைகளில் வெட்ட வெளிச்சமாகிறது நடப்பு நிலவரம்
என்ன செய்யப்போகிறோம் நாம் ?

.’’ வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடுதான் ஓய்வு பெறணும்னு மட்டும்முடிவு பண்ணுனேன்’’ ஏக்கத்தோடு வெளிப்படு இந்த குறைந்த பட்ச ஆசையை நிறைவேற்ற
என்ன செய்யப்போகிறோம் நாம் ?

வருங்கால சமுதாயம் கொண்டாட வேண்டியது மினுமினுக்கும் சினிமா நடசத்திரங்களையும், பளபளக்கும் விளையாட்டு வீரர்களையும் அல்ல, இந்த தேசத்துக்காக நேர்மையாக உழைக்கும் இது போன்ற பெருமை மிகு மனிதர்களைத்தான்.
பாதுகாக்கப் பட வேண்டியவர்கள் இவர்களைப் போன்றோர்தான்.
இவர்களில் வெளி உலகின் பார்வைக்குத் தெரிபவர்கள் 1 சதத்துக்கும் கீழ்தான்.
மற்றவர்களின் இருப்பையும் தேடிப் பதிவுசெய்ய வேண்டும். அவர்களும் கவனிக்கப் படுகிறார்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப் படுத்தவேண்டும்

முடியுமா....!?

நம்மால் முடியும் !!!

அதற்காக ..... அடுத்து

என்ன செய்யப்போகிறோம் நாம் ?





தேடிச் சோறு நிதந்தின்று-பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்

வாடித் துன்பமிக உழன்று-பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து- நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல

வேடிக்கை மனிதரைப் போலே-நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ ?



வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் , ஒரு நிமிடம் ஒதுக்கி மேலுள்ள வரிகளை மீண்டும் ஒரு முறை , மெதுவாகப் படித்து உள்வாங்குங்கள் ...

’என்ன செய்யப் போகிறோம் ??’ என்ற கேள்வி
‘ நம்மால் எதுவும் செய்ய முடியும் .. !!’ என்று மாறும் .

மாறும் இதயங்களுக்காகக் காத்திருக்கிறேன் ...
வாருங்கள் உறவுகளே .......


நன்றி : செய்திகளுக்காக /
திரு.ஆல்பர்ட் பெர்ணாண்டோ , திரு. நிஜாமுதீன் , ஆனந்தவிகடன் , பசுமை விகடன், தமிழ்த் தென்றல் மின்னிதழ் .

--
என்றும் அன்புடன் -- துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

Monday, July 26, 2010

நான் இந்தியன் ......... !


26-07-10 :
கார்கில் வெற்றி(யின்)வீரர்களின் நினைவுநாள் :

வீரச் சகோதரர்களுக்கு சமர்ப்பணம் :


கார்கில்

- இங்கே

சூரியனும் பதுங்கியே
...சலனமின்றி பயணம் வரும்
சந்திரனும் பயந்துபோய்
...சந்தடியின்றி தவழ்ந்து வரும்

காற்றும் பயத்தோடு
...கலங்கியபடியே வீசும்
மரங்களும் தங்களுக்குள்
...மெளனமாகவே பேசும்

எதிரிக்கு எப்பவுமே
...இதன்மேல் நேசம்
எல்லையில் இப்பவுமே
...தொல்லையின் நாசம்

மலையெங்கும் மழைபோல
...வெண்பனியே பேசும்
வாழ வழியில்லாமல் எங்கும்
...வஞ்சனையின் வாசம்

ஆனாலும் என்ன
அது என் தாயின் தேசம்


அரைஜான் ஆக்கிரமிக்க எண்ணி
...அரையடி முன் வைத்தாலும்
அரைஞாண் அவிழும் வரை
...அடித்தே விரட்டிடுவேன்

அன்னை பூமியில்
...அந்நியன் ஒருவன்
அனுமதியின்றி புகுந்து
....அங்கே தேவையின்றி

உதிர்ந்து கிடக்கும் ஒரு - வீண்
...மயிரைக்கூடத் தொடவிடேன்
எதிரியைத் தடுக்க எனது - இன்
...உயிரையும்கூடத் தந்திடுவேன்

நான் இந்தியன்..
நாம் இந்தியர்கள்...

வாழ்க எல்லைக் காப்பாளர்கள்....
வளர்க அவர்தம் குடும்பங்கள்......

.

Friday, October 2, 2009

கலி வெண்பா(!) : காந்தி விடச்சொன்னார் ...!


அந்நிய நாட்டவரின் இந்தியச் சுற்றுலா
வந்தயிடத் தில்கணையாய் வந்துவிழும் வார்த்தைகள்

காந்தியின் வாழ்வினைக் கேள்விகளால் துளைக்கிறார்
காந்தியின் கொள்கையைக் கர்வமாய்க் கேட்கிறார்

எமக்கான வாய்ப்பினை ஏற்றே அமைகிறேன்
எம்மகான் ஆசை எடுத்துமுன் வைக்கிறேன்


”இம்சைக் கிடம்கொடா(து) உந்தி விடச்சொன்னார்

அந்நிய மோகமதை அப்போ(து) விடச்சொன்னார்


தீண்டாமை யைத்தூரத் தள்ளி விடச்சொன்னார்

ஆணாதிக் கம்அவநம் பிக்கை விடச்சொன்னார்


ஆள்க்கொள் ளுமாசை அடியோ(டு) விடச்சொன்னார்

ஆழ்மன வேற்றுமையை மானுடம்வி டச்சொன்னார்


வாய்மைப் பெருக்கியே பொய்மை விடச்சொன்னார்

சோம்பல் அதனை சுத்தமாய்வி டச்சொன்னார்


மண்ணில் மதவேற் றுமையை விடச்சொன்னார்

உன்னில் பயமும் சுயமும் விடச்சொன்னார்”


எடுத்தத் தலைப்பில் எடுப்பாய் முடித்தேன்
அடுத்தொரு கேள்வியைத் தானவர் தொடுத்தார்

”சொன்னார் மகாத்மாவும்; சொன்னதெல்லாம் உங்களுக்கு !
என்னவெல்லாம் விட்டீர்கள் ? என்னிடம் சொல்லுங்கள் !!”

ஒருவரியில் கேட்டு ஓய்ந்தார வர்தாம்
ஒருநொடியில் மூச்சு ஒடுங்கியதெ னக்கு

எதிர்பார்க்க வில்லைஎதிர்க் கேள்வியதை நானும்
எதையும் விடவில்லை! ஏனென்(று) தெரியவில்லை?

அவர்பிறந்த நாள்அன்று விட்டதொன்று மட்டும் ;
அவர்சொல்லா(து) இன்று விடுப்பு

Friday, September 18, 2009

கண்தானம்


இறந்தபின் மண்ணில் புதைத்துவிடாமல்
இல்லாதவரின் கண்ணில் விதைத்துவிடு...
காத்திருக்க வேண்டாமே மறுபிறவி பார்க்க
காணலாமே உலகையுடனே இப்பிறவி முழுக்க...

கண்தானம் செய் உடனே...
கண் விழித்து சேவகம் செய்ய
காலமெல்லாம் காத்திருப்பார்
கடவுள் உன்னுடனே...


. (நன்றி : கரு/ கு.த.செய்தி)

Friday, September 11, 2009

தெரியுமா பாரதமே...? இன்று பாரதியின் நினைவுநாள் ........!!


மகாகவியின் நினைவு நாளில் ( 11-09-2009)
அவரின் நினைவில் :


ஏ தேசமே..
என் இனிய பாரத தேசமே...


உனக்காகவே போராடி
உனக்குள் புதைந்த ஒருவனை

அறிமுகப் படுத்துகிறேன் உனக்கு !
அத்தனையும் வாங்கிக்கொள் உனக்குள் !!

அவன் ........

கடவுளிடம் வாதாடும்
திண்மை கொண்டவன்...

வீணையின் புனிதமாய்
தன்னை அறிந்தவன்....

காலம்கடந்து சிந்தித்து
காணாமல் போனவன்....

கனவுகளில் வாழ்ந்து
காற்றில் கரைந்தவன்.....

ஏட்டு சுரைக்காயின்
உண்மை உணர்ந்தவன்.....

எதிர்பார்த்து ஏங்கியே
ஏதுமின்றி ஏமாந்தவன்.....

எதற்கும் பணியாமல்
எல்லாம் இழந்தவன்....

ஊருக்கு உழைத்து
தெருவில் நின்றவன்....

பதுமைப்பெண் வேரறுத்து
புதுமைப்பெண் வரவேற்றவன்....

பாரதி ! - ஆம்
பாரதி என்ற பரதேசி அவன் ......!


நெஞ்சிலேதும் இடமுண்டா? - அவனைப்பற்றிய
நினைவுகள் ஏதும் மிச்சமுண்டா??
....................................................
...................................................

ஏ தேசமே.......!
என் இனிய பாரத தேசமே.......!


தேசத்தின் கனவுகள் மெய்ப்பட
தேடித்தேடி வேண்டியவனின்
கனவுகளைப் பொய்யாக்கிய
கடவுளின் தேசமே !

இனியொரு விதிசெய்ய
இறந்து விரும்பியவனின் ஆசைகளை
இன்றுவரை நிறைவேற்றாத
இனிய தேசமே !

காணிநிலம் கேட்டு
பராசக்தியிடம் வேண்டியவனை
பாராமுகம் காட்டியே
கோணியில் கட்டிய
புண்ணிய தேசமே !

இறுதிவரை போராடியவனின்
இறுதி யாத்திரைக்கு
இருபதுபேர்கூட அனுப்பாத
இந்திய தேசமே !

வா.......................
இதுதான் சமயம் !
பரிகாரத்திற்கு இதுவே சமயம் !!

அவனது கனவு மெய்ப்பட
ஆவன செய்வோம் ! - அதற்குடனே
ஆவணம் செய்வோம் !!

இளையோர் வாழ்வு வளம்பெற
இனியொரு விதி செய்வோம் ! - வா
இனியாவது செய்வோம் !!...


.

Monday, August 17, 2009

நான்.....! .மிகப் பெரியவன் நான்.........!!


அவன்.....
லட்சத்தில் குளிக்கிறான் !
கோடியில் முகம் துடைக்கிறான் !!

சக்தியின் அதிகார மய்யம் - அவனிடம்
சத்தியமே கைகட்டி சேவகம் செய்யும்
பெய்யென்றால் தான் மழையே பெய்யும்

அவன் வரும் வழியில்
அமைச்சர்கள் கைகட்டி இருப்பார்கள்
அதிகாரிகள் வாய்பொத்தி நிற்பார்கள்


அவனிருக்குமிடத்தில்
பணம் பந்தியில் விஞ்சி இருக்கிறது
குணம் கைகட்டி அஞ்சி நிற்கிறது

காசு கை காட்டும் இடத்தில் - மெய்யது
தூசு தட்ட காத்திருக்கிறது

விந்தையாய்த் தெரியாது இது
அகந்தை உள்ளிருக்கும் வரை

புதியதாய் அகம் அரியணை ஏறுகிறது
பழகிய முகம் அடுக்களை ஏகுகிறது


வீட்டில்...
எழுப்பிவிட.. தூக்கிவிட
பல்துலக்க.. பாதம்துடைக்க
துணி மடிக்க.. துவட்டிவிட
ஊட்டிவிட.. வாய்துடைக்க
செருப்பு மாட்ட.. ஆடை பூட்ட
வாசல் திறக்க.. வழி அணுப்ப

அப்பப்பா....
ஆயிரம் சேவகர்கள் !!


வெளியில்...
கால் பிடிக்க.. காக்கா பிடிக்க
செருப்பு துடைக்க.. உறுப்பு துடைக்க
கார் கழுவ.. கதவு திறக்க
அழைத்துசெல்ல.. அறிமுகம் சொல்ல
எழுதிக்கொடுக்க.. எடுத்துப் படிக்க
வாய்பார்க்க.. திறந்தவுடன் கைதட்ட
கைகூப்ப.. காலில் விழ

அப்பப்பப்பா...
ஆயிரம் ஆயிரம் சேவகர்கள் !!!

திடீரென.....
சகாராவில் மழைதுளி போல
சிம்லாவில் பனித்துளி போல
சுனாமியில் சுண்டைக்காய் போல
சூறாவளியில் பஞ்சுமிட்டாய் போல

எரிமலையில் தண்ணீர் போல
கடலலையில் கண்ணீர் போல
ஒருநொடியில் அத்தனையும்
ஒருங்கே காணாமல்போனது

பங்குசந்தையின் சரிவில்
சிக்கி சீரழிந்த காளையாகிறான்
சீக்கிரமே உயிரிழந்த கரடியாகிறான்

பணம் பாதாளம்வரை பாயுமாம் - இங்கே
பணம் பாதாளத்துள் புதைந்துவிட்டது !

தேரில் வந்து கொண்டிருந்தவன்
தெருவில் விழுந்து கிடக்கிறான் !!

இன்று இவன்....
கண்ணைக் கட்டிக்
காட்டில் விட்டது போல

கையைக் கட்டி
கிணற்றில் இறக்கியது போல

அடுத்த அடிக்கு பாதை புரியாமல்
அடுத்த வேளைக்கு வழி தெரியாமல் ?????
................................................................

இங்கே இன்று இவனுக்கு.....
பெரிசாக எதுவும் வேண்டாம் - வயிறாற
பரிசாக ஏதாவது கிடைத்தால்போதும் !

அங்கே அவர்கள் சேவகர்களாகவே
அவரவர் வேளையில்
அவரவர் வேலையில்

அவரவர் நிலையில் நிரந்தரமாய்........!
அவரவர் பொறுப்பில் கவனமாய்................!

Friday, August 14, 2009

சுதந்திரம் : ஒரு தியாகியின் மீள் பார்வையில் ...


சகோதர சகோதரிகளுக்கு
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

விடுதலைப் போராட்ட தியாகி ஒருவர்
தொடர்கிறார் உங்களிடம் :


””அன்று
அடிமை நாட்டில்.....

சுதந்திரம்
அது ஒன்றே
எங்களுயிர் மந்திரம்

ஒரே தலைமை
ஒன்றே இலக்கு

வேற்றுமையைப் போக்கும்
ஒற்றுமையே நோக்கம்

அமைதியாய் ஆர்ப்பாட்டம்
அகிம்சையேப் போராட்டம்

பலன் எதிர்பாராத எண்ணம்
நாட்டின் எதிர்காலமே திண்ணம்

தன்வாரிசுகளை மறந்த கூட்டம்
தாய்மண்ணின் எதிர்காலமே திட்டம்

வாங்கித்தந்தோம் சுதந்திரம் - பாதுகாக்கக்
கொடுத்துவைத்தோம் உங்களிடம்

இதோ..
கடந்துவிட்டது
அறுபத்திரண்டு ஆண்டுகள்

இன்று ...
சுதந்திர நாட்டில்

சுதந்திரம்........?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........???
சுதந்திரம் என்றால்........?

சாதிக்கொரு தலைமை
சாதிக்க இல்லை நிலைமை

வீதிக்கொரு கொள்கை
விதியே என்ற வாழ்க்கை

காலையில் சாதி ஓழிப்புப் போராட்டம்
மாலையில் இடஒதுக்கீடு ஆர்ப்பாட்டம்

தாய் நாட்டையே மறந்த கூட்டம்
தன் வாரிசின் எதிர்காலமே திட்டம்


சுதந்திரம்......?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........??
சுதந்திரம் என்றால்......???

ஊர் வம்பே சுதந்திரம்
வெட்டிப் பேச்சே சுதந்திரம்

ஆணவப் போக்கே சுதந்திரம்
ஆடைக் குறைப்பே சுதந்திரம்

வீட்டினுள் மதுசேர்த்தல் சுதந்திரம்
வெளியில் மாதுசேர்தல் சுதந்திரம்

முதியோர் மதியாமை சுதந்திரம்
பெரியோர்சொல் கேளாமை சுதந்திரம்

அதிகாரிகாரங்கள் தேனெடுக்க சுதந்திரம்
அதிகாரிகளுகள் புறங்கைநக்க சுதந்திரம்

மதத்துக்குள் மோதல் சுதந்திரம்
மதத்துக்கே மதம்பிடித்தல் சுதந்திரம்

கலாச்சார சீரழிவு சுதந்திரம்
பாலியல் சீர்கேடு சுதந்திரம்

இன்றைய இளைஞர்களுக்கே
இதுதான் தெரிந்த சுதந்திரம் ..............

நாளைய நமது
வருங்காலத் தூண்களுக்கு ????

காந்திஎன்றால்....
கம்பூன்றிய தாத்தாவாகவும் .,
விடுதலையென்றால்.....
விடுமுறையும் இனிப்பும் .,
தமிழக வரலாற்றில் முதன்முறையாக
புத்தம்புதுத் திரைப்படத்தோடும் .,
சிறப்புப் பட்டிமன்றத்தோடும்
முடிந்தே போகும்...!

ஏ ., இளைஞனே !
இந்தியக் குடிமகனே !!

ஏமாளிகள் நாங்கள்
சந்ததியர் உங்களை நம்பி
வெள்ளையனிடம் போராடி
வாங்கித்தந்த சுதந்திரமதை

தானென்ற அகந்தையில்
தெரியுமென்ற போதையில்
மதிகெட்டு மமதையில்
வீதியில் தொலைத்துவிட்டு

எங்களைப்போல உங்களின்
வாரிசுகளிடம் சேர்க்காமல்
வாரிக் கொடுத்துவிட்டு
மீண்டும் அடிமையாகிக் கொண்டிருக்கிறாய்
அந்நிய மோகமென்னும்
கிழக்கிந்தியக் கம்பெனியின்
மாற்று உருவிடம் !


வேண்டும் வேண்டும்
இன்னும் ஒரு சுதந்திரம் !
இனியாவது சுதந்திரம் !!

ஆனால்.......
யாரிடமிருந்து !?!?!?!?!?!?!?

முடிவு செய் இன்றே !
முயற்சி செய் நன்றே !! “”

--தாய் மண்ணுக்கு வணக்கம் _/\_

Sunday, July 26, 2009

நான் இந்தியன்......


26-07-09 :
கார்கில் வெற்றி(யின்)வீரர்களின் நினைவுநாள் :

எனது வீரச் சகோதரர்களுக்கு சமர்ப்பணம் :



கார்கில் - இங்கே

சூரியனும் பதுங்கியே
...சலனமின்றி பயணம் வரும்
சந்திரனும் பயந்துபோய்
...சந்தடியின்றி தவழ்ந்து வரும்

காற்றும் பயத்தோடு
...கலங்கியபடியே வீசும்
மரங்களும் தங்களுக்குள்
...மெளனமாகவே பேசும்

எதிரிக்கு எப்பவுமே
...இதன்மேல் நேசம்
எல்லையில் இப்பவுமே
...தொல்லையின் வாசம்

வெண்மையே விரவியிருக்கும்
...வண்ணமற்ற பிரதேசம்
வாழ வழியில்லாத
...வஞ்சிக்கப்பட்ட பிரதேசம்

ஆனாலும் என்ன
அது என் தாயின் தேசம்


அரைஜான் ஆக்கிரமிக்க எண்ணி
...அரையடி முன் வைத்தாலும்
அரைஞாண் அவிழும் வரை
...அடித்தே விரட்டிடுவேன்

அன்னை பூமியில்
...அந்நியன் ஒருவன்
அனுமதியின்றி புகுந்து
....அங்கே தேவையின்றி

உதிர்ந்து கிடக்கும் ஒரு - வீண்
...மயிரைக்கூடத் தொடவிடேன்
எதிரியைத் தடுக்க எனது - இன்
...உயிரையும்கூடத் தந்துமடிவேன்

நான் இந்தியன்..
நாம் இந்தியர்கள்...

வாழ்க எல்லைக் காப்பாளர்கள்....
வளர்க அவர்தம் குடும்பங்கள்......

Monday, June 1, 2009

கொஞ்சம் திரும்பிப்பார் 26/11


அந்நிய மண்ணில் திட்டமிட்டு
இந்தியாவை திடுக்கிட வைத்து
தீவிரவாதிகள் நடத்தி முடித்த
அதிதீவிரவாதத் தாக்குதல் அது

உயர் அதிகாரிகளை வரவழைத்து
உயிர்பறித்த தாக்குதல் அது
அப்பாவிப் பொதுமக்கள் மீதான
அடாவடி வெறித்தாக்குதல் அது

இதுவரை இந்தியா சந்தித்ததில்லை
இது போன்றதொரு தாக்குதலை

உலகமும் இதுவரை பார்த்திருக்கமுடியாது
இனி நடக்கப் போகும் வேடிக்கையை

கதாநாயகன்
கசாப்பை கூண்டிலடைத்து
வெற்றிகரமாய் தாண்டிவிட்டது
200 நாட்கள் மொத்தமாய்

200 உயிர்களை மொத்தமாய் இழந்தோம்
2000 வாழ்க்கை முழுமையாய் கேள்வியானது
100 கோடி மனம் தவித்துப்போய் நின்றது

கண்ணால் பார்த்த சாட்சிகள் உண்டு
காணொளித் தடயங்கள் உண்டு
களத்திலிருந்து உயிர்கொடுத்து
கைதுசெய்த காவலர்கள் உண்டு

உடனடி நீதிதான் 'அவர்களுக்கு'
உறுதியான செய்தி கொண்டு சேர்க்கும்
தாமதமாகும் தீர்ப்புகள் எல்லாம்
மறுக்கப்பட நீதிக்கு சமமாகிவிடும்

ஆனால் இங்கே நிகழ்வதென்ன ?

அங்கிருந்து 30 கேள்வி கேட்க்கிறார்கள் !
இங்கிருந்து 28 பதில் சொல்கிறார்கள் !!

தாக்கியவன் கேள்விகளை
தெனாவெட்டாய்க் கேட்க்கிறான்
அடிபட்டவன் பதில்களை
அடக்கமாய் சொல்லிகொண்டிருக்கிறான்

அதோ நீதிக்காக அவர்களும்
இதோ நீதிகாக்க இவர்களும்
இந்திய சட்டப் பிரிவுகளோடு
இங்கே தயாராக இருக்கிறார்கள்

நீதி மன்றக்காட்சிகள் இனி
தேதி தவறாமல் நடந்தேரும்
திட்டம் போட்டுத் தடுத்தாலும்
தலைமுறை பல கடந்தாலும்
சட்டம் கடமையை செய்தேதீரும்

ஆரம்பமாகிவிட்டது !

வக்கீல் அவனுக்காக
வாதாட வந்திருக்கிறார்
காப்பாற்றுவேன் கசாப்பை என்கிறார்
காப்பேன் தொழில்தர்மம் என்கிறார்

அவனைப் பச்சைக் குழந்தை என்கிறார்
பால்குடி மறக்கவில்லை என்கிறார்
வயதுக்கு வரவில்லை என்கிறார்

இந்தியாவின் நீதிமுறை பற்றியும்
இங்கேயுள்ள நடைமுறை பற்றியும்
அத்தனையும் முழுமையாக
அவனுக்குத் தெரிந்திருக்கிறது

இப்போதுதான் அவனும் ஆரம்பித்திருக்கிறான்

நான் சின்னப்பையன் என்கிறான்
சிறுவர் நீதிமன்றம் வேண்டும் என்கிறான்
குற்றப் பத்திரிக்கை முழுவதும்
பெற்றவள் மொழியில் வேண்டும் என்கிறான்

இனிமேல்தான் இன்னும் தொடருவான்

உள்ளே இருந்தே சட்டம் படிப்பான்
உடல் நலம் காட்டி மருத்துவமனை சேர்வான்
குளிர்சாதன வசதி கேட்ப்பான்
குளிக்க பன்னீர் கேட்ப்பான்

நீதிபதியை மாற்றச் சொல்வான்
அதிபரிடம் பேச அனுமதி கேட்ப்பான்
கருணைமனு கோரிக்கை வைப்பான்
காலம் கடந்துவிட்டதென நீதியும் கேட்ப்பான்

விலக்குகள் கேட்டுக்கொண்டே இருப்பான்
விளக்கங்கள் தந்துகொண்டே இருப்பார்கள்
வழககும் நடந்துகொண்டேதான் இருக்கும்

அதற்குள்
அடுத்த உலகக்கோப்பை தொடங்கி இருக்கும்
அடுத்த தேர்தல்வசூல் ஆரம்பமாகி இருக்கும்
அடுத்தடுத்து நாமும் பரபரப்பாகி இருப்போம்

வாழ்க சனநாயகம் !
வாழ்க் வாழ்க சனஞாபகம் !!
வாழ்க வாழ்க வாழ்க சனநாயகம் !
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க சனஞாபகம் !!

Friday, May 1, 2009

மே தினம் / இன்று புதிதாய் பிறப்போம்.....!


இதோ வந்துவிட்டது
மற்றுமொரு மே தினம்

8மணி நேர உழைப்புக்காகவும்
உழைப்புக்கேற்ற ஊதியத்துக்காகவும்
உருவானதுதான் இந்த மே தினம்

1880ல் அமெரிக்காவில் உருவாகி
10 வருடம் போராட்டக் கருலிருந்து
1890ல் பாரீசில் பிறந்த அந்தக்
குழந்தைதான் இந்த மே தினம்

1923லிருந்து இந்தியாவில்
கொண்டாடப்பட்டு வரும்
விடுமுறை நாள்தான் மே தினம்

8மணிநேர உழைப்பையும்
8மணிநேர வாழ்க்கையையும்
8மணிநேர உறக்கத்தையும்
உணர்த்தத்தான் இந்த மே தினம்

அரசுத்துறை ஊழியர் தவிர
அறிந்திடுவாரா யாரும் இந்த
8மணிநேர மே தின சித்தாந்தம்?

கல்லுடைக்கும் கொத்தடிமைகள்
தோட்டத் தொழிலாளர்கள்
ஆலை ஊழியர்கள்
நெசவுத் தொழிலாளர்கள்
ஒப்பந்த ஊழியர்கள்
வியாபாரத்தள வேலையாட்கள்
தினக் கூலிகள்
..............
இவர்களில் எத்தனைபேர் அறிவார்
இனிய இந்த மே தினம்

கால் நூற்றாண்டாய்
கால் கடுக்க மிதிவண்டியில்
காலம் முழுதும் தொழிலாளியாகவே
உந்திக் கடந்து கொண்டிருக்கிறார்
உழைப்பாளி ஒருவர்

நேற்று வந்து இறங்கிய
திசையே தெரியாதவன் தொழிலதிபர் ஆகிறான்
வட்டிக்கடை வைத்தவன் வசதியாய் இருக்கிறான்
கந்துவட்டிக்காரன் காரில் போகிறான்
அடிப்படை தெரியாதவன் அரசியல் செய்கிறான்
பஞ்சாயத்து செய்பவன் பலதேசம் போகிறான்
உழைப்பாளியோ வெறும் காலில் நடக்கிறான்
வாழும் வழி இன்றித் தவிக்கிறான்


மேலதிக வேலையைத் திணிக்கும்
உழைப்புக்கான ஊதியம் மறுககும்
உலகமயமாக்க தாக்கத்தில் இன்று
கடந்தகாலமாகிக் கொண்டிருக்கிறது
காலம் பல கடந்துவந்த மே தினம்

உழைக்கும் வர்க்கத்துக்கு
உண்மைநிலை உணர்த்தி
உயர வைக்குமா இந்த மே தினம்

உயர்த்தி விடுவோமே நாம்
உயரத்தில் இந்த மே தினத்தில்

இன்று புதிய உறுதி எடுப்போம்
குழந்தைத் தொழில் ஒழிப்போம்
முதுமைத் தொழில் அழிப்போம்
உழைப்பவரை உயர்த்துவோம்
ஊழியரை வாழ்த்துவோம்

இன்று புதிதாய் பிறப்போம்
இந்த மே தினம் கொண்டாடுவோம்

Saturday, January 10, 2009

வானம் ஏறி...!!!


அமெரிக்காவில் பொருளாதாரம்
அடியோடு ஒடுங்கிப் போய்விட்டது
இங்கிலாந்தில் இன்றும் அது
இறங்கிக்கொண்டே இருக்கிறது
சப்பானில் தலைவர்கள்
சதிராடும் நிலவரம் புரியாமல்
தலைமையே வேண்டாம் என்று
தலை தெரிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்

கார்டுகளையே கடவுளாகக் கொண்டு
கணக்கில் மட்டுமே பணத்தைக் கண்டு
கணினியில் ஏறி கனவுலகம் போக
நிகழ்காலம் கடந்தவர்களின் வாழ்க்கை
நிமிட நேரத்தில் சூன்யமாகிப்போனது

அதிகமான எழுச்சியும்
அபரிதமான வளர்ச்சியும்
ஆபத்தில் தான் முடிந்துபோனது
தெருவில் ஒதுங்க இடம் கிடைப்பதே
தேவலாகம் அடைந்தது போலானது

"இருங்க..
இருங்க...
எப்படி இருக்கிறது
எங்க ஊரில் நிலமை?
எங்கோ எழவு விழுந்ததுக்கு
இங்கே அழ வேண்டி வந்துருமோ??"


இல்லை!
இந்தியாவிலும் அது
இறங்கு முகமாகத் இருந்தாலும்
சாமானியனுக்கு அந்தச்செய்தி போய்
சேர்ந்த மாதிரித் தெரியவில்லை!!

வறுமையில் விவசாயிகள்
வசதியில் வியாபாரிகள்

வாடிப்போன தொழிலாளிகள்
வளமையான முதலாளிகள்

வேடிக்கை பார்க்கும் பொதுசனம்
வாழ்ந்துகொண்டிருக்கும் சனநாயகம்


மாற்றம் இதுவரை தெரியவில்லை
ஏமாற்றமும் பெரிதாய் ஏதுமில்லை

இன்றைய இக்கட்டான நிலமையில்
இடிந்துபோன உலகைப் பார்க்கையில்
இப்படியே இருப்பதும் கூட
இனிமையாகத்தான் தெரிகிறது

Thursday, January 1, 2009

விலைவாசியும்,பணமும்...


விலைவாசி சத்தமில்லாமல்
வின்னைத் தொட்டும் தொடர்கிறது

வசதியாய் இருப்போரும்
வீதியில் வசிப்போரும்
வாங்கித்தான் ஆகவேண்டும்
வேறு வழியே இல்லை-எனில்

"வாழ்வு செழித்திருக்கும் உழைப்பவருக்கு
வளமை கூடியிருக்கும் விற்பவருக்கு"
விசாரிக்கத் தொடங்கினேன்
வீதியிலிருந்து சந்தை வரை

வியாபாரியின்
விரித்த வெறும் கையில்
வழக்கம் போல் ஏதுமில்லை

விநியோகிப்பவனின் லாப
விகிதாச்சாரத்திலும்
வித்தியாசம் கூடவேயில்லை

விவசாயியோ பசிக்கும்
விதைக்கும் வழியில்லாமல்
விதியை நொந்து எழமுடியாமல்
விழுந்து கொண்டே இருக்கிறான்

வகை தெரியாமல் நானும்
விழித்துக்கொண்டே நிற்கிறேன்!-நம்மக்கெல்லாம்
வழிதெரியாத எங்கோபோய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது
விதியை மாற்றும் அந்தப் பணமெல்லாம் !!