Wednesday, December 10, 2008

சுய பரிசோதனை நேரம் !


அடிமட்ட மக்களுக்காகவே
அல்லும் பகலும் பாடுபடும் அரசு
பெறுமையாய் அறிவிக்கிறது
வருவாய் கூடிவிட்டதாக!
இருமடங்கைத் தாண்டிவிட்டதாக!!
....நிற்க...
மக்களின் வருமானமா கூடியிருக்கிறது ?
அது
மது விற்பனையில் வரும் பணம்!

விலைவாசி கூடிக்கொண்டே இருக்கிறது
வளமாய் மாறியிருக்கவேண்டும்
விவசாயியின் வாழ்க்கையும்
....நிற்க...
புள்ளி விபரங்கள்
புரிய வைக்கின்றன
உணர்த்துகின்றன
உண்மை நிலவரங்கள்
கூடிக்கொண்டே போகிறது
விவசாயி தற்கொலைகளும்
விபரீத இடப்பெயர்வுகளும்


சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட
மக்கள் வாழ்வை பாதுகாக்க
புதியதாய் அரசுப் பணியில்
பதினாயிரம் காவலர்கள் சேர்ப்பு
....நிற்க...
கடந்த ஆண்டைவிட
கூடியே இருக்கிறது
குற்றங்களின் எண்ணிக்கையும்

இவை சிலதான்..
இதுபோல் இன்னும் பல....

எதிர் மறையாகவே
இருந்திருக்க வேண்டிய
இந்த மாற்றங்கள் எல்லாமே
எல்லா இடத்திலும்
ஏறுமுகமாகவே இருக்கிறது

என்னதான் நடந்துகொண்டிருக்கிறது?
எங்கேநாம் சென்றுகொண்டிருக்கிறோம்?

No comments: