Friday, April 1, 2011

மறையும் பழைமையை நிலைநிறுத்த முயலும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்...!

--இது விளம்பரம் அல்ல--
அன்பர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று

நாள் : 27.03.11
இடம் : திருநெல்வேலி

ரீச் பவுண்டேசன் ஏற்பாடு செய்திருந்த செய்முறை விளக்கப் பட்டறையில்
தமிழ்மரபு அறக்கட்டளை/மின்தமிழின் பின்வரிசை மாணவன் என்ற தகுதியுடன் திருமதி.சாந்திதுரை அவர்களுடன் கலந்துகொண்டேன்...

(ஒரு சிறு அறிமுகம் :
ரீச் பவுண்டேசன் : ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் , சென்னை
குறிக்கோள் : அழிந்துகொண்டிருக்கும் புராதானச் சின்னங்கள் ,கல்வெட்டுகள் ,கோவில்களைக் கண்டறிதல்,அதன் சிறப்பை வெளிப்படுத்துதல், புனரமைத்தல், பாதுகாத்தல்.... இன்னும் பல)

கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் கல்வெட்டுகள்/கோவில்களின் தொன்மை மாறாமல் சீரமைக்கும் முறைகளையும் ,சிதிலமாவதிலிருந்து தடுக்கும் பாதுகாப்புவழிகளையும் மிக எளிமையாய் கற்றுத்தந்த சந்திப்பு அது

நம் பண்டைய மரபு,பண்பாடு,கலாச்சாரம் பற்றிய ஒரு புதிய புரிதலை, எனக்குள் விளக்காய் ஏற்றி, வழியனுப்பி வைத்த சந்திப்பு அது

’ நம்மைப்பார்த்து மற்றவர் வியந்து போற்றும் வகையில் வாழ்ந்திருகிறோம்...ஆனால்..தெளிவான புரிதலின்றி , சரியான வழிகாட்டுதலின்றி.... ’நாம் பிறரைப் பார்த்து வாய்பிளந்து நின்று கொண்டிருக்கிறோம் ’ என்ன்னும் உண்மையை உரத்துச் சொன்ன சந்திப்பு அது

தென்தமிழகத்தின் சிறப்பினை,( மலைத்துப்போகும் அளவுக்கு இருக்கின்றன ...மறைக்கப்பட்ட பெருமைகள் ), உலகறியச் செய்யவேண்டும் என்ற உத்வேகத்தை உறுதியுடன் எடுத்துகொள்ள வைத்த சந்திப்பு அது

இன்னும்...இன்னும்...பல புதிய செய்திகள்...அருமையான பெரியவர்களுடன்...மிகச் சிறந்த நாளாகிப்போனது .....இந்தநாள் எங்களுக்கு...

மதிய உணவுக்குப் பின்...செயல்விளக்கப் பட்டறைக்காக (திருநெல்வேலியில்)அருகில் இருக்கும், சிதிலமாகி இருக்கும் உச்சிஷ்ட மகா கணபதி திருக்கோயில், மணிமுத்தீசுவரம், சென்றோம்...

தலச் சிறப்பு : ( நானறிந்த வரையில் மட்டும் .....)
ஒரே கருவறையில் கணபதியும், சிவனும்
அன்னையை மடியில் வைத்திருக்கும் கணபதி
சித்திரையில் கணபதிமேல் சூரிய ஒளிபடும் அமைப்பு
மிகப்பெரிய நுழைவாயில் கோபுரம்.......................

27032011A.jpg 27032011(010)A.jpg
பராமரிப்பில் உள்ளது கோபுரத்தின் மேல்பகுதி மட்டும்தான்..................பிரம்மாண்ட நுழைவாயில்


27032011(002)A.jpg 27032011(004)A.jpg
சிதிலமான சுற்றுச் சுவர்


27032011(013)A.jpg 27032011(014)A.jpg
தொழில் நுடபக் குறைபாடுகள் உள்ள கல் உத்திர அமைப்பு.....விழும் நிலையில் கருவறை முகப்பு


27032011(016)A.jpg 27032011(008)A.jpg
சிதிலமாகிக் கொண்டிருக்கும் மேற்கூரை....................... நுழைவாயிலில் மரத்துடன் தூண்

27032011(024)A.jpg 27032011(029)A.jpg
உள்பிரகாரச் சுவர்.............................................................சுற்றுச் சுவர்


27032011(026)A.jpg 27032011(027)A.jpg
கல்வெட்டின் பொருள்தேடி.................................................ஒரு கலந்தாய்வு

27032011(028)A.jpg 27032011(032)A.jpg
வெளிச் சுற்றுச் சுவர்.......................................................வெளிக் கோபுரம்


27032011(019)A.jpg
நல்லதொரு விடியலை எதிர்பார்த்து.........................

ஒரு வேண்டுகோள் : இணைய அன்பர்களே ....தங்கள்பகுதியில் உள்ள கவனிப்பாரற்ற புராதானச் சின்னங்கள் , கல்வெட்டுகள் , பழங்காலக் கோவில்கள் , பற்றிய விபரங்கள் இருந்தால் அறியத் தாருங்கள்..... உங்கள் மூலமாக முன்னோர் பெருமைகளில் ஒன்று உலகின்முன் புதியதாய்ப் பிறந்து வந்ததாக இருக்கட்டும் ...........

’இயன்றதைச் செய்வோம்.....முடிந்தவரை முயல்வோம்.....எண்ணம்போலவே எல்லாம் அமையும்’

நன்றி : மிக அருமையாய் வரவேற்று ,ஒருங்கிணைத்த அன்பர்களுக்கும்.....
வந்து வழிகாட்டிய பெரியவர்களுக்கும் ,அரியனவற்றை அறியத்தந்த அறிஞர்களுக்கும்........
கலந்துகொண்டு பெருமை சேர்த்த ஆர்வலர்களுக்கும்..............
நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.........




வாழ்க ......

2 comments:

மதுரை சரவணன் said...

pakirvukku nanri...vaalththukkal

இராஜராஜேஸ்வரி said...

தென்தமிழகத்தின் சிறப்பினை,( மலைத்துப்போகும் அளவுக்கு இருக்கின்றன ..//

காக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.