Saturday, October 29, 2011

வாரீயளா .....சொர்க்கலோகம் கூட்டிப் போறேன் ...... கலர்கலராக் காட்டப் போறேன் ....: 2

2 . ஊருணி :

வண்டி ஊரை நெருங்க நெருங்க எனக்குள் ஒரு பதட்டம் தடதடவென அதிர ஆரம்பிக்கிறது .
மிக நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த மிக நெருங்கிய உறவொன்றை சந்திக்கப்ப்போகிறேன் ...
அதோ தொலைவில் புள்ளியாகத் தெரிய ஆரம்பித்த...... அட !..என்ன இது ??? ...முட்செடிகளின் நடுவே ...அருகில் நெருங்கக் கூட பாதையின்றி பராமரிப்பின்றி பரிதாபமாக அந்தக் கிணறு ...

வேகமாக வண்டியை முட்செடிக்குள் திருப்புகிறேன் ....
இருபக்கமும் ‘க்ரீச், க்ரீச்’ எனக் கோடுகள் விழும் சப்தம் கேட்க , குழந்தைகளும் , வீட்டம்மாவும் என்னை ஒரு சித்தம் கலங்கியவனைப் பார்ப்பது போல பார்க்க ஆரம்பிக்கிறார்கள் .( வண்டியில் யாராவது சாய்ந்து நின்றாலே ஓடிவந்து துடைத்துவிட்டு ...சத்தம் போடுவேன் நான் ).

பதைபதைப்போடு இறங்கி ஓடிச் சென்று பார்க்கிறேன் ....
அந்தக்கிணறா ? அளவில் பாதியாக ... அன்று சதுரமாக , பாறை விளிம்புகளோடு அங்கங்கே உக்கார, தொங்கி ஏற வசதியாக இருந்தது ..இன்று சிமெண்ட் வைத்து ..வட்டமாக மொழுமொழுவென்று ..சுருங்கிப்போய்...கிளவியை அலங்கரித்ததுபோல :(((




aqw (164).gif#அன்னிக்கு ரெட்டைக் கெணறு உண்டு எங்கூருல
பகலில் சாப்பாட்டு நேரம்போக எங்க குடியிறுப்பே இங்குதான் ...

ஒண்ணு குடிதண்ணிக்கு , இன்னொண்ணு குளிச்சுக் கும்மாளமடிக்க ....

20 -30 அடி ஆழத்துல பளிங்குத்தண்ணீ ...
அதுக்கும் கீழே 20 அடிக்கும் பளப்பளான்னு தெரியும் செதில்செதிலான பாறைத்தரை...
பெரிய மீசையோடு கெளுத்திகல் , திட்டீர்னு சாய்ந்து கண்ல லைட் அடிக்கும் கெண்டைகள் ...
ஆழத்தில் ஓட்டையிலிருந்து தலையை அப்பப்போ நீட்டும் தண்ணிப் பாம்புகளோடு ..
நாங்களும் தண்ணி மட்டத்துல கெணத்துக்குள்ள உக்காந்து மேலே பாத்திருக்க ..

அங்கே கைப்பிடிச் சுவருக்கெ மேலே நீட்டிக்கிட்டு இருக்கும் மரக்கிளைல கையத்தூக்கி கும்பிட்ட போஸ்ல அசையாம நிக்கிறான் அவன் ....

ஒரு நொடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் திடீரெனக் கிளம்புகிறான் ..
காலுக்குக் கீழே பூமி நழுவ ..
(ஒரு பாலே நடனக்காரரின் திறமையோடு) கால்கட்டைவிரல் தண்ணீரில் முதலில் நுழைய ....
மிகச்சிறிய தண்ணீர் சிதறல்களோடு... வெண்ணைக்குள் கத்தி இறங்குவதுபோல ...
விசுக்கென(ஒரு 5* சாய்மானத்தில்) (ஒலிம்பிக் ‘ஃப்ரீபோர்டு டைவிங் போல)
தரையைத் தொட்டு , காலால் உடல் எடையைத்தாங்கி.. கொஞ்சம் கால் மடக்கி...
உந்தி மேலே தண்ணீரைக் கிழித்துக் கொண்டு வெற்றிக் களிப்போடு வெளியே வர .....

( இதுக்குப் பேரு கடப்பாரை சொர்க் . .. ‘ மக்கா ..ஒரு சொர்க் அடிடா ‘ )

ஆரவாரத்தோடு ’எலேய் .. மக்கா ..சித்தப்பூ, மாமோய்...’ என கேலியும் கிண்டலும்மாய் பாசத்தால் நிரம்பி இருந்தது அந்தக் கிணறு அன்று ..........

இன்றும் நிரம்பித்தான் இருக்கிறது கிணறு ....கவனிப்பாரின்றி ....பச்சைக் கறைபடிந்து..... ’பாச’த்தால்
-- வாரீங்களா ..வாரீங்களா ???

1 comment:

lakshmi said...

excellent collection thanks for posting...


Hindi, English, Telugu, Tamil Sex Stories googlika