Monday, September 21, 2009

உன்னை, என்னை, நம்மைப் போல ஒருவன் ..!


மகாபாரதம் :

துரியோதனன் கண்ணனிடம்
”துரோகம் இழைத்துவிட்டாய் கண்ணா
அவதாரமாய் இருந்தும்,
தர்மம் மீறி போர்க்களத்தில் நடந்து கொண்டாய் ,
வதந்தி பரப்பிக் குழப்பம் விழைவித்தாய் ,
கர்ணனை சூழ்ச்சியால் வீழ்த்தினாய் ,
அர்ச்சுனனுக்கு சாரதியாய் வந்து மாயம் செய்தாய் ,

அதர்மமாய் நடந்து கொண்டாய் கண்ணா
அதர்மம் விளைவித்துவிட்டாய் ! “

கண்ணின் பதில்
“அதர்மம் செய்பவர் , எதிரேயிருப்பவரிடம் தர்மம் எதிர்பார்ப்பது முறையில்லை !

அதர்மத்தை அதர்மத்தால் அழிக்கலாம் , தப்பில்லை !! ”

--இதுதான் படத்தின் செய்தி


அடர்ந்த கானகம் :
வேட்டைக்களம் .
உயர்ந்த பாறையின் மேல் அமர்ந்திருக்கிறது சிறுத்தை .
புகுந்து விளையாட வாய்ப்பிருந்தும் பொறுமையாய் ,
குட்டிகளுக்கு வேட்டையாட தளம் அமைத்துக்கொடுத்து விட்டு
நடப்பவற்றை நிதானமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது பெருமையாய் !

-- இதுதான் (உலக) நாயகன்


ஆங்காங்கே குறிப்பால் உணர்த்தும் சின்னச் சின்ன செய்திகள் :
(படத்திற்கு சம்பந்தம் இல்லையென்றாலும் , நாம் தெரிந்துகொள்வதற்காக ....)

[படத்தில் வந்த வரிசையில்]

#)மனைவியால் தாக்கப்படும் (சிறுபான்மை) கணவன்மார்களுக்கான சட்டப் பாதுகாப்பு பற்றியக் கேள்விகுறி?
#) கன்ஸ்யூமர் சட்டங்களின் உண்மை நிலை பற்றிய சந்தேகம் ! ( குக்கர் )
#) இடதுகைப் பழக்கமிருந்தாலும் அடுத்தவருடன் புழங்கும்போது வலதுகையை உபயோகப்படுத்த வேண்டும் ( பேனாவைத் திருப்பிக் கொடுக்கும் போது )
#) அரசாங்க அலுவலகக் கட்டிடங்களின் நிலமை ( பாத்ரூமில் தண்ணி வராது )
#) லஞ்சத்தை எதிர்க்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள் ! கவனம் !!
#) இடமாற்றம் போன்ற இடர்களையெல்லாம் பொருட்படுத்தாமல் இயங்கும் இளைய சமுதாயம் ( காவல்துறையிலும் )வந்துகொண்டிருக்கிறது ! ( ஆரிப்)
#) விஞ்ஞான முன்னேற்றத்தை வரவேற்க வேண்டும் ( பேக்ஸ் வேண்டாம் , ஈ-மெய்ல் அனுப்பு)
#) பதட்டம் / அலட்சியம் குறைக்க வேண்டும் ( ஆரிப் - 20 மாடிகள் தேடி ஏறியவர், மொட்டை மாடிதானே எனக் கவனிக்காமல் விடுவது )
#)அரசியலின் உண்மை முகம் ( தேர்தல் வெற்றிக்கு பாதிப்பு வராதே )
#) புகழுக்காக செயல்படும் ஊடகங்களின் நிலை ( எது நிகழ்ந்தாலும் நேரடி ஒளிபரப்பு )
#) அரசியல் கனவில் உள்ள நட்சத்திரங்கள் ( ’தளபதி’ ஸ்ரீமான் )
#) பெண்களுக்கான முக்கியத்துவம் ( சக்தி வாய்ந்த ஹோம் செக்ரட்டரி , விஜெவுக்கு காவலதிகாரி சிகரெட் பற்ற வைக்கும் இடம் )
#) பலியாடுகளாக்கப்படும் உயரதிகாரிகளின் மனநிலை ( மோகன் லால் )
#) ஐடி இளைஞர்களின் தெளிவான பிம்பம் ( தொலைபேசியில் ‘கேர்ள் ப்ரண்ட்’ ,/ உண்மையான இடத்தைக் கண்டுபிடித்த பிறகும் , [ நிகழ்வது நியாயத்திற்குத்தான் எனத் தெரிந்தபின் ] கண்டுபிடிக்கவில்லை என மறுப்பது )
#) மதத்தின் புனிதத்தை தனக்கு சாதகமாக உபயோகப்படுத்திக்கொள்ளும் தீவிரவாதிகள்
#) உடனடி நீதியை எதிர்பார்த்து ,( தாமதமான நீதியைத் தவிர்க்க ) நமது சட்ட அமைப்பின் முன்னால் எழுப்பப் பட்டிருக்கும் கேள்வி !


--இது(வும்)தான் படம்


பி.கு : 20 மாடிகளுக்கும் மேலான கட்டிடத்தின் , கைப்பிடிச் சுவறில்லாத மொட்டைமாடியின் விளிம்பில் முன்னும் பின்னும் அசைந்துகொண்டே நாயகன் நிற்பது (பயமாக இருந்தாலும் (இருக்கும்)வெளியே காட்டிக்கொள்ளாமல் இருப்பது ) ஒரு மிகப்பெரிய சாதனை

உயரத்திலிருந்து உலகினை (பறவைப் பார்வையில்) உள்ளபடி காட்டிய தொழில் நுட்ப்பக் கலைஞர்கள் , படைப்பாளிகள் அனைவருக்கும் வெற்றிப் பயணம் தொடர உளமார்ந்த வாழ்த்துக்கள்


காட்சிக்குக் காட்சி ரசிங்க
திரையரங்குக்குப் போய் ருசிங்க

தவறு நடக்கும்போதே தட்டிக் கேளுங்க
தீவிரவாதத்தை வேரிலேயே வெட்டிக் கொளுத்துங்க

வாழ்க பாரதம் !


.

6 comments:

சிவக்குமரன் said...

good

பாலா said...

kai thattal kathil vizhunthathaa thalai

Unknown said...

அருமையான விமர்சனம்....

உமா said...

மிக அழகான விமர்சனம். வாழ்த்துகள்.

அஹோரி said...

விமர்சனம் நல்லா இருக்கு.

Anonymous said...

>மொட்டை மாடி< அது வேறு ஒரு கட்டிடமாகும். காமன் மேன் அங்கே அவரை திட்டமிட்டு வரவைத்துள்ளார். Do not disturb அட்டைகளை கம்பிகளில் தொங்க விட்டிருப்பார். இந்தியில் தெளிவாக காட்டி ஒரு வசனமும் வைத்திருப்பார்கள். தமிழில் அது மிஸ் ஆகிறது.