Wednesday, December 24, 2008

உதவி தேவை! அதுவும் உடனே..!!


ஊருக்கு வெளியே
ஒதுக்குப் புறமாய் வீடு
நட்ட நடு சாமம்
நடுநடுவே சாமந்திப்பூ வாசம்
துணைக்கு அங்கே யாருமில்லை
தூக்கமும் அருகில் வரவில்லை

எங்கும் நிசப்த்தம்
ஓங்கி சப்த்தமிட்டுக் கொண்டிருக்கிறது
கடும் குளிரில் மரங்கள்
நடுங்க மறந்து உறைந்து நிற்கின்றன
ஏதோ ஒரு காலடி ஓசை
எங்கிருந்தோ கேட்டுக்கொண்டே இருக்கிறது

அதிர ஒலிக்கிறது
அழைப்பு மணி வாசலில்
யாராயிருக்கும் இந்த நேரத்தில்
யோசனையோடு எழுந்து வருகிறேன்

சன்னல் திறந்து பார்க்கிறேன்
முன்னால் சுற்றுச் சுவர் அருகில்
தெரு விளக்கு வெளிச்சத்தில்
தெளிவில்லாமல் தெரிவது
நடுத் தெருவில் இருந்த
நெடு நாள் நண்பன்
தலையில் காயம் பட்டிருக்கிறான்
தள்ளாடியபடி நிற்கிறான்

எங்கோ வெளி நாட்டில் இருந்தானே?
எப்போது இங்கு வந்தான்?
இப்போது எதற்கு வந்திருக்கிறான்?
இனம் புரியாத பதட்டத்தோடு
மனம் குழம்பி கதவு திறக்கிறேன்

திடீரென அலறுகிறது
தொலைபேசியின் அழைப்புமணி
திறந்த கதவை விட்டுவிட்டு
திரும்பிச் செல்கிறேன்
தொலைபேசி இருக்கும் இடம்

நடுத்தெரு நண்பன்
நேற்று இரவு விபத்தில்
அகால மரணம்
அடைந்த செய்தி
உச்சந்தலையில் இறங்கி
உள்ளங்காலில் வெளியேறியது

இங்கே பார்த்தது பொய் இல்லையே!
இப்போது கனவும் காணவில்லையே!!
கையைக் கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன்
கதவு வேறு திறந்து வைத்திருக்கிறேன்

முழுவதுமாய் இதயம் வேளியேவந்து
முன்னால் நின்று துடித்துக்கொன்டிருக்கிறது
வாசல்வரைப் போகலாமா?
வந்தது யார் பார்க்கலாமா?

உங்கள்உதவி வேண்டும்! அதுவும்
உடனே வேண்டும்!!

1 comment:

duraian said...

கரு தந்த SMS நண்பர்களுக்கு நன்றி