Sunday, April 26, 2009

இணைய நண்பருக்கு இனிய வேண்டுகோள்...!


தமிழ் இணைய நண்பரே,
தரணி ஆள வந்தோரே !
மனதார வாழ்துக்களை முன் தொடுத்து
மன்னிக்க வேண்டுகிறேன் உங்களிடம் அடுத்து

உண்மைகள் சிலவற்றை உங்களிடம்
உள்ளபடியே சொல்லப் போகிறேன்.
உயர்த்தவேண்டும் நாமிருக்கும் இடம்
உயரவேண்டும் உலகினில் நம்தரம்

மொக்கை என்னும் செக்கினை
சக்கையாய் சுற்றிக் கொண்டிருக்கும்
நமக்குள் நிறைந்தே இருக்கிறது
அள்ள அள்ளக் குறையாத
தேன் அமுதக் கவிதைகள்

சுயமாய்க் கவிபடைத்து
சுயரூத்தைக் காட்டிடும்
சுயம்புகள் எங்கள்
சுந்தரக் கவிகள்

வசதியும் வாய்ப்பும்
வாசலில் இருந்தும்
நேரமும் காலமும்
நெருக்கத்தில் இருந்தும்

ஏனோ மயக்கம்!?
ஏன் இந்தத் தயக்கம்!?

பள்ளம் பாயும் வெள்ளமென
படைப்புகளைத் தாருங்கள் !
எண் விளையாட்டை மறந்து
பண் படைத்திட வாருங்கள் !!

அற்புத பண் திடலில் ஒன்று
அவசர மண் திடலில் ஒன்று
இருகால் பதித்திருக்கிறீர்கள் ஆனாலும்
இருபக்கமும் பார்த்திருக்கிறீர்கள்

அழுத்தம் தருவதைப் பொருட்டே
அதன் இடம் கொண்டு சேர்க்கும்

உங்களின் தேர்வுக்காகக் காத்திருக்கிறேன் !
உள்ளம் நிறைய வாழ்த்தி நிற்கிறேன் !!

No comments: