Saturday, November 13, 2010

முளையிலேயே கிள்ளப்பட்ட........


அவர்களைப் போலவே................... :

அவர்களைப் பின் தொடர்ந்தும்

அவர்களின் முன் தொடர்ந்தும்

அவலத்தை விலக்கச் சொல்லியும்

அசிங்கத்தை விளக்கிச் சொல்லியும்

அவர்களின் முகத்தினை நோக்கி

அரற்றிக் கொண்டே இருக்கிறேன் நான்


எனது அரையின்மேல்

குவித்த பார்வையுடன்

குவிந்த புருவங்களுமாய்....

குறையெதையோக் கண்டதுபோல்

குனிந்து கிசுகிசுப்பாய்

தங்களுக்குள் பேசிக் கொள்வதிலேயே

கவனமாய் இருக்கிறார்கள் அவர்கள்......


வலிக்கும் மனதுள்

வழி என்றெதுவும்

புலப்படவில்லை எனக்கு...


புலம்பலை விடுத்து

அவர்களைப் போலவே

கோவணமின்றி

உலாவத் தொடங்குகிறேன்

நானும்.............!


.

No comments: