Monday, August 3, 2009

குளத்துக்குள்ளே கும்மி....


வறண்டக் குளத்தில
...முங்கிக் குளிக்கையில
கெண்டையொன்னும்
... கெழுத்தியொன்னும்
வந்து சிக்கியது
...வசமா எங்கையில

சிண்டப் புடிச்சு
...யாரோ தூக்கிவிட்டாங்க
மண்டையில நாலு
...சாத்துப் போட்டாங்க
முதுகுலயும் நால
...சேத்துப் போட்டாங்க

கெண்டை மீனோட
...கையில நானிப்போ
மிரண்டு போய்
...மாட்டி நிக்கேன்

கரண்டக் கையில
...புடிச்சதப்போல - நா
வறண்டு போய்
...விக்கி நிக்கேன்

தெரண்டாலும் வழுவழுனு
...கெண்ட மீனெப்படி
உருண்டையா இப்படின்னு
...அப்பவே நெனச்சேனே ?????

கரண்டாக் கையில அடிச்சது
...சிலேப்பிக் கெண்டயுமில்ல
கெழுத்தி மீனுமில்ல - மக்கா !
....கொழுந்தியா அவளோட
கரண்டக் காலு மக்கா !
....கரண்டக் காலு அது!!!

No comments: