Wednesday, March 23, 2011

கிராமத்துக்குள்ளே வாரீயளா..........!

அன்பு உள்ளங்களுக்கு ...........

பங்குனி உத்திரம் ......குலதெய்வ வழிபாடு நடைபெறும் நாள்........

வருடம் முழுவதும் பாழடைந்து கிடக்கும் பல கிராமத்துக் கோவில்கள் ,பூடங்கள் , கிராம தெய்வ அடையாளங்கள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு , பூசை ,திருவிழா, உறவுகளின் சந்திப்பு என பரபரப்பாய் இருக்கும் நாள் ....

எங்கெங்கோ புலம் பெயர்ந்து கிடப்பவர்களையும் ஓரிடத்தில் நம்பிக்கையின் பெயரில் இணைக்கும் நாள்...

தந்தைவழிச் சொந்தங்கள்/ உறவுகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்துக் கொள்ளும் நாள் ..........

(ஒரு குறிப்பிட்ட கோவிலில் வழிபட வருபவர்கள் அனைவரும் ....முன்பின் அறிமுகம் இல்லாதவர்களாய் இருந்தாலும் தந்தைஐவழி உறவின் முறையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஒருவருக்கொருவர் நலம்/அன்பு பரிமாறிக்கொள்ளும் நாள்...இன்னும் விபரமாக தனி இழையில்:)

போவோமா......வாருங்கள் ...ஒரு கிராமத்து பங்குனி உத்திர விழாவிற்கு
( மு.கு : அலைபேசியில் எடுத்தப் படங்கள்.....தெளிவாய் இல்லாத இடங்களில் ...மன்னிக்கவும் )

1)மலை ஏறுவோம்..........................................................2) சீவலப்பேரி
19032011(001)aa 300.jpg 19032011(053)a.jpg


3) வரவேற்கிறார்..............................................................4)அடுக்கிவைத்தாற்போன்ற பாறைகள்..
19032011(003)a.jpg 19032011(015)a.jpg


5) விடலை......................................................................6) மேலிருந்து ஒரு பார்வை
19032011(004)a.jpg 19032011(007)a.jpg


7)தொட்டிக்குக் கீழே நம்ம ‘boss'......................................8) வேண்டுதல்/ஆசீர்வாதம்/வசூல்
19032011(020)a.jpg 19032011(017)a.jpg


9)முக்கிய செய்தி : குழந்தைவரம் வேண்டி, மலைக்கு மேலே பிச்சை எடுத்துவரும் பணத்தைக் கொண்டு ,அடிவாரத்தில்(பிறர் உதவியின்றி) உணவு தயாரித்து, பிறருக்கு வழங்குவதாக நேர்ந்துகொண்டு மடியேந்தி நிற்கும் தாய் இவர்....
அவரது நிலையையும் அருகில் இருப்போரையும் கவனிக்கும் பொழுது ....பொருளாதாரத்தில் குறை இல்லாதவர்கள் என்று தெரிகிறது....... நம்பிக்கைதான் வாழ்க்கை என்ற உறுதியுடன் கண்கலங்கி நின்றவரைத் தாண்டிச்சென்ற ...சாமிகும்பிட்டு இறங்கும் அனைவரும் ஒரு நிமிடம் நின்று ...திரும்பி ஆண்டவன் சனிதானம் நோக்கி வேண்டிவிட்டு ,அவரது மடியில் தனது கையில்ம் இருப்பதை போட்டுச் சென்றதைப் பார்க்கும்பொழுது ...மேற்கொண்டு தொடர்ந்து என்ன எழுதவென்று தெரியவில்லை......ஒவ்வொரு கிராமத்தானிடமும் ’மனித நேயம்’ வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது ....( நான் கூட நாகரீக வேடத்தில் என்னை மறைத்துக்கொண்ட கிராமத்தானாக என்னை உணர்ந்தேன் அந்த இடத்தில்)

மருத்துவம் செய்யாததை..அவர்கொண்ட நம்பிக்கையும்...அவருக்காக அவரை இதற்குமுன் அறியாதவர்கள் செய்த வேண்டுதல்களும் செய்துமுடிக்கும்.... நாமும் வேண்டிக் கொள்வோம் அன்பர்களே ...........
19032011(027)a.jpg
வரும் வருடத்தில் அவர் குழந்தையுடன் அங்கே வருவார் என்ற நம்பிக்கையுடன்..........


10)மொட்டைக் கிணறு /மொட்டைபோட்டுக் ................11) வெறும் பாறையில் வேர்விட்டு உயிர்வளர்க்கும்
குளிக்கும் கிணறு ..................................................................ஆலமரக்கன்று
19032011(025)a.jpg 19032011(018)a.jpg


12) மேலிருந்து ஒரு கோணம்.........................................13) பாரம்பரிய வழித்தடம்
19032011(023)a.jpg 19032011(028)a.jpg


14) வண்டித் தடம்............................................................15) கீழே இறங்குவோம்
19032011(031)a.jpg 19032011(033)a.jpg

16)வழியணுப்புகிறார்.......................................................17) சந்தையில் வரவேற்கும் ‘எந்திரன்’
19032011(032)a.jpg 19032011(063)a.jpg



19032011(036)a.jpg 19032011(035)a.jpg
18) பூந்தி , கருப்பட்டி முட்டாய்........................................19) கருப்பட்டி முட்டாயும், சீனி முட்டாயும்
................................................................................................(ஏணி முட்டாய் என்றும் வேறுபெயர் உண்டு)


19032011(049)a.jpg 19032011(040)a.jpg
20) வெங்காய வடை........................................................21) இனிப்புச்சேவு,காராச்சேவு, காராப்பூந்தி
..................................................................................................(காரச்சேவு,காரப்பூந்தி தான் உண்மையான பேரு:))




19032011(037)a.jpg 19032011(048)a.jpg

22) கொதிக்கும் எண்ணையில்........................................23)குதித்த முட்டை போண்டா......


19032011(041)a.jpg 19032011(039)a.jpg
24) பருப்புவடை,பஜ்ஜி,முட்டைக்கோசு ........................25) கேக்...அந்த காப்பி டம்ப்ளரைப்பத்தி தனி
...................................................................................................சாகசக் கதை இருக்கிறது ..


19032011(043)a.jpg 19032011(044)a.jpg
26) அடிவாரத்தில் அவசரக்கடை.....................................27) நகைக் கடை


19032011(045)a.jpg 19032011(046)a.jpg
27) பேன்சி ஸ்டோர்..........................................................28) பூக்கடை


19032011(057)a.jpg 19032011(058)a.jpg
29)பாசி,மாலை..................................................................30) கொஞ்சம் பெரிய கடை


19032011(060)a.jpg 19032011(061)a.jpg
31) குளிர்ச்சியாய் வெட்டிவேர் நீரில் நன்னாரி சர்ப்பத், 32) தர்ப்பூசும் , அன்னாச்சியும்
சூடாய் சேமியாப் பாயாசம்


19032011(059)a.jpg 19032011(024)a.jpg
33)கெளம்பியாச்சு..கெளம்பியாச்சு.................................34) கொஞ்சம் கடந்தபின் ..எதையோ தொலைத்தது போல் ................................................................................................உணர்ந்து திரும்பிப் பார்கிறேன்
.................................................................................................தூரத்தில் கலங்கலாய்த் தெரிகிறது எல்லாமும்



30012011(009).jpg
35) முக்கியமான கதையை மறந்துட்டேன் பாருங்க .................

அடிவாரத்தில் வூட்டம்மா மற்ற சாமிகளையும் பார்த்துவரப்போன நேரத்தில்...காப்பி குடிக்கலாமேன்னு ‘ஒரு காப்பிண்ணே’ என்று ஆர்டர் கொடுத்து கொஞ்சம் நெழலப் பார்த்து ஒதுங்கி நின்னேன் ......

போலீசுன்னு நெனைச்சிருப்பாரு போல ....ஸ்பெசல் காப்பி வந்து சேர்ந்தது .......ஒரு 30 வருடங்களாக என்னால் இன்னும் செய்து முடிக்க முடியாத / கண்டு பிடிக்க முடியாத ஒரு மிகப்பெரிய புதிரான சங்கதியாக ..
டபராவில்(கப்பில்) கவிழ்ந்த நிலையில் டம்ப்ளர் ...அதுக்குள்ளே காப்பி ....கையிலே காப்பியை வாங்கியவுடன் உடல் ஒருமுறை நடுங்கி அடங்கியது ......
aqw (164).gifஇங்கே ஒரு ப்ளாஷ்பேக்....... 30 வருடங்களுக்கு முன்...........................
காப்பிக் கடை ...அப்பாவோடு நான்...கையில் இதேபோல ஒருகப் காப்பி.......பார்த்தவுடன் எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வருகிறது....காப்பி இல்லாத வெறும் கப்பைக் கொடுத்து கடைக்காரர் ஏமாற்றுகிறார் நம்மை...
கோபம் கொப்பளிக்க கப்பை கீழே போடுகிறேன்........உள்ளே இருந்து சிதறிச் சிந்துகிறது காப்பி.........
’ அட எங்கே இருந்தது காப்பி’ அதிர்ந்து போய் பார்க்கிறேன் .... சுத்தி இருந்தவங்க எல்லாம் சிரிக்க , வெக்கம் பிடுங்கித் தின்கிறது என்னை.....

அப்பா செல்லமாகத் தலையில் தட்டிவிட்டு.....இன்னும் ஒரு கப் வாங்கி டம்ப்ளரை நிமிர்த்தப் போக நான் ஓடிச் சென்று அவர்கையிலிருந்து காப்பியைப் பிடுங்குகிறேன் .....கேலி செய்தவர்கள் வாயடைக்க வேண்டுமே .....
நாமே திறந்து காட்ட வேண்டும்......

வேகமாக தலைகீழாக இருக்கும் அந்த டம்ப்ளரை நிமிர்த்திய நொடியில் ....கொதித்துக்கொண்டிருந்த காப்பி பொங்கி கப்பிலிருந்து வழிந்து ...கால், தொடை (இன்க்ளூடிங் ஆல்..:) எல்லாம் கொட்டி , வெந்து ...10 நாளைக்கு டவுசர் போடாமல் அலையும் நிலைவரையில் கொண்டுவந்து விட்டுவிட்டது ...:(((


---அந்தப் பயத்தில் இன்றும் இன்னும் ஒருமுறை உடம்பு நடுங்க ........அப்படியே காப்பியை கார்மேல வைத்துவிட்டு ...படம் எடுப்பதுபோல நடித்துக் கொண்டிருந்தேன் (எவ்வளவு நேரம்தான் நானும் படம் புடிக்கிற மாதிரியே படம் போடுறது :((
...வந்து சேர்ந்த வூட்டம்மா அந்த காப்பி டம்ளரையும்,என்னையும் மாத்தி,மாத்தி பாத்தாங்க....விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சவங்க வீடுவந்து சேரும் வரைக்கும் நிறுத்தவே இல்லை..:((,,,வீட்லயும் பிள்ளைங்க கிட்டே சொல்ல்லி ..அவங்களும் கிணடலடிச்சு...பெரிய கலாட்டாவாகி எனது வீரம்,மீசை எல்லாம் அன்னிக்கு ஒருநாள் குடை சாஞ்சுப் போச்சுது ;(


நீதி : ஆர்வக் கோளாரில் எல்லா விசயத்தையும் வூட்ல சொல்லீடாதீங்க :))))


Monday, March 21, 2011

சில சிங்க(X) நாய்கள்................

அன்னையின் பாதத்தில் சமர்ப்பணம் ...22/03/11....

(செய்தி :அன்னையின் அஸ்தி வங்கக்கடலில் கரைக்கப் படுகிறது)

சில நடுநிசி(X) நாய்கள் :

X-Files-01-june[1].gifxfiles.gifX-Files-01-june[1].gif

ட்ராய்(TROY)ன் போர்தர்மத்தை

நாய்களிடம் எதிர்பார்த்து

தாய்மணணில் பிடியை

தற்காலிகமாய் இழந்து

பொய்யாகிப் போனது போன்ற

மாயத் தோற்றத்தின்பின்

அரங்கேற மறைந்திருக்கிறது

பல்லாயிர ரத்த சரித்திரம்

நாளைய உலகம்

போற்றக் காத்திருக்கும்

நிகழ்கால யுத்த சரித்திரம் ....!


அதீத நம்பிக்கையோடு

வெற்றியை நிர்ணயித்து

தேதியை நிச்சயித்து

சேதியை அறிவித்தும்........

பெரும் கண்டங்கள் துணயோடு

வருங்கால வல்லரசுகள் இணையோடு

வான்வெளியை வளைத்துப் பிடித்தும்

கடற்பரப்பை வலைக்குள் அடைத்தும்.....


கைப்பற்ற வேண்டிய இலக்கு

காற்றில்கரைந்ததால் கலங்கி

கையிலிருந்த நகலை கசக்கி எறிந்து

அசலின் கதைமுடிந்ததாய் அறிவித்து

வெளியில் ஆட்டம் போட்டு

உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன

இலக்கின் இலக்காகிப்போன

சில சிங்க(X) நாய்கள்................


விலங்கிடமிருந்து காப்பதாய்

உலகுக்குக் காட்டிவிட்டு

அப்பாவிகளைப் பிடித்து

வேலிக்குள் அடைத்து

உலகை ரட்சிக்கும்

பெரியண்னன்கள் ரசித்திருக்க

வெறிகொண்டு வேட்டையாடி

ருசித்துக் களைத்திருக்கின்றன

சிங்கமென்ற நினைப்பில்

காவல் பொறுப்பிலிருக்கும்

சில சிங்க(X) நாய்கள்............


பசித்தவர் கஞ்சிக்கும் நீருக்கும்

வரிசையில் ஏங்கி நிற்க .....

‘புளிசாதம் என்றொரு குரல்

சன்னமாய்க் கேட்டு வைக்க....

தலைமுதல் கால்வரை கவசமும்

தளும்பத் தளும்ப ஆயுதமிருந்தும்

முள்வேலியைத் தாண்டி

தலைதெறிக்க பாய்ந்தோடி

பங்கருக்குள் பதுங்குகின்றன

முன்னர் மகி(ழ்)ந்த

சில சிங்க(X) நாய்கள்.......


உறுப்பிழந்தவரையும்

உள்ளம் பேதலித்தவரையும்

முள்வேலிக்குள் நெருக்கமாய்

அடைத்து வைத்திருப்பது

தலை நிமிர்ந்த வீரத்தால் அல்ல......

தன்னுயிர் பற்றிய பயத்தால் என்பதை

உலகறியச் செய்து கொண்டிருப்பதும்

அதே முள்வேலி தான் என்பதை

இன்னும் உணராமல் இருக்கிறார்கள்

சில சிங்க(X) நாய்கள்...............


பீனிக்ஸ் பற்றிய கற்பனையில்

பற்றிய பயம் தொற்றிக் கொள்ள

சிதையைச் சிதைத்து

புழுதியில் கலப்பதாய் நினைத்து

எம்தலைக் கிழவியின் சாம்பலை

எம்மண்ணிலேயே விதைத்து

ஏங்கிப் புதைந்திருக்கும்

எம்குல வித்துக்களுக்கு

தம்மையும் அறியாமல்

உரம் இட்டுச் சென்றிருக்கிறார்கள்

சில நடு நிசி நாய்கள்

..........சிங்க(X) நாய்கள்


இப்போதைய எகிப்தும்

துனிசியாவும் லிபியாவும்

உரத்துச் சொல்லும்

நாளைய வரலாறு ஒன்றை

இன்றைய உலகுக்கு..................


பூஜ்ஜியத்துகுள் இருந்து

பொங்கி வந்தவர்கள் பொடியன்கள்........

இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்.....


Tuesday, March 8, 2011

14 : மகளிர் தினமாம்...மகளிர் தினம்...! ...தேவையா இது ...!!


ஆண் மகன் நான்
ஆணவத்துடன் கேட்கிறேன் ....

தேவையா இதுபோன்று
மகளிருக்கென தனியே ஒருநாள்..!!

தடம் பதிக்கிறேன் குழந்தையாய்
தாங்கிப் பிடிக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் தாயின் வடிவில்

வளர்ந்து வருகிறேன் பாலகனாய்
கூடி விளையாட காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் அக்காவின் உருவில்

படித்து வருகிறேன் மாணவனாய்
வழிகாட்டி உயர்த்தக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் ஆசிரியரின் வடிவில்

வலம் வருகிறேன் சுமைதாங்கியாய்
ஊன்றுகோலாய்த் தாங்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மனைவியின் உருவில்

உறைந்துபோய் இருக்கிறேன் பாறையாய்
உருக்கி மனிதனாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் மகளின் வடிவில்

ஓய்ந்துபோய் இருக்கிறேன் முதியவனாய்
மீண்டும் குழந்தையாக்கக் காத்திருக்கிறாள்
ஒரு பெண் அங்கே
என் பேத்தியின் உருவில்

எங்கும் அவள் ..
எதிலும் அவள் ....
எல்லாமே அவள் .....
எல்லா நாளுமே அவள்
.....

பிறகு ஏன் இந்தநாள்?
அவளுக்கென
தனியே ஒரு நாள்!

Saturday, February 26, 2011

13.இந்த நூற்றாண்டின் நிலவரம்...கலவரமாய்..........!

போர்க்களம்.....


தம் கலையைக் காட்ட

தம்மை நிலை நாட்ட

எதிர் எதிர் துருவங்கள்

வெற்றியைக் குறிவைத்து

வெறியுடன் மோதும் ஆடுகளம் ...


அடியார்கள் கூடிவர

பெரியோர்கள் பாடிவர

தேவதைகள் ஆடிவர

அமைதியாய் வருகிறார் கடவுள்


அரக்கர்கள் வெடிவெடிக்க

ஆயுதங்கள் சடசடக்க

அங்கங்கள் துடிதுடிக்க

ஆர்ப்பரித்து நிற்கிறான் சாத்தான்


பாந்தமாய் நடுவர் கொடியசைக்க

பார்ப்போர் மனதுக்குள் இடிஇடிக்க

இந்தப் பூகோளம் ஒடுங்கிநிற்க

அந்தக் பாதாளம் நடுங்கிநிற்க

தொடங்கிய போராட்டம்....


கடுமையான விதிமுறைகளுடன்

கொடுமையான வழிமுறைகளுடன்

வியூகங்களைப் புரிந்துகொண்டும்

சாகசங்களால் முறியடித்தும்

சமயத்தில் சறுக்கிவிழுந்தும்....

முடிவேத் தெரியாமல்

விடைகாண முடியாமல்

விடாமல் தொடர்கிறது..............


ஏற்கனவே ‘எங்கோ’

செய்துகொண்ட ஒப்பந்தப்படி

கடவுள் வெற்றிபெற்றதாக

’வழக்கம் போலவே’

அறிவிக்கப் படுகிறது......


தேவதைகளின் எண்ணிக்கையும்

கூடிக்கொண்டே இருக்கிறது

நடுவரின் அந்தப்புரத்தில் ....!




[கரு : யாழி]

[படம் : இணையம் /யாரையும் குறிப்பிட்டு அல்ல :) ]

Wednesday, February 23, 2011

12.அவளது முன்கதையை முடிக்கும் நேரமிது....!

அரங்கேற்ற வேளை / அரங்கேற்றும் வேலை :

ஆம்.....

இன்றோடு....

நூறு நாட்கள் கடந்துவிட்டன - நான்

நூலிழையில் முடிவெடுத்திருக்கிறேன்

அவள்கதையின் அரங்கேற்ற வேளை என்று...

எனக்கதை அரங்கேற்றும் வேலை இன்று...

என்னவிலை கொடுத்தும் முடிப்பேன் நன்று...


எதற்கும் உண்டே எல்லை..

இன்றுடன் கதையை முடித்துவிட்டால்

இனியும் தொடராது இந்தத் தொல்லை...

பெருமைக்குக் கறையென்று ஒன்று வருமென்றால்

பொறுமையும் கரைந்து குறைவதில் தவறில்லை


வலதுகால் வைத்து விளக்கேற்றி

எனது வீட்டுக்குள் வந்துவிட்டாள்தான்...

அவள்மனக் கூட்டுக்குள் இருக்கிறேனா

எனும் கேள்விச்சூட்டில் வெந்துவிட்டேன்நான்..


ஆம் இல்லை என்பதே

அவளிடம் வேகமாய்வரும் வார்த்தைகள்

அந்த அழ்கடல் அதிர்வுகள்தான்

என்னை வேகவைக்கும் சாட்டைகள்


சைகையால் உரைப்பாள் சமயத்தில்

கண்சாடையால் உறைப்பாள் - நான்

சல்லி சில்லியாய் உடைவேன்

சுக்கல் சுக்கலாகி மடிவேன்


என்னுடன் அவள்பேசியதைத் தொடுத்தெடுத்தால்

பத்து பக்கத்தில் அடக்கிவிடலாம்

நான் அவளிடம்புலம்பியதைத் தொகுத்தெடுத்தால்

பக்கத்து மெத்தையையே அடைத்துவிடலாம்


ஒருவேளை இருக்கலாம்

ஏதாவதொரு பழைய மனச்சுமை...

அவளாக இறக்குவாளென

அமைதியாய்க் காத்திருந்ததன் பலன்

இன்று தலைக்குமேல் வெள்ளமாகி

பலமாய் அழுத்தத் தொடங்கிவிட்டது


இதோ..

வந்து நிற்கிறாள் அவள்..


திட்டமிட்டபடியே

காலணிகள் இடம்வலமாய் உதற

முன்னால் உள்ளதெல்லாம் சிதற

பாத்திரங்கள் உடைந்து நொறுங்க

பத்திரங்கள் நைந்து பறக்க.......


உருவம்தான் மாறவில்லையே தவிர

மிருகத்துக்குள் ஏறியிருந்தேன் நான்


இன்றுதான் அவளது

உலகவாழ்க்கை வரலாற்றிலேயே

முதன்முறையாய் ஒரு கோரதாண்டவத்தை

நேரடியாய் பார்த்திருப்பாள் போலும்

மிகஅதிர்ந்து மூலையில் ஒடுங்கி

வாய்திறந்து பெரும்குரலெடுத்து

‘ஓவென அழ ஆரம்பிக்கிறாள் .


ஆகா...

இதற்குத்தானே காத்திருந்தேன்....


ஓடிச்சென்று கட்டியணைத்து

முதுகை வருடி தலையைத் தடவி

மெல்ல அவள் காதருகில்

செல்லமாய் கிசுகிசுக்கிறேன்

.உனக்கு பாடவும் தெரியுமா..?

முகாரி ராகம் இது ...!


சட்டென அழுகையை நிறுத்தி

சரேலென என்னை விலக்கி

விறுவிறுவென எதையோ தேடி

குறுகுறுவென பார்க்கிறாள் என்கண்ணுக்குள்


எதோ கிடைத்திருக்க வேண்டும் அவளுக்கு..

பொங்கும் வெட்கத்துடன்

இருகரம் கொண்டு வாய்ப்பொத்தி

அறையெங்கும் எதிரொலிக்க

அருவியாகச் சிரிகிறாள்

அடடா.... இது ஆனந்த பைரவி......!

கரு : மகாபாரதம் / கண்ணன்


Monday, February 21, 2011

11.பரிகாரம் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்களேன்......!


























உச்சந்தலையில் விழுந்திருக்கிறது பல்லி...

இடிந்துபோய் முடங்கிக்கிடக்கிறாள் அவள்...


முன்பொருமுறை...

அப்பாவின்மேல் விழுந்ததற்கே

படபடத்து...பதறித்துடித்து

பூசையும் பரிகாரமுமாய்

ஊரையே கூட்டி...

வீட்டையும் இரண்டாக்கி...

தலைகீழாகப் புரட்டித்தான்

போட்டிருக்கிறாள் அம்மா ..


ஓ.....

இது உச்சந்தலை ....

நினைக்கும்பொழுதே உள்ளம்

வெடித்துச் சிதறுகிறது அவளுக்கு...


சோதிட...எண்கணித...வாஸ்து...

வல்லுனர்களைத் தேடியும்

பெயரியல்...ப்ரசன்ன...நவரத்தின...

நிபுணர்களை நாடியும்

வீதிவீதியாய் படபடப்புடன்

அலைந்து கொண்டிருக்கிறது பாதிக்குடும்பம்


அவளுக்கு விளங்கச் சொல்லி

துலங்கவைக்கும் வழிதெரியாமல்

பரிகாரமுறையும் சரியாகப்புரியாமல்

தொலைக்காட்சியின் முன்

விடைக்காகப் பதட்டத்துடன்

நகம்கடித்துக் காத்திருக்கிறது மீதிக்குடும்பம்


தனியே....

பல்லி விழுந்த

மரப்பாச்சி பொம்மையின்

தலையைத் தடவியபடியே

தேம்பலுடன் விரல்சப்பி

தூங்கிக்கொண்டிருக்கிறாள் அவள்...


திருதிருவென விழித்தபடி...

அருகிலேயே இருக்கிறது

அந்த ரப்பர் பல்லியும்.........

Thursday, February 17, 2011

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(12) செங்கோண முக்கோணம்..ஒரு உண்மை..!

கற்போம்,கற்பிப்போம் : (12) : செங்கோண முக்கோணம் [எளிய வழியில் முழு எண்களால் ஆன ( பின்னங்கள்/fractions இல்லாத )ெங்கோண முக்கோணம் அமைக்கும் முறை ]

(கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(5) ம[ற]றைக்கப்பட்ட உண்மை...!
--இதன் தொடர்ச்சியாக கிடைத்த இந்த மிக முக்கியமான உண்மையை/சூத்திரத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் ...மிக ஆர்வமுடன் ஊக்கமளித்து செய்திகளைப் பறிமாறிக்கொள்ளும் அன்பர்கள்/பெரியவர்கள் அனைவருக்கும் நன்றி

செங்கோண முக்கோணம் ::

பக்கங்கள் X,Y : எனவும்

[X = 2ab ; Y = ( a²~b²) = a²,b² இடையிலான வித்தியாசம்.]

கர்ணம் Z: [Z = (a²+b²)] னவும் கொள்வோம்.

(a,b – இரண்டிற்கும் 1லிருந்து மதிப்பு கொடுத்தோமானால்

முழு எண்களால் அமையும் செங்கோண முக்கோணத்தின் அளவுகள் கிடைக்கும்)

(வழக்கமான கர்ணத்திற்கான சூத்திரத்திலிருந்து இது மாறி இருப்பதைக் கவனிக்கவும்)

m 12.jpg



a b

a

b

பக்கம் X

பக்கம் Y

கர்ணம் Z

(2 x a x b)

(a² ~ b²)

(a² + b²)

1

1

1

2

4

3

5

1

3

6

8

10

1

4

8

15

17

1

5

10

24

26

1

6

12

35

37

1

7

14

48

50

1

8

16

63

65

1

9

18

80

82

1

10

20

99

101

2

1

4

3

5

2

2

2

3

12

5

13

2

4

16

12

20

2

5

20

21

29

2

6

24

32

40

2

7

28

45

53

2

8

32

60

68

2

9

36

77

85

2

10

40

96

104

நன்றி : nahupoliyan N. பாலசுப்பிரமணியன் /சந்தவசந்தம்