Friday, October 28, 2011

வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன்


”ஏவுலா. .... எனக்கு நம்ம சாதிசனத்தையெல்லாம் பாக்கணும் போல இருக்கே ........!”
வீட்டுப் பெரிசு முகத்தைச் சுருக்கிக்கிட்டு....
லேசா நெஞ்சைத் தடவியபடியே மெதுவா கெளவிகிட்டேசொல்லி வைக்க ......

திகுதிகுகென பத்திக் கொண்டது அது ...

எலேய்....மக்கா....
கெடாவப் பிடிச்சுக் கெட்டிப்போடு ......
கோயில் கொடக்காலை நட்ட ஓடு ........

கொலசாமிக்கு கொடைய கொடுத்த மாதிரியும் ஆச்சு...
எல்லா பயபுள்ளையையும் பாத்தமாதிரியும் ஆச்சு “

ஒண்ணு கூட விட்டுப்போகாம எல்லா வளவுக்கும் போனைப் போடு.........”


அடுத்து அங்கே ஒருமாசத்துக்குத் திருவிழாதான் ....

விவசாயத்துல மானமும் பூமியும் சேர்ந்து ஏமாத்துன பின்னால , சோர்ந்துபோயிருந்த பெரிசுகளே துள்ளிக் கெளம்பீருமுன்னா எளசுகளைக் கேக்கணுமா என்ன ?

கடனவொடன வாங்கியாவது .....வீட்டுக்கு வெள்ளையடிச்சு , புது டீப்லைட்டு மாட்டி , எட்டடி கூடத்துல முடிஞ்சா பேனையும் மாட்டி , புல்லட்டுக்கும் , ட்ராக்டருக்கும் பெயிண்ட் அடிச்சு, சைக்கிளுக்கு டயர்டீப்பு மாத்தி, புதுத்துணியும் , செருப்புமா சொந்தங்களை எதிர்பார்த்து ( முக்கியமா அத்தப் பொண்ணு, மாமன் பையன் :) அமர்களமான வாழ்க்கை ஆரம்பமாகும்.

‘ஆமால்ல..என்ன இருந்தாலும் நம்ம பவுச வுட்டுக் கொடுக்கமுடியாதுல்ல ’

சுருக்குப்பை முடிச்சை அவுத்து , சேகரிப்பை கையிலக் கொட்டி , கொழுந்துவெத்தல / கொட்டப்பாக்கு/ கொஞ்சம் போயல/சன்னமா சுண்ணாம்பும் சேர்த்து, பொக்கைவாய் அம்மாயி/ பல்லுபோன அப்பத்தாக்களின் கைக்குள்ளே இடிஉரல் முழங்கத் தொடங்க , செவந்த இடிவெத்திலைக்கு சின்னஞ்சிறுசுகள் வரிசையில் நிக்க....

சீரியல்பல்ப்பும் , சிரிப்பும் கும்மாளமுமாய்..............


வணக்கம் உறவுகளே .....
நகரமேல்த்தட்டு மக்களின் கெட்டுகெதர் போல,
கோவில் திருவிழா / கொடை விழா - இதுதான் கிராமத்துமக்கள் ஒண்ணுமண்ணா தங்களுக்குள் கலந்து கொள்ளும் ஒரு சடங்கு /வைபவம்/ நிகழ்ச்சி ...எப்படி வேணா எடுத்துக்கலாம் :)

இதுதான் நாம் மறந்து/துறந்து வரும் நமது உண்மையான பூலோகச் சொர்க்கம்....
இது எங்கோ மிகத் தொலைவில் எல்லாம் இல்லை .. நமக்கு அருகிலேயே தானிருக்கிறது ....தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறது .......

நாம்தான் முகவரியைத் தொலைத்துவிட்டதாய் எண்ணிக்கொண்டு ... எதையும் தொடராமல்/தொடாமல் விலகி/விலக்கி வருகிறோம்
நாளடைவில் இந்த சொர்க்கம் இருந்ததற்கான தடம்கூட நமதுகுழந்தைகளுக்கு தெரியாமல் போகக் கூடும்

சிறிது நேரம் ஒதுக்கி என்னோடு வாருங்கள் ..என்னால் முடிந்த அளவுக்கு உங்களை அங்கே அழைத்துச் செல்ல முயல்கிறேன் ...

1.சொர்க்கத்தின் நுழைவாயில் :
இந்த இடம் வந்தவுடன் அம்மா/அப்பா கையை உதறிவிட்டு இறங்கி ஓடுவோம் .. தண்ணீதேங்கி இருக்கும் அந்த ஓடையைத் தாண்டும் முன் கால்முழுக்க களிமண் அப்பிக்கொண்டு ‘சகதி சூ’ ஓட்டுக்கும் ...:))
விரல் இடுக்கெல்லாம் நுழைந்து கால் 4 மடங்கு பெருதாக , யானைக்கால் போல காலைத்தூக்கிவச்சு நடப்போம். காலைச் சரியாக்க ,சகதியை உதற ..அது அப்பா / பக்கத்துல உள்லவங்க சட்டை வேட்டியெல்லாம் தெறிக்க ....
அப்பா முறைக்க , அந்த நாளின் ஆரம்பமே ‘முதுகில் டின்’ னோடத்தான் தொடங்கும் :))

(இன்று காரில் அந்த இடத்தைக் கடக்கும் போது எதையோ இழந்ததுபோல உணர்ந்தேன் ...
எனது குழந்தைகளுக்கு இந்த ‘சகதிச் செருப்பு’ என்றால் என்னவென்பதே தெரியாமல் போனது )

.
எங்கூட வருவீங்களா ? மாட்டீங்களா.....................?

1 comment:

மதுரை சரவணன் said...

//இந்த இடம் வந்தவுடன் அம்மா/அப்பா கையை உதறிவிட்டு இறங்கி ஓடுவோம் .. தண்ணீதேங்கி இருக்கும் அந்த ஓடையைத் தாண்டும் முன் கால்முழுக்க களிமண் அப்பிக்கொண்டு ‘சகதி சூ’ ஓட்டுக்கும் ...:))
விரல் இடுக்கெல்லாம் நுழைந்து கால் 4 மடங்கு பெருதாக , யானைக்கால் போல காலைத்தூக்கிவச்சு நடப்போம். காலைச் சரியாக்க ,சகதியை உதற ..அது அப்பா / பக்கத்துல உள்லவங்க சட்டை வேட்டியெல்லாம் தெறிக்க ....
அப்பா முறைக்க , அந்த நாளின் ஆரம்பமே ‘முதுகில் டின்’ னோடத்தான் தொடங்கும் :))//

varudiya varikal...