Friday, July 30, 2010

'தங்க’க் கூடு...............!



தொடுவானம் வரையிலும்
எட்டுத்திக்கும் பரந்திருக்கும்
கடல் போன்றதொரு
தோப்பு............!

சுற்றிலும் வேலியிட்டு
சுத்தமாய்க் களை பறித்து
அற்புதப் பராமரிப்பில்
ஆயிரம் ஆயிரம்
மரங்கள்……..!!

வேலிக்கு வெளியே
தன்னந்தனியாய்
நிற்கும் ஒற்றைக்
கருவேல மரத்தில்
கூட்டம் கூட்டமாய்க்
கூடுகட்டி இருக்கின்றன
பறவைகள்…………!!!

.

No comments: