Wednesday, December 1, 2010

ஒரு யானையும், ஒரு பூனையும் , நானும்.....:!



எளியவன் இவனிடம்

வலியவன் அவன் தனது

வலிமை மொத்தத்தையும்

வல்லமையாய்க் காட்ட...


இயலாமையால்

இவன் சிரம் குனிந்தே இருக்க..

வன்மத்தோடு

அவன் கரம் உயர்ந்தே இருக்க....


ஒருபக்கமாகவே

ஊசலாடிக் கொண்டிருக்கிறது தராசு


பொறுத்துப் பொறுத்துப் பார்த்து

பொறுமை அத்தனையும் இழந்து


இவனைக் களத்திலிருந்து ஒதுக்கி

அவனுக்கு எதிராய் இறங்கி

நிமிர்ந்து நிற்கிறேன் நான்.......


இவனாகிக் கொண்டிருக்கிறான்

அவன் எனக்கு முன்னால்...............


.

No comments: