Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, February 4, 2011

ராணி..மகாராணி...ராஜ்ஜியத்தின் ராணி......!

a.gif

ராவுல கதை சொல்லி

தூங்க வைக்குது தாத்தா

காலைல காப்பியோட

வந்து எழுப்புது ஆத்தா...


aaa.gif

இட்டிலிக்குத் தொட்டுக்க

மணக்கும் சட்டினி இருக்குது

தட்டுல இடியாப்பம்

மொத்தமாக் கொட்டிக் கெடக்குது..


a.gif

எனக்கு சடைகட்டி

பொட்டுவைக்க போட்டி நடக்குது

எம்மாமன் பகலாட்டம்

கூட்டிப்போயி லூட்டி அடிக்குது...

aa.gif

சீறும்ஆறும் பயந்துப் பதுங்கி

எம்முதுகைத் தழுவி சொக்குது

ஊரும்பேரும் பதுங்கிப் பயந்து

என்பின் மெதுவாய் நழுவி நிக்குது...

EMO (278).gif

சும்மாத்தான் முறைச்சவுடன்

வெலகி ஓடுது சூறாவளி

எம்மா நான் நினைச்சவுடன்

வந்து நிக்குது தீபாவளி...


திடீரெனப் பொடரியில வெடிச்சு

மடியில எறங்கியது இடியொண்ணு


கண்ணச்சுத்தி மின்னலாப் பொரிபறக்க

என்னச்சுத்தி எல்லாமே கிறுகிறுக்க

மங்கலா முன்னால பொங்கிநிக்குது

மங்கம்மா போல எங்கவூட்டம்மா ...

eyes8[1].gif

தலைக்கு மேலிருக்கும் வேலயில

பட்டப்பகல் வேளயில

சட்டிப்பானையத் தேய்க்காம

கெட்ட சொப்பனம் கேக்குதோ

பொட்டக் கழுதைக்கு.....


hgj (3).gif........... :(


--
என்றும் அன்புடன் -- துரை --