Monday, March 15, 2010

புயல் எச்சரிக்கைக் கொடி ....!



முயலாய்த் துள்ளும்
கோலமயில் அவளின்
கயல்விழிக்குள் சுழலும்
மையலின் மய்யமாகி இருக்கிறேன்

இதோ.....
புயல் கடக்கப் போகும்
காயலாகப் போகிறேன்

உண்மையை உணர்ந்தே
என்னைப் பற்றிய
உண்மை நிலைய
எனக்கு அறிவிக்க
எண் குறியிட்ட
எச்சரிக்கைக் கொடியை
ஏற்றிவைக்கிறேன்

எனக்குள்........

.

1 comment:

மதுரை சரவணன் said...

புயல் அல்லபையல் எச்சரிக்கை கொடி. அருமை .வாழ்த்துக்கள்