Monday, August 1, 2011

இங்குமா/ இன்னுமா இனபேதம்???????????

ஆம்..

அதனால்தான் எனக்குப்

பிடிக்காமல் போனது அதை.....


நூற்றாண்டுகள் பலகடந்தும்..


சூழ்நிலைகள் திட்டங்கள்

சூழ்ச்சிகள் நகர்தல்களுக்கேற்ப...

தொடர்ந்து நடந்து

கொண்டிருக்கும் போராட்டம்தான் - ஆனாலும்


வெற்றி தோல்வி பின்வாங்குதல் என

பல முடிவுகளைக் கண்டும்

முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்

போர்க் களம்தான் - ஆனாலும்


இரு பக்கமும்

சரி சமமான அளவில்

படைத்தளம் தான் ஆனாலும்


இரு பக்கமும்

சரி சமமான எண்ணிக்கையில்

படைபலம்தான் ஆனாலும்


கறுப்பு வெள்ளை எனப்பெயரளவில்

முன்மொழிந்து உயர்த்துவதுபோல

அழைக்கத்தான் செய்கிறார்கள் - ஆனாலும்


முதல் நகர்த்தலுக்கான வாய்ப்பு

இன்னும் வழங்கப்படவே இல்லை

சதுரங்கத்தில்..........


அந்தக் கருப்புக் காய்களுக்கு மட்டும்...!!!!!


(நன்றி:யாழி)

No comments: