Wednesday, February 25, 2009

ரஹ்மான் உணர்த்தும் உண்மை......



Aது யாR ரஹ்மான்?
அவரு என்ன சாதிச்சாரு????
இது உலகில் நேற்று வரை

AR ரஹ்மான்!!!!
அட அவரைத் தெரியாதா!!!
இது உலகின் இன்றைய நிலை

இரண்டு ஆஸ்கார் மூலம்
இருண்ட கிடந்ததுபோல் தோன்றிய
இந்தியக் கலை உலகத்தினை
உலக அரங்கில் உயர்த்திப் பிடித்திருக்கிறான்
உலக நாயகன் எங்கள் ரஹ்மான்

இருங்கள்,கொஞ்சம் இருங்கள்
இதற்கே இப்படி என்றால்
இனியும் தொடர்ந்து பாருங்கள்

விருது கிடைத்த மகிழ்ச்சியில்
விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்காமல்
உண்மை நிலையை கொஞ்சம்
உரசிப் பார்க்கலாம் வாருங்கள்

ரோஜாவின் தமிழா தமிழா_வை விடவா
பம்பாய்_ன் உயிரே உயிரே_யை விடவா
ஸ்லம் டாக்_ன் ஜெய் ஹோ சிறந்தது??????????????

ஒரு அந்நிய நாட்டுப் படத்தின் மூலமே
ஒரு ஆந்நிய மொழிப் படத்தின் மூலமே
ஒரு அற்புதக் கலைஞன் அவன்
ஒருவழியாய் அடையாளம் காணப்பட்டிருக்கிறான்

ஏன் இந்த அவல நிலை??
என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள்???
ஒரு இந்தியப் படைப்பாளியாய்
ஒரு இந்தியக் கலைஞனாய்
ஆஸ்கார் களத்தில் தடம் பதிக்க
ஆவன செய்ய முடியாதா????

இங்கே வழி நடத்த ஆள் இல்லையா?
இல்லை வழிதான் தெரியவில்லையா??
இல்லை வழியாரும் தரவில்லயா???

தாமதமான அங்கீகாரம் என்றுமே
மறுக்கப்பட்ட நீதிக்கு சமமல்லவா!
சரியாக மேலே உள்ளவர்கள் வழிநடத்தி இருந்தால்
சாதித்திருப்பார்களே நம்மவர்களும்
சரிக்கு சரியாய்! சாரி சாரியாய்!!

உண்மையை உணர்ந்தால்
உலகமே நம் காலடியில்!

No comments: