முன்னிரவு வானத்தில்
கண்ணில் படுவதையெல்லாம்
கண்ணுறங்கும் முன்
பாடிவைத்தனர் புலவர்கள்...
கேட்டதைக் கண்டும்
ரசித்தனர் புரவலர்கள்.....
நிலவும் நிலவுசார்ந்த மேகமும்
உலகம்புகழ உயர்ந்துவிட்டன
உங்களுக்குத் தெரியுமா ?
பின்னிரவு வானத்தில்
நிலவினைக்காட்டிலும்
அதிசயங்கள் பல உண்டு
மின்னியபடியே நகரும்
நுண்ணிய நட்சத்திரங்கள் ....
தாக்குவதுபோல வேடிக்கையாய்ப்
பயமுறுத்தும் எரிகற்கள்.......
யாரோ வரையப்போகும்
கோலத்திற்கான புள்ளிகளாய்க்
காத்திருக்கும் விண்மீன்கள்.....
வர்ணசாலமும் காட்டும்
நிர்மலமான மேகங்கள்.......
கவிஞனும் காண்பவனும்
உறங்கிப்போவதால்
கவின்மிகு அற்புதங்களை
வெளியுலம் அறியவில்லை
ஆனாலும்.....
நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
தினமும் அந்த அதிசயங்கள்.....
என்றாவது ஒருநாள்
எப்படியும் கிடைக்கும்
அங்கீகாரம் என்ற நம்பிக்கையில்...
என்னைப்போலவே...........
.
1 comment:
விரைவில் வரட்டும் அங்கீகாரம்!
Post a Comment