Monday, March 21, 2011

சில சிங்க(X) நாய்கள்................

அன்னையின் பாதத்தில் சமர்ப்பணம் ...22/03/11....

(செய்தி :அன்னையின் அஸ்தி வங்கக்கடலில் கரைக்கப் படுகிறது)

சில நடுநிசி(X) நாய்கள் :

X-Files-01-june[1].gifxfiles.gifX-Files-01-june[1].gif

ட்ராய்(TROY)ன் போர்தர்மத்தை

நாய்களிடம் எதிர்பார்த்து

தாய்மணணில் பிடியை

தற்காலிகமாய் இழந்து

பொய்யாகிப் போனது போன்ற

மாயத் தோற்றத்தின்பின்

அரங்கேற மறைந்திருக்கிறது

பல்லாயிர ரத்த சரித்திரம்

நாளைய உலகம்

போற்றக் காத்திருக்கும்

நிகழ்கால யுத்த சரித்திரம் ....!


அதீத நம்பிக்கையோடு

வெற்றியை நிர்ணயித்து

தேதியை நிச்சயித்து

சேதியை அறிவித்தும்........

பெரும் கண்டங்கள் துணயோடு

வருங்கால வல்லரசுகள் இணையோடு

வான்வெளியை வளைத்துப் பிடித்தும்

கடற்பரப்பை வலைக்குள் அடைத்தும்.....


கைப்பற்ற வேண்டிய இலக்கு

காற்றில்கரைந்ததால் கலங்கி

கையிலிருந்த நகலை கசக்கி எறிந்து

அசலின் கதைமுடிந்ததாய் அறிவித்து

வெளியில் ஆட்டம் போட்டு

உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன

இலக்கின் இலக்காகிப்போன

சில சிங்க(X) நாய்கள்................


விலங்கிடமிருந்து காப்பதாய்

உலகுக்குக் காட்டிவிட்டு

அப்பாவிகளைப் பிடித்து

வேலிக்குள் அடைத்து

உலகை ரட்சிக்கும்

பெரியண்னன்கள் ரசித்திருக்க

வெறிகொண்டு வேட்டையாடி

ருசித்துக் களைத்திருக்கின்றன

சிங்கமென்ற நினைப்பில்

காவல் பொறுப்பிலிருக்கும்

சில சிங்க(X) நாய்கள்............


பசித்தவர் கஞ்சிக்கும் நீருக்கும்

வரிசையில் ஏங்கி நிற்க .....

‘புளிசாதம் என்றொரு குரல்

சன்னமாய்க் கேட்டு வைக்க....

தலைமுதல் கால்வரை கவசமும்

தளும்பத் தளும்ப ஆயுதமிருந்தும்

முள்வேலியைத் தாண்டி

தலைதெறிக்க பாய்ந்தோடி

பங்கருக்குள் பதுங்குகின்றன

முன்னர் மகி(ழ்)ந்த

சில சிங்க(X) நாய்கள்.......


உறுப்பிழந்தவரையும்

உள்ளம் பேதலித்தவரையும்

முள்வேலிக்குள் நெருக்கமாய்

அடைத்து வைத்திருப்பது

தலை நிமிர்ந்த வீரத்தால் அல்ல......

தன்னுயிர் பற்றிய பயத்தால் என்பதை

உலகறியச் செய்து கொண்டிருப்பதும்

அதே முள்வேலி தான் என்பதை

இன்னும் உணராமல் இருக்கிறார்கள்

சில சிங்க(X) நாய்கள்...............


பீனிக்ஸ் பற்றிய கற்பனையில்

பற்றிய பயம் தொற்றிக் கொள்ள

சிதையைச் சிதைத்து

புழுதியில் கலப்பதாய் நினைத்து

எம்தலைக் கிழவியின் சாம்பலை

எம்மண்ணிலேயே விதைத்து

ஏங்கிப் புதைந்திருக்கும்

எம்குல வித்துக்களுக்கு

தம்மையும் அறியாமல்

உரம் இட்டுச் சென்றிருக்கிறார்கள்

சில நடு நிசி நாய்கள்

..........சிங்க(X) நாய்கள்


இப்போதைய எகிப்தும்

துனிசியாவும் லிபியாவும்

உரத்துச் சொல்லும்

நாளைய வரலாறு ஒன்றை

இன்றைய உலகுக்கு..................


பூஜ்ஜியத்துகுள் இருந்து

பொங்கி வந்தவர்கள் பொடியன்கள்........

இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்.....


No comments: