Sunday, August 9, 2009

காதல் யு(மு)த்த விண்ணப்பம்...


வா...... :(

காத்திருக்கிறேன் உனக்காகவே நித்தம்
காதுக்குளே உன் வளவியின் சத்தம்

கலங்கியதே இப்பிறவியில் சித்தம்
குறையுமா உனைப் பற்றிய பித்தம்

நீயாய் வா.... :(

வா என்றபின் வருவதா யுத்தம்
தா என்றபின் தருவதா முத்தம்

தானாய் வருவதல்லவா யுத்தம்
தன்னால் தருவதல்லவா முத்தம்

வந்தால் தொடருமே முத்தயுத்தம்
தந்தால் அதிருமே யுத்தமுத்தம்

தீயாய் வா..... :(

வருவாயெனில் பிழைப்பேனே செத்தும்
வந்தபின்னால் பறக்குமே பத்தும்

வருவாயா என்மன முற்றம்
வரும்வரை காக்குமென் சுற்றம்

அன்பே உன் கரம் பற்றும்
நாள்வரை என் சிரம் சுற்றும்

அதுவரை எதையும் கவனியேனே சற்றும்
அந்நாள் தான் இப்பிறப்பு முற்றும்

அதோ............. :)

No comments: