Sunday, July 25, 2010

ம்ம்ம் .! அயலகத்தில்...!! அவனுக்கென்ன..!!!


ஏக்கப் பெருமூச்சுகளால்
முழுதும் நிரம்பிவழிகிறது அறை

சுற்றிலும் காற்றிருந்தும்
சுவாசிக்கத் திணறுகிறது இதயம்

துக்கம் இமை நனைக்க
தூங்க மறுக்கின்றன நினைவுகள்

எனது தனிமையோடு
ஆவேசமாகப் போட்டியிட்டு
செயித்துக் கொண்டே இருக்கிறது

அந்தக்
கடிகாரத்தின் நொடிமுள்........
.

No comments: