- இருதய மருத்துவமனை ஒலி எழுப்பாதீர்-
- சந்தைப் பகுதி மெதுவாகச் செல்லவும் -
- கோவிலுக்குள் செல்பேசி தவிர்க்கவும் -
- குப்பைகளை கூடையில் போடவம் -
- பள்ளி சுவர் விளம்பரம் செய்யாதிர் -
- அனுமதி பெற்று உள்ளே வா -
- வரிசையில் வரவும் -
- எச்சில் துப்பாதீர்கள் -
........................
.......................
இது கொஞ்சம் போலத்தான்
இருக்கிறது இதுபோலவே
இன்னும் பல பல
வேண்டிக் கேட்டுக்கொள்ளும்
விளம்பரப் பலகைகள் எல்லாமே
உனக்கே தெரியாமல்
உனது தோலை உறிக்கின்றன
உனது முகத்திரையைக் கிழிக்கின்றன
உலகுக்கு உணர்த்துகின்றன
உனது தரத்தையும் தகுதியையும்
உண்மையை உணர்ந்து
உன்னை நீ திருத்து!
அத்தியாவசிய அறிவுறுத்தல் தவிர
மற்றது அனைத்தையும் அகற்ற
மனது வைக்கவேண்டும்!!
மானுடம் செயிக்க வேண்டும்!
முதலடி நாமே வைக்க வேண்டும்!!
அதற்கு நீயும் நானுமே சேர்ந்து
ஆவன செய்ய வேண்டும்!!!
No comments:
Post a Comment