Tuesday, April 13, 2010

முள்ளாய் .. ! வேலியாய்..!!




அதிகாலையில் எழுந்த உடன்
ஆதரவாய்த் தட்டி எழுப்பி
என்னுடன் குளிக்கக் கிளம்புகிறார்
என் அக்காவின் கணவர்

அடுக்களையில் இருக்கும்
அக்காவுக்குத் தெரியாமல்
எனக்குத் தலைவாரி சிரிக்கிறார்
என் அக்காவின் கணவர்

அக்காவுக்குக் கையசைத்தும்
கதவுக்குப் பின்னால் வந்து
எனக்கும் முத்தம் கொடுக்கிறார்
என் அக்காவின் கணவர்

மாலையில் திரும்பி வரும்போது
ஆசையாய் அக்காவுக்குப் பூவும்
எனக்கு அல்வாவும் வாங்கிவருகிறார்
என் அக்காவின் கணவர்

இருநூறு ரூபாயில் அக்காவுக்கும்
அறுநூறு ரூபாயில் எனக்கும்
புத்தாடை வாங்கிக் கொடுக்கிறார்
என் அக்காவின் கணவர்

பள்ளிக்கூடத்திற்கு சாயங்காலம்
பெற்றோர் சந்திப்பிற்கு வருவார்
எனது அப்பாவாய் வருவார்
என் அக்காவின் கணவர்



.

4 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஹஹ்ஹா..,

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

கவிதன் said...

சத்யா ராஜ் ஸ்டைல் ல அல்வா வா..... அருமை! வாழ்த்துக்கள்!

vasan said...

அருமையான திடீர் திருப்ப‌ம் நிறைந்த‌து.