Friday, May 1, 2009

மே தினம் / இன்று புதிதாய் பிறப்போம்.....!


இதோ வந்துவிட்டது
மற்றுமொரு மே தினம்

8மணி நேர உழைப்புக்காகவும்
உழைப்புக்கேற்ற ஊதியத்துக்காகவும்
உருவானதுதான் இந்த மே தினம்

1880ல் அமெரிக்காவில் உருவாகி
10 வருடம் போராட்டக் கருலிருந்து
1890ல் பாரீசில் பிறந்த அந்தக்
குழந்தைதான் இந்த மே தினம்

1923லிருந்து இந்தியாவில்
கொண்டாடப்பட்டு வரும்
விடுமுறை நாள்தான் மே தினம்

8மணிநேர உழைப்பையும்
8மணிநேர வாழ்க்கையையும்
8மணிநேர உறக்கத்தையும்
உணர்த்தத்தான் இந்த மே தினம்

அரசுத்துறை ஊழியர் தவிர
அறிந்திடுவாரா யாரும் இந்த
8மணிநேர மே தின சித்தாந்தம்?

கல்லுடைக்கும் கொத்தடிமைகள்
தோட்டத் தொழிலாளர்கள்
ஆலை ஊழியர்கள்
நெசவுத் தொழிலாளர்கள்
ஒப்பந்த ஊழியர்கள்
வியாபாரத்தள வேலையாட்கள்
தினக் கூலிகள்
..............
இவர்களில் எத்தனைபேர் அறிவார்
இனிய இந்த மே தினம்

கால் நூற்றாண்டாய்
கால் கடுக்க மிதிவண்டியில்
காலம் முழுதும் தொழிலாளியாகவே
உந்திக் கடந்து கொண்டிருக்கிறார்
உழைப்பாளி ஒருவர்

நேற்று வந்து இறங்கிய
திசையே தெரியாதவன் தொழிலதிபர் ஆகிறான்
வட்டிக்கடை வைத்தவன் வசதியாய் இருக்கிறான்
கந்துவட்டிக்காரன் காரில் போகிறான்
அடிப்படை தெரியாதவன் அரசியல் செய்கிறான்
பஞ்சாயத்து செய்பவன் பலதேசம் போகிறான்
உழைப்பாளியோ வெறும் காலில் நடக்கிறான்
வாழும் வழி இன்றித் தவிக்கிறான்


மேலதிக வேலையைத் திணிக்கும்
உழைப்புக்கான ஊதியம் மறுககும்
உலகமயமாக்க தாக்கத்தில் இன்று
கடந்தகாலமாகிக் கொண்டிருக்கிறது
காலம் பல கடந்துவந்த மே தினம்

உழைக்கும் வர்க்கத்துக்கு
உண்மைநிலை உணர்த்தி
உயர வைக்குமா இந்த மே தினம்

உயர்த்தி விடுவோமே நாம்
உயரத்தில் இந்த மே தினத்தில்

இன்று புதிய உறுதி எடுப்போம்
குழந்தைத் தொழில் ஒழிப்போம்
முதுமைத் தொழில் அழிப்போம்
உழைப்பவரை உயர்த்துவோம்
ஊழியரை வாழ்த்துவோம்

இன்று புதிதாய் பிறப்போம்
இந்த மே தினம் கொண்டாடுவோம்

No comments: