Friday, July 22, 2011

கடமையாற்ற விடுங்களேன்...கனவான்களே...!

ii (15).gif

அதிகாலையிலேயே நகரம்

பரபரவென அதிர ஆரம்பித்து

மிககிக வேகமாக

சரசரவென நரகமாக

உருமாறத் தொடங்கியிருக்கிறது..


தனது கடமையில் தோல்வியுற்று

இருக்குமிடத்திலிருந்து பதறி வெளியேறி

பகலெல்லாம் எங்கெங்கோ ஒளிந்திருந்து ....


பின்னிரவில் வெளிப்பட்டு

இறுக்கமான அடுக்குமாடிகளை

நெருங்கும்வேளையில்....


ஆங்காங்கே துருத்திக்கொண்டு

மூடியக் கதவுக்கு வெளியே

வெறிநாயெனக் காத்திருக்கும்

குளிரூட்டும் மிருகங்களின்

சன்னமான உறுமலால் மிரண்டு...


சரேலென தரை நோக்கி இறங்க..

அங்கும்

சாத்திய சன்னல்களே வரவேற்க


வேறுவழியின்றி......

சாலையியோரத்தில்

முடங்கிக் கிடக்கும்

தெருநாயின் தலையை

வருடத் தொடங்கும் வேளையில்...


திடுமென...

அதிகாலையிலேயே

அதிர ஆரம்பிக்கிறது நகரம்....


மீண்டும்..

பதறி விலகியோடத்

தொடங்குகிறது தென்றல்......


[நன்றி;கரு :யாழிசை/தங்கராஜ்]

1 comment:

settaikkaran said...

அபாரம்! இப்படியெல்லாம் யோசிக்க உங்கள் ஒருவரால் தான் முடிகிறது.