Sunday, October 24, 2010

அவரவர் பார்வையில்....!


அடர்பச்சைப் புதராய்

படர்ந்திருக்கிறது கொடி.....

ரத்தச்சிவப்பு நிறத்தில்

அசைந்து கொண்டிருக்கின்றன

அழகழகாய்ப் பழங்கள்........


அடர்பச்சை நிறத்தில்

வந்தமர்கின்றன கிளிகள்.....

ரத்தச்சிவப்பு நிறத்தில்

அழைத்துக் கொண்டிருக்கின்றன

அதனழகு அலகுகள்.....


புதரும் பறவையும்

வண்ணத்தில் ஒன்றாகி

எண்ணத்தை வென்றேகி

என்னுள் கலக்க......

என்னை நான் மறந்தே

படைப்பின் விந்தையை எண்ணி....

சிந்தை கலங்கி நிற்கிறேன்.


அங்கே....

விரித்த வலையின் சுருக்கை

சரிசெய்து கொண்டிருக்கிறான்

புதருக்குள் இருக்கும் அவன் .....

.

1 comment:

பனித்துளி சங்கர் said...

////////புதரும் பறவையும் வண்ணத்தில் ஒன்றாகி எண்ணத்தை வென்றேகி என்னுள் கலக்க...... என்னை நான் மறந்தே படைப்பின் விந்தையை எண்ணி.... சிந்தை கலங்கி நிற்கிறேன்.////////////


அடுக்கடுக்கான வார்த்தை தொடுப்பு அழகான சிந்தனையில் ரசிக்க வைக்கிறது அருமை கவிதை . பகிர்வுக்கு நன்றி