Friday, August 14, 2009

சுதந்திரம் : ஒரு தியாகியின் மீள் பார்வையில் ...


சகோதர சகோதரிகளுக்கு
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

விடுதலைப் போராட்ட தியாகி ஒருவர்
தொடர்கிறார் உங்களிடம் :


””அன்று
அடிமை நாட்டில்.....

சுதந்திரம்
அது ஒன்றே
எங்களுயிர் மந்திரம்

ஒரே தலைமை
ஒன்றே இலக்கு

வேற்றுமையைப் போக்கும்
ஒற்றுமையே நோக்கம்

அமைதியாய் ஆர்ப்பாட்டம்
அகிம்சையேப் போராட்டம்

பலன் எதிர்பாராத எண்ணம்
நாட்டின் எதிர்காலமே திண்ணம்

தன்வாரிசுகளை மறந்த கூட்டம்
தாய்மண்ணின் எதிர்காலமே திட்டம்

வாங்கித்தந்தோம் சுதந்திரம் - பாதுகாக்கக்
கொடுத்துவைத்தோம் உங்களிடம்

இதோ..
கடந்துவிட்டது
அறுபத்திரண்டு ஆண்டுகள்

இன்று ...
சுதந்திர நாட்டில்

சுதந்திரம்........?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........???
சுதந்திரம் என்றால்........?

சாதிக்கொரு தலைமை
சாதிக்க இல்லை நிலைமை

வீதிக்கொரு கொள்கை
விதியே என்ற வாழ்க்கை

காலையில் சாதி ஓழிப்புப் போராட்டம்
மாலையில் இடஒதுக்கீடு ஆர்ப்பாட்டம்

தாய் நாட்டையே மறந்த கூட்டம்
தன் வாரிசின் எதிர்காலமே திட்டம்


சுதந்திரம்......?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........??
சுதந்திரம் என்றால்......???

ஊர் வம்பே சுதந்திரம்
வெட்டிப் பேச்சே சுதந்திரம்

ஆணவப் போக்கே சுதந்திரம்
ஆடைக் குறைப்பே சுதந்திரம்

வீட்டினுள் மதுசேர்த்தல் சுதந்திரம்
வெளியில் மாதுசேர்தல் சுதந்திரம்

முதியோர் மதியாமை சுதந்திரம்
பெரியோர்சொல் கேளாமை சுதந்திரம்

அதிகாரிகாரங்கள் தேனெடுக்க சுதந்திரம்
அதிகாரிகளுகள் புறங்கைநக்க சுதந்திரம்

மதத்துக்குள் மோதல் சுதந்திரம்
மதத்துக்கே மதம்பிடித்தல் சுதந்திரம்

கலாச்சார சீரழிவு சுதந்திரம்
பாலியல் சீர்கேடு சுதந்திரம்

இன்றைய இளைஞர்களுக்கே
இதுதான் தெரிந்த சுதந்திரம் ..............

நாளைய நமது
வருங்காலத் தூண்களுக்கு ????

காந்திஎன்றால்....
கம்பூன்றிய தாத்தாவாகவும் .,
விடுதலையென்றால்.....
விடுமுறையும் இனிப்பும் .,
தமிழக வரலாற்றில் முதன்முறையாக
புத்தம்புதுத் திரைப்படத்தோடும் .,
சிறப்புப் பட்டிமன்றத்தோடும்
முடிந்தே போகும்...!

ஏ ., இளைஞனே !
இந்தியக் குடிமகனே !!

ஏமாளிகள் நாங்கள்
சந்ததியர் உங்களை நம்பி
வெள்ளையனிடம் போராடி
வாங்கித்தந்த சுதந்திரமதை

தானென்ற அகந்தையில்
தெரியுமென்ற போதையில்
மதிகெட்டு மமதையில்
வீதியில் தொலைத்துவிட்டு

எங்களைப்போல உங்களின்
வாரிசுகளிடம் சேர்க்காமல்
வாரிக் கொடுத்துவிட்டு
மீண்டும் அடிமையாகிக் கொண்டிருக்கிறாய்
அந்நிய மோகமென்னும்
கிழக்கிந்தியக் கம்பெனியின்
மாற்று உருவிடம் !


வேண்டும் வேண்டும்
இன்னும் ஒரு சுதந்திரம் !
இனியாவது சுதந்திரம் !!

ஆனால்.......
யாரிடமிருந்து !?!?!?!?!?!?!?

முடிவு செய் இன்றே !
முயற்சி செய் நன்றே !! “”

--தாய் மண்ணுக்கு வணக்கம் _/\_

No comments: