
கவனம் குவி / ஒரு நிலைப் படுத்து :
கோவில் திருவிழா...
அலையலையாய் சனத்திரள்
ஒலிபெருக்கியின் அலறல்
செவிகிழிக்கும் பலகுரல்...
யானைபுகுந்த
பாத்திரக்கடையின் கூக்குரலும்கூட
கடலில் கரைந்தக் காயமாய்ப்
காணாமல் போகுமதந்த பேரிரைச்சலுள்
ஓரமாய் அமர்ந்திருந்த
பார்வையற்ற அவனின்
இதழோரம் தோன்றியதோர்
கீற்றுப் புன்னகை…….
சுற்றியுள்ள எல்லாம் ஒதுக்கி
தட்டில் விழும் நாணயத்தின்
மெல்லிய ஒலிக்காக
மட்டுமே காத்திருக்கும்
அவனது செவிகள்
சொன்ன சேதிகேட்டு …………..
.
No comments:
Post a Comment