Thursday, February 4, 2010

(மரபில்) காதல்.. காதல்...காதல்


1)அவசரமாய் :
சேலைக்குள் சோலையாய் சிட்டவள் ஈர்த்திட
மாலைக்குள் மங்கை மதிமுகம் பார்த்திட
சாலைக்குள் சிங்கமாய்ச் சீறிப் பறந்தேன்நான்;
மாலைக்குள் என்படம் இன்று

[வெண்பா/இன்னிசை/இரட்டை மடக்கு/திரிபு]



2)அமைதியாய் :
அக்கரையில் பாதையில் அன்னமவள் முன்செல்ல
இக்கரையில் பாறையில்நான் காலிடறி முன்சாய
அக்கறையில் அங்கவள் மேல்பதற; நானிங்கே
சக்கரையில் மூழ்கும் எறும்பு

[வெண்பா/இன்னிசை]

No comments: