Friday, October 1, 2010

வழுக்கல்கள் : இரண்டு ..........!


நடைபாதை ஓரத்தில்

தடம் வழுக்கியே

தடுமாறிச் சரிகிறேன் நான்..


எதிர்பாராத தருணமதில்

எங்கிருந்தோ வருகிறாள அவள்...


அறிமுகம் இல்லாத என்னை

பதறித் தாங்குகிறாள்....


தோள்களைப் பற்றி என்னைத்

தூக்கி நிறுத்துகிறாள்.....


பிடறியை உதறிய படியே

திடுக்கென விழித்துக் கொள்கிறது

போர்த்தியிருந்த பசுத்தோலுக்குள்

உறங்கிக் கொண்டிருந்த


என் மனம்........


.

No comments: