Tuesday, February 17, 2009

சதியை மதியால்.....


என்னோட மவராணியே
என்ன மாதிரியான ஒலகமிதுன்னு
ஒரு மண்ணும் வெளங்கலியே

என்னையும் ஒன்னையும்
ஒன்னுபோலப் பாக்கணுமுன்னு
ஒட்டுமொத்தமா கேக்கிறானுவளே

சேத்துப் பாத்தா எப்படியும்
சத்தமா எதுப்பானுவன்னு
எதிர்பாத்து இருந்தா இப்படி
ஏங்கிப்போயி கெடக்கிறானுவளே

சதி வேலயா இருக்குமோ?

சாதி சரியில்லன்னு சொல்லி
சங்கப் பிடிச்சிருவாங்களோ?
ஒன்னுபோல பாத்த பின்னால
ஒதுக்கிப் பிரிச்சிருவாங்களோ?

என்ன நடந்தாலும் சரிதான்னு
எதுக்கும் துணிஞ்சிட்டேன் மக்கா

முள்ள முள்ளால தானே எடுக்கணும்
சதிய மதியால தானே வெல்லணும்

சரி !

இங்கேயே பாக்கணுமா ?
இப்போதே பாக்கணுமா ??
பக்கத்துல வந்துக்கோங்க !
உத்து உத்துப் பாத்துக்கோங்க !!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
N1

No comments: