Sunday, January 10, 2010

உருவமும் உள்ளமும்......



ஒருவாய் பழைய சோறு
இல்லையென மறுத்து
அறைந்து பூட்டியது
ஆளுயர வாசல்க் கதவு

பாதிப் பசியாற்ற
யாருக்கும் தெரியாமல்
சூடான சாதத்தின்
வாசத்தை வாசலுக்குக்
கொண்டு வந்து சேர்த்தது
கொஞ்சமே திறந்திருந்த
குட்டிச் சன்னல் ஒன்று

உருவமும் உள்ளமும்
ஒன்றாய் இருப்பதில்லை
எப்போதும்
.

1 comment:

நிலாமதி said...

உண்மை ........நல்லதொரு உண்மையை சில வரிகளில் சொல்லியிருகிறீர்கள்.
பாராட்டுக்கள்.