Wednesday, October 7, 2009

விசமா ? வேசமா ?? விசேசமா ???.....


மெளனம்...........

இன்று அவளின் மெளனம் - அதனால்
ஆனதென் மனம் ஊனம்

ஒலி இல்லாமல் -
பேசும் மொழி இல்லாமல்

அவளின் மெளனம் -
அது ஆயிரம் வழியில் பேசும்

ஆம்........

அணைப்பில் சம்மதம் சொல்லும்
அரவணைப்பில் என்மனம் வெல்லும்

மகிழ்வில் மனம்கொள்ளை கொள்ளும்
இகழ்வில் தினம்என்னைக் கொல்லும்

கோபத்தில் கொடுவாளை எடுக்கும்
தாபத்தில் விடியலைத் தடுக்கும்

பழக்கத்தில் சாமரம் வீசும்
குழப்பத்தில் சமரசம் பேசும்

கொஞ்சுகையில் வீணையே கெஞ்சும்
மிஞ்சுகையில் நானே தஞ்சம்

மஞ்சத்தில் எனைத் தகிக்கும்
தஞ்சத்தில் எனையேத் துதிக்கும்

ஒட்டிவந்தால் வாடையாய் வீசும்
எட்டிநின்றால் சாடையில் பேசும்

ஆனாலும்......

அவளின் மெளனம்....
இன்றவளின் மெளனம்........

அது..........

வீழ்த்தும் விசமா ? வெறும் வேசமா ??
உள்ளுக்குள் எதுவும் விசேசமா ???

அர்த்தமென்ன இதுவரை! தெரியவில்லை - அதன்
ஆழமும் எதுவரை? புரியவில்லை

.

2 comments:

நிலாமதி said...

கொஞ்சம் பொறுமை காத்துக்கொள்ளுங்கள். . விரைவில் தெரிந்து விடும்.
வாழ்த்துக்கள்.

Tamilparks said...

அருமை வாழ்த்துக்கள்